Saturday, February 7, 2015

தானத்தின் பலன்கள்


கர்ம வினைகள் தீர தானங்களும் .... பலன்கள்

👉🏿அன்னதானம் செய்தால் பூர்வ ஜென்ம கர்மவினைகள்

தீரும் . பித்ருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.                      

👉🏿ஆடைதானம் செய்தால் தகாத உறவுக் குற்றங்கள்

நீங்கும். பெண்களின் கற்பிற்கு ரட்சையாக இருக்கும்.                         

👉🏿காலணி தானம் செய்தால் பெரியோர்களை நிந்தித்த

பாவம் விலகும்.தீர்த்த யாத்திரை செய்த பலன் கிடைக்கும்.           

👉🏿மாங்கல்ய சரடு தானம் செய்தால் காமக் குற்றங்கள்

அகலும். தீர்க்க மாங்கல்ய பாக்யம் உண்டாகும் .                    

👉🏿குடை தானம் செய்தால் தவறான வழியில் சேர்த்த

செல்வத்தினால் ஏற்பட்ட பாவம் விலகும் .

குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டாகும்.                      

👉🏿பாய் தானம் செய்வதால் பெற்றவர்களை பெரியவர்களை

புறக்கணித்ததால் வந்த சாபங்கள் தீரும். 

கடும் நோய்களுக்கு நிவாரணம் கிட்டும் .

அமைதியான மரணம் ஏற்படும் .                          

👉🏿பசு தானம் செய்தால் இல்லத்தின் தோஷங்கள் விலகும்.

பலவித பூஜைகளின் பலன்கள் கிடைக்கும்.        

👉🏿பழங்கள் தானம் செய்தால் பல ஜீவன்களை வதைத்த

சாபம் தீரும். ஆயுள் விருத்தியாகும்.               

👉🏿காய்கறிகள் தானம் செய்தால் பித்ரு சாபங்கள் விலகும் .

குழந்தைகளின் ஆரோக்யம் வளரும்.       

👉🏿அரிசி தானம் செய்தால் பிறருக்கு ஒன்றுமே தராமல்

தனித்து வாழ்ந்த சாபம் தீரும். வறுமை தீரும்.      

👉🏿எண்ணெய் தானம் செய்தால் நாம் அறிந்தும் அறியாமலும்

செய்த கர்ம வினைகள் அகலும் .கடன்கள் குறையும்.                         

👉🏿பூ தானம் செய்தால் அந்தஸ்து காரணமாக

பிறரை அவமதித்ததால் ஏற்படும் தீவினைகள் நீங்கும்.

குடும்ப வாழ்க்கை சுகமாகவும் , சாந்தமாகவும் அமையும்.                       
  
👉🏿பொன் மாங்கல்யம் தானம் செய்தால் மாங்கல்ய

தோஷங்கள் நீங்கும். திருமண தடங்கல்கள் நீங்கும் .                            

👉🏿நம்மால் முடிந்த தானங்கள் செய்தால் நமக்கு வளமான

வாழ்வு அமைவதோடு , நம் சந்ததிக்கும் நல்ல வளமான

வாழ்வு அமையும்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++

தானத்தின் பலன்கள்

ஒருவர் கொடுக்கும் சிலவகை தானங்களால் மறு பிறவியில்

அவர்களுக்கு கிடைக்கும் பலன்கள் கூறப்பட்டுள்ளது. அவற்றை

இங்கு பார்க்கலாம்.

* கல்விக்கு படிப்பற்கு உதவி செய்தால் முன் ஜென்ம பாவங்கள்

போகும்.

* திருக்கோவில்களை புனரமைப்பதற்கு உதவி செய்வதால், பூரண

ஆரோக்கியம், உத்தமியான மனைவி, நற்குணம் நிறைந்த

குழந்தைகள் கிடைப்பார்கள்.

* தங்கத்தை தானமாக வழங்குவதால், குறைவில்லாத ஐஸ்வரியம்

உண்டாகும்.

* வெள்ளியை தானம் செய்வதால் அழகான சரீரம்

கிடைக்கப்பெறுவர்.

* எள் தானம் செய்வதன் மூலம் பித்ருக்களின் ஆசி, சந்தான

பாக்கியம், சந்ததி விருத்தி போன்ற நலன்கள் கிட்டும்.

* தானியங்களை தானம் செய்தால், குறைவில்லாத அன்னம்

கிடைக்கும்.

* கோமாதா தானம் செய்வதால் உத்தமமான குடும்பத்தின் பிறப்பு,

தாயன்பு வந்தடையும்.

* பிராணிகளின் தாகம், பசியை போக்கினால் நோயற்ற வாழ்வு வந்து

சேரும்.

No comments:

Post a Comment