Tuesday, June 30, 2015

அதிசயங்கள்

அதிசய ஸ்தல வ்ருட்சங்கள் சில நம் கோவில்களில் ....
வேதாரண்யம் = புன்னை காயில் பருப்புகள் கிடையாது
நாகப்பட்டினம் - மாமரம் - இருசுவை கனிகள்
காஞ்சிபுரம் - மாமரம் - நான்கு கிளைகளில் நான்கு வகை சுவைகள்
திருவடிசூலம் - வில்வமரம் - எட்டு பகுதிகள் கொண்ட கூட்டு இலை
திருவெண்காடு - வில்வமரம் -இதில் முள் இருக்காது
திருநெடுங்குளம் -அரளி -மூன்று நிறப் பூக்கள்
அன்பில் - ஆலமரம் - இலைகள் பின்புறமாக மடங்கி இருக்கும் - விழுதுகள் கிடையாது
திருபுவனம் - வேர்ப்பலா - ஆண்டுக்கு ஒரு பழம் கிடைக்கிறது
திருவானைக்காவல் -வெண் நாவல் - வெள்ளையான நாவல் பழம்
திருவதிகை - 3000 நோய்களை தீர்க்ககூடிய மரம்.

Monday, June 29, 2015

அனுமன் நாற்பது Hanuman chalisha in Tamil

அனுமன் நாற்பது Hanuman chalisha in Tamil
அனுமத் தாஸன் ஸ்ரீ நிதி ஸ்ரீனிவாசன
https://docs.google.com/viewer?a=v&pid=forums&srcid=MTIxODQ5NDE1Mjc5NjM4NDgzMDYBMTUzODgxMzczMTc0NzA4NjM1MzUBV000Z1BobzRoRmNKATAuMQEBdjI

ரசன: துலஸீ தாஸ்
தோஹாஶ்ரீ குரு சரண ஸரோஜ ரஜ னிஜமன முகுர ஸுதாரி |
வரணௌ ரகுவர விமலயஶ ஜோ தாயக பலசாரி ||
புத்திஹீன தனுஜானிகை ஸுமிரௌ பவன குமார |
பல புத்தி வித்யா தேஹு மோஹி ஹரஹு கலேஶ விகார் ||
த்யானம்கோஷ்பதீக்றுத வாராஶிம் மஶகீக்றுத ராக்ஷஸம் |
ராமாயண மஹாமாலா ரத்னம் வம்தே அனிலாத்மஜம் ||
யத்ர யத்ர ரகுனாத கீர்தனம் தத்ர தத்ர க்றுதமஸ்தகாம்ஜலிம் |
பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம் மாருதிம் னமத ராக்ஷஸாம்தகம் ||
சௌபாஈஜய ஹனுமான ஜ்ஞான குண ஸாகர |
ஜய கபீஶ திஹு லோக உஜாகர || 1 ||
ராமதூத அதுலித பலதாமா |
அம்ஜனி புத்ர பவனஸுத னாமா || 2 ||
மஹாவீர விக்ரம பஜரங்கீ |
குமதி னிவார ஸுமதி கே ஸங்கீ ||3 ||
கம்சன வரண விராஜ ஸுவேஶா |
கானன கும்டல கும்சித கேஶா || 4 ||
ஹாதவஜ்ர ஔ த்வஜா விராஜை |
காம்தே மூம்ஜ ஜனேவூ ஸாஜை || 5||
ஶம்கர ஸுவன கேஸரீ னன்தன |
தேஜ ப்ரதாப மஹாஜக வன்தன || 6 ||
வித்யாவான குணீ அதி சாதுர |
ராம காஜ கரிவே கோ ஆதுர || 7 ||
ப்ரபு சரித்ர ஸுனிவே கோ ரஸியா |
ராமலகன ஸீதா மன பஸியா || 8||
ஸூக்ஷ்ம ரூபதரி ஸியஹி திகாவா |
விகட ரூபதரி லம்க ஜராவா || 9 ||
பீம ரூபதரி அஸுர ஸம்ஹாரே |
ராமசம்த்ர கே காஜ ஸம்வாரே || 10 ||
லாய ஸம்ஜீவன லகன ஜியாயே |
ஶ்ரீ ரகுவீர ஹரஷி உரலாயே || 11 ||
ரகுபதி கீன்ஹீ பஹுத படாயீ |
தும மம ப்ரிய பரதஹி ஸம பாயீ || 12 ||
ஸஹஸ வதன தும்ஹரோ யஶகாவை |
அஸ கஹி ஶ்ரீபதி கண்ட லகாவை || 13 ||
ஸனகாதிக ப்ரஹ்மாதி முனீஶா |
னாரத ஶாரத ஸஹித அஹீஶா || 14 ||
யம குபேர திகபால ஜஹாம் தே |
கவி கோவித கஹி ஸகே கஹாம் தே || 15 ||
தும உபகார ஸுக்ரீவஹி கீன்ஹா |
ராம மிலாய ராஜபத தீன்ஹா || 16 ||
தும்ஹரோ மன்த்ர விபீஷண மானா |
லம்கேஶ்வர பயே ஸப ஜக ஜானா || 17 ||
யுக ஸஹஸ்ர யோஜன பர பானூ |
லீல்யோ தாஹி மதுர பல ஜானூ || 18 ||
ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீ |
ஜலதி லாம்கி கயே அசரஜ னாஹீ || 19 ||
துர்கம காஜ ஜகத கே ஜேதே |
ஸுகம அனுக்ரஹ தும்ஹரே தேதே || 20 ||
ராம துஆரே தும ரகவாரே |
ஹோத ன ஆஜ்ஞா பினு பைஸாரே || 21 ||
ஸப ஸுக லஹை தும்ஹாரீ ஶரணா |
தும ரக்ஷக காஹூ கோ டர னா || 22 ||
ஆபன தேஜ தும்ஹாரோ ஆபை |
தீனோம் லோக ஹாம்க தே காம்பை || 23 ||
பூத பிஶாச னிகட னஹி ஆவை |
மஹவீர ஜப னாம ஸுனாவை || 24 ||
னாஸை ரோக ஹரை ஸப பீரா |
ஜபத னிரம்தர ஹனுமத வீரா || 25 ||
ஸம்கட ஸேம் ஹனுமான சுடாவை |
மன க்ரம வசன த்யான ஜோ லாவை || 26 ||
ஸப பர ராம தபஸ்வீ ராஜா |
தினகே காஜ ஸகல தும ஸாஜா || 27 ||
ஔர மனோரத ஜோ கோயி லாவை |
தாஸு அமித ஜீவன பல பாவை || 28 ||
சாரோ யுக பரிதாப தும்ஹாரா |
ஹை பரஸித்த ஜகத உஜியாரா || 29 ||
ஸாது ஸன்த கே தும ரகவாரே |
அஸுர னிகன்தன ராம துலாரே || 30 ||
அஷ்டஸித்தி னவ னிதி கே தாதா |
அஸ வர தீன்ஹ ஜானகீ மாதா || 31 ||
ராம ரஸாயன தும்ஹாரே பாஸா |
ஸாத ரஹோ ரகுபதி கே தாஸா || 32 ||
தும்ஹரே பஜன ராமகோ பாவை |
ஜன்ம ஜன்ம கே துக பிஸராவை || 33 ||
அம்த கால ரகுவர புரஜாயீ |
ஜஹாம் ஜன்ம ஹரிபக்த கஹாயீ || 34 ||
ஔர தேவதா சித்த ன தரயீ |
ஹனுமத ஸேயி ஸர்வ ஸுக கரயீ || 35 ||
ஸம்கட கடை மிடை ஸப பீரா |
ஜோ ஸுமிரை ஹனுமத பல வீரா || 36 ||
ஜை ஜை ஜை ஹனுமான கோஸாயீ |
க்றுபா கரோ குருதேவ கீ னாயீ || 37 ||
ஜோ ஶத வார பாட கர கோயீ |
சூடஹி பன்தி மஹா ஸுக ஹோயீ || 38 ||
ஜோ யஹ படை ஹனுமான சாலீஸா |
ஹோய ஸித்தி ஸாகீ கௌரீஶா || 39 ||
துலஸீதாஸ ஸதா ஹரி சேரா |
கீஜை னாத ஹ்றுதய மஹ டேரா || 40 ||
தோஹாபவன தனய ஸங்கட ஹரண – மங்கள மூரதி ரூப் |
ராம லகன ஸீதா ஸஹித – ஹ்றுதய பஸஹு ஸுரபூப் ||
ஸியாவர ராமசன்த்ரகீ ஜய | பவனஸுத ஹனுமானகீ ஜய | போலோ பாயீ ஸப ஸன்தனகீ ஜய |

-------------------------------------------------------------------
அநுமார் அநுக்கிரஹிப்பார்
ஆஞ்சநேய ஸ்வாமியின் விசேஷமே அலாதியானது. அவர் பக்தர்களுக்கு என்னென்ன அநுக்கிரஹம் செய்கிறார் என்பதைப் பார்த்தால், அவருக்கு என்ன விசேஷம் என்று தெரியும்.
புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா |
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹநுமாத் ஸ்மரணாபவேத் ||
ஆஞ்சநேயரை ஸ்மரிப்பவர்களுக்கு அவர் என்னென்ன அநுக்கிரஹிக்கிறார் என்று இந்த ஸ்லோகம் சொல்கிறது. புத்தி, பலம், புகழ், உறுதிப்பாடு, அஞ்சாநெஞ்சம், ஆரோக்கியம் விழிப்பு, வாக்குவன்மை இத்தனையும் தருகிறார் அவர்.
சாதாரணமாக இவையெல்லாம் ஒரே இடத்தில் அமையவே அமையாது. நல்ல புத்திமான் ஆரோக்கியம் இல்லாமல் சோனியாக இருப்பான். பெரிய பலசாலி மண்டுவாக இருப்பான். இரண்டும் இருந்தாலும் கோழையாக, பயந்தாங்கொள்ளியாக இருப்பான். எத்தனை திறமை இருந்தாலும், அவற்றைப் பிரயோகிக்கிற சுறுசுறுப்பு, விழிப்பு இல்லாமல் சோம்பேறியாக இருப்பான். பெரிய அறிவாளியாக இருந்தாலும் தனக்குத் தெரிந்ததை எடுத்துச் சொல்கிற வாக்கு வன்மையில்லாமல் இருப்பான். இந்த மாதிரி ஏறுமாறான குணங்கள் இல்லாமல் எல்லா சிரேயஸ்களையும் ஒரே இடத்தில் பொழிகிறார், ஆஞ்சநேயர்.
இதற்குக் காரணம், சாதாரணமாக நாம் ஒரே இடத்தில் சேர்ந்து பார்க்காத குணங்கள், சக்திகள் அத்தனையும் அவரிடமே பூரணமாக ஒன்று சேர்ந்திருக்கின்றன. நாம் எதிரெதிர் குணங்கள் என்று நினைப்பவைக்கூட, அவரிடம் ஸ்வபாவமாகச் சேர்ந்திருக்கின்றன. உதாரணமாகப் பெரிய பலசாலிக்கு விநயம் இருக்காது. பெரிய புத்திசாலிக்கு அகங்காரமில்லாத பக்தி இராது. ஆஞ்ஜநேயரோ தேக பலம், புத்தி பலம் இவற்றைப் போலவே விநயம், பக்தி இவற்றிலும் முதலாக நிற்கிறார். மகா சக்திமானாக இருந்தும், அத்தனை சக்தியும் ராமன் போட்ட பிச்சை என்ற அடக்கத்தோடு தனக்கு ஒரு பதவியும் கேளாமல் ராமதாஸனாகவே இருந்தார். அப்படி அடிமையாக இருந்ததாலேயே நிறைந்து இருந்தார். பக்தி இருக்கிறவர்களுக்கேகூட அதில் ஞானத்தில் தெளிவு இல்லாமல் மூடபக்தியாகவோ, முரட்டுபக்தியாகவோ இருப்பதுண்டு. ஞானமும் பக்தியும் வேறு வேறு என்றே அவர்கள் சண்டைகூடப் போட்டுக் கொள்வார்கள். ஆஞ்சநேயரோ ராமச்சந்திர மூர்த்தியின் பரமபக்தராக இருக்கும்போதே, பரமஞானியாகவும் இருந்தார். எப்படி தக்ஷிணாமூர்த்தி ஸநகாதி முனிவர்களை முன்னிட்டு உபதேசம் செய்கிறாரோ, அப்படியே ஸ்ரீ ராமன் ஆஞ்சநேய ஸ்வாமியை முன்னால் வைத்துக் கொண்டு ஞானோபதேசம் செய்கிறார் என்று 'வைதேஹீ ஸஹிதம்' சுலோகம் சொல்கிறது. அர்ஜுனனின் தேர்க்கொடியில் இருந்துகொண்டு கீதோபதேசத்தை நேரிலேயே கேட்டவர் அவர். பைசாச பாஷையில் கீதைக்குத் தத்துவமயமான ஒரு பாஷ்யம் இருப்பதாகவும், அது ஆஞ்சநேயர் செய்தது என்றும் சொல்வார்கள். ஒன்பது வியாகரணமும் தெரிந்த 'நவ வ்யாகரண வேத்தா' என்று ராமரே அவரைப் புகழ்கிற அளவுக்குப் பெரிய கல்விமான். ஆனாலும் புத்திப் பிரகாசம், சக்திப் பிரபாவம் எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு பக்தியிலேயே பரமானந்தம் அநுபவிக்கிறார்.
பக்தி என்பதால் லோக காரியத்தைக் கவனிக்காதவர் அல்ல. மகாபௌருஷத்தோடு போராடி அபலைகளை ரக்ஷித்தவர்களில் அவருக்கு இணை இல்லை. லோக சேவைக்கு அவரே உதாரணம். (ideal)
ஞானத்தில் உச்சநிலை, பலத்தில் உச்சநிலை, பக்தியில் உச்சநிலை, வீரத்தில் உச்சநிலை, கீர்த்தியில் உச்சநிலை, சேவையில் உச்சநிலை, விநயத்தில் உச்ச நிலை இப்படியெல்லாம் ஒன்று சேர்ந்திருக்கிற ஸ்வரூபம் ஒன்று உண்டு என்றால் அது ஆஞ்சநேய ஸ்வாமிதான்.
இதெல்லாவற்றுக்கும் மேலாக அவருடைய பிரம்மச்சரியத்தைச் சொல்ல வேண்டும். ஒரு க்ஷணம்கூடக் காமம் என்கிற நினைப்பே வராத மகா பரிசுத்த மூர்த்தி அவர். தனக்கென்று எதுவுமே நினைக்காதவர். ஒரு காமனையும் இல்லாமல் ராமனுக்கு சேவை செய்தே நிறைந்துவிட்டார்.
அவரை நம் சீமையில் பொதுவாக 'ஹநுமார்' என்போம். கன்னடச் சீமையில் அவரே 'ஹநுமந்தையா'. சித்தூருக்கு வடக்கே போய்விட்டாலல் ஆந்திரா முழுவதும் 'ஆஞ்சநேயலு' என்பார்கள். மகாராஷ்டிரம் முழுக்க 'மாருதி, மாருதி' என்று கொண்டாடுவார்கள். அதற்கும் வடக்கில் 'மஹாவீர்' என்றே சொல்வார்கள்.
ஆஞ்சநேயருக்கு ஈடு கிடையாது. அவரை ஸ்மரித்த மாத்திரத்தில் தைரியம் வரும். ஞானம் வரும். காமம் நசிந்துவிடும். பரம விநயத்தோடு பகவத் கைங்கரியம் செய்துகொண்டு எல்லோருக்கும் நல்லது செய்வோம்.
'ராம், ராம்' என்று எங்கெங்கே சொல்லிக் கொண்டிருந்தாலும், ரகுநாத கீர்த்தனம் எங்கே நடந்தாலும், அங்கெல்லாம் நம் கண்ணுக்குத் தெரியாமல் ஆஞ்சநேயர் தாரை தாரையாக ஆனந்த பாஷ்பம் கொட்டிக்கொண்டு நின்று கேட்கிறார்.
இந்தக் காலத்தில் நமக்கு மற்ற எல்லா அநுக்கிரஹங்களோடு, முக்கியமாக அடக்கமாக இருக்கற பண்பு ரொம்பவும் அவசியப்படுகிறது. எத்தனை வந்தாலும் போதாமல் இப்போது, நாம் உயர உயரத் துள்ளிக்கொண்டேயிருக்கிறோம். இதனால் புதுப்புது அதிருப்திகளை, குறைகளைத்தான் உண்டாக்கிக் கொள்கிறோம். துள்ளாமல் அடங்கிக் கிடந்தால்தான் ஈசுவரப் பிரஸாதம் கிடைக்கும். அதுதான் நிறைந்த நிறைவு. நமக்கு ஆச்சநேயர் அநுக்கிரகம் பண்ண வேண்டும்.
அவரைப் பிரார்த்திப்பவர்களுக்கு ஒரு குறையும் இல்லை. லோகம் முழுவதும் தர்மம் பரவியிருக்க அவரையே பிரார்த்தனை பண்ணுவோம். அவருடைய சகாயத்திலேயே ராவணாதிகள் தோற்று ராமராஜ்யம் ஏற்பட்டது. அர்ஜுனனின் தேர்க்கொடியில் அவர் இருந்த விசேஷத்தால் பிறகு தர்மராஜ்யம் ஏற்பட்டது. பிற்காலத்தில் நம் தர்மம், பக்தி எல்லாம் நசிந்தபோது ஆஞ்சநேய அவதாரமாக ஸமர்த்த ராமதாஸ் ஸ்வாமி தோன்றித்தான் சிவாஜி மூலம் மறுபடி தர்ம ஸம்ஸ்தாபனம் செய்தார். இன்னும் சகல தேசங்களிலும் தர்மமும் பக்தியும் ஏற்பட அவர் அநுக்கிரஹம் வேணும். நாம் மனமுருகிப் பிரார்த்தித்தால் இந்த அநுக்கிரஹத்தைச் செய்வார்.

ஆஞ்ஜநேய ஸ்வாமின: ஜெய் 



கிரிவலம்

கிரிவல நோக்கம்
************************
* நிலவின் ஒளிக்கு சில அபூர்வ ஆற்றல்கள் உண்டு. பயிர், செடி, கொடி, மூலிகைகள் செழிப்பாக வளர்வதற்கு தேவையான சக்தியை அது தரும்.
* நிலவொளி நம் மீது பட்டால் அறிவு பலப்படும். மனக்குழப்பம் நீங்கும். மற்றைய நாளை விட தெய்வீக சக்தி மிக்க மலைகளுக்கு
பவுர்ணமியில் சக்தி அதிகரிக்கும்.
* பவுர்ணமி கிரிவலத்தால் தெய்வ அருள், மூலிகைக் காற்றால் உடல்நலம், நிலவொளியால் மனத்தெளிவு உண்டாகிறது. வலம் வருபவர்கள் இறைநாமத்தை உச்சரித்தபடி அமைதியாக வந்தால் பலன் இரட்டிப்பாகும். பவுர்ணமி பூஜை பெண்களுக்கு அதிக பலன்களைத் தரக்கூடியது. திருமணமான பெண்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும்,
* திருமணமாகாத பெண்கள், திருமணம் கை கூடவும் பவுர்ணமி பூஜை செய்யலாம்.
* சித்ரா பவுர்ணமி தினத்தன்று அம்மனுக்கு பூப்போட்ட பட்டாடை சார்த்தி வழிபடுவது நல்லது. மஞ்சள் கலந்த சாதம், பானகம், ஏலம்,
கிராம்பு, பச்சைக் கற்பூரம் சேர்ந்த தாம்பூலம் கொடுத்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
திருவண்ணாமலை லிங்க தரிசனத்தின் பயன்கள்
*******************************************************************
* திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் வழியில் முதலில் தோன்றுவது இந்திரலிங்கம். இந்தலிங்கம் கிழக்கே பார்த்து
அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு நீண்ட ஆயுளும் பெருத்த செல்வமும் வழங்கும்.
* இரண்டாவது லிங்கம் அக்னிலிங்கம். இந்த லிங்கம் தென்கிழக்கு திசையை நோக்கியுள்ளது. வாழ்க்கையில் வரும் இடஞ்சல்களை
அகற்றும் சக்தியுள்ளது.
* மூன்றாவது லிங்கமாக அமைந்துள்ள லிங்கம் எமலிங்கமாகும். இந்த லிங்கம் தெற்கு திசையை நோக்கியுள்ளது எமதர்மனால் நிறுவப்பட்ட லிங்கம். இது செவ்வாய் கிரகத்திற்கு உட்பட்ட லிங்கம். இதை வேண்டுபவர்கள் பண நெருக்கடி இல்லாமல் சந்தோஷமாக வாழலாம்.
* நான்காவதாக உள்ள லிங்கம் நிருதி லிங்கம். இதன் திசை தென்கிழக்காகும். இதனுடைய கிரகம் ராகுவாகும். இதை வேண்டும் பக்தர்கள் நிம்மதியாக பிரச்னைகளின்றி வாழலாம்.
* ஐந்தாவதாக உள்ள லிங்கம் வருண லிங்கம். இதற்குரிய திசை மேற்கு. மலைதரும் வருணதேவனால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது.
சமூகத்தில் முன்னேற்றமடையவும் கொடிய நோய்களிலிருந்து தப்பிக்கவும் இந்த லிங்கத்தை பக்தர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
* ஆறாவதாக உள்ள லிங்கம் வாயு லிங்கம். இந்த லிங்கம் வடமேற்கு திசையை நோக்கியுள்ளது. வாயு பகவானால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. இந்த லிங்கத்தை வழிபட்டு வந்தால் இருதயம், வயிறு, நுரையிரல், மற்றும் பொதுவாக வரும் நோய்களிலிருந்து காத்துகொள்ளலாம்.
* ஏழாவது லிங்கம் குபேர லிங்கம். வடதிசையை நோக்கியுள்ள இந்த லிங்கம் குருவை ஆட்சி கிரகணமாக கொண்டுள்ளது. பக்தர்கள் செல்வ செழிப்புடன் திகழ இந்த லிங்கத்தை பிரார்த்தனை செய்ய வேண்டும்.
* கடைசி லிங்கம் எசானிய லிங்கம். வடகிழக்கை நோக்கியுள்ள இந்த லிங்கம் எசானிய தேவரால் நிறுவப்பட்டது. புதன் கிரகம் இந்த லிங்கத்தை ஆட்சி செய்கிறது. இந்த லிங்கத்தை வழிபட்டால் பக்தர்கள் மன அமைதியுடனும், அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறுவார்கள்.
திருவண்ணாமலை கிரிவலத்தில் பலவித தரிசனங்கள்
***************************************************************************
* எமலிங்கத்தின் வாசலில் நின்று அண்ணாமலையை தரிசிக்க வேண்டும். இதற்கு ஒளதும்பர தரிசனம் என்றுபெயர். இந்த தரிசனம், நமக்குக் கிடைக்கும் மாபெரும் செல்வத்தை நன்முறையில் பயன்படுத்துவதற்கான தீர்க்காயுளைப் பெறவைக்கும்.
* அப்படிப் பெற்றப்பின்னர், கிரிவலத்தைத் தொடரவேண்டும். கிரிவலப்பாதையில் செங்கம்சாலையிலிருந்து வலது புறம் திரும்பியதும் அண்ணாமலையை தரிசிக்க வேண்டும்.இப்படிதரிசனம் செய்வதற்கு பரஞ்ஜோதி திருமுகதரிசனம் என்று பெயர். இந்த தரிசனம் செய்யும்போதே நமக்கு தகுதியிருந்தால், பலவிதமான சூட்சும காட்சிகளைக் காணமுடியும்.
* குபேரலிங்கத்தின் வாசலிலிருந்து திருவண்ணாமலையை தரிசிக்க வேண்டும். இதற்கு வைவஸ்வத லிங்கமுகதரிசனம் என்று பெயர். அஷ்டமுக திக்கு தரிசனங்களில் இது மிகவும் முக்கியமான தரிசனம் ஆகும். தொடர்ந்து வந்து, பூதநாராயணப் பெருமாளிடம் கிரிவலத்தை முடிக்க வேண்டும். பூதநாராயணப் பெருமாளிடம் நமதுப் பொருளாதாரப் பிரார்த்தனைகளை வைக்க வேண்டும்.இங்கிருந்தும், திருவண்ணாமலையை தரிசிக்க வேண்டும். இந்த தரிசனத்திற்கு சத்தியநாராயண தரிசனம் என்றுபெயர்.
கிரிவல பலன்கள்
************************
ஒவ்வொரு கிழமையும் வலம் வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம்.நம்முடைய பாவங்கள் தொலைய ஒரே வழி கிரிவலம்தான்.
* ஞாயிறு - உடல் பிணி போகும். சிவகதி கிடைக்கும்
* திங்கள் - நிறைய ஆற்றல் கிடைக்கும்.
* செவ்வாய் - வறுமை நீங்கும், பிறவிப் பிணி நீங்கும்.
* புதன் - எல்லா வித்தைகளிலும் மேம்பாடு அடையலாம்.
* வியாழன் - ஞானம் கூடும்.
* வெள்ளி - விஷ்ணு பதம் பெறலாம்.
* சனி - நவக்கிரகங்கள் கொடுக்கும் நற்பலன் அடைவார்கள்.
கிரிவலம் வரும் முறை
*********************************
* நீராடி தூய ஆடை அணிந்து, விபூதி, குங்குமம், இட்டுக் கொண்டுதான் கிரிவலம் வர வேண்டும். ஆண்கள் சட்டை அணியாது வேட்டியும், இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டும் வலம் வரலாம். வேட்டியுடன் மட்டும் கிரிவலம் வரக்கூடாது.
* பெண்கள் மெட்டி, வளையல், நெற்றியில் குங்குமம் அணிந்து வலம் வர வேண்டும். மிதியடி அணிந்து கொண்டு வலம் வரக்கூடாது. ஏனென்றால் அடிக்கு ஆயிரத்தெட்டு லிங்கம் உள்ளது என்பார்கள். குடை பிடித்துக்கொண்டு வலம் வரக்கூடாது. கையை வீசிக் கொண்டு வேக வேகமாக வலம் வரக்கூடாது.
* பேசிக்கொண்டும், சிரித்துக் கொண்டும் குறிப்பாக தொலைக்காட்சி தொடர்கள் பற்றி தேவை இல்லாமல் பேசிக் கொண்டும், வேடிக்கை பார்த்துக் கொண்டும், வழியில் எல்லா இடங்களில் அமர்ந்து கொண்டும் வலம் வரக்கூடாது. மனம் முழுக்க ஈசன் நினைவு மட்டுமே இருக்க வேண்டும். வேறு பல நினைவுகளுடன் வரக்கூடாது.
* காம எண்ணங்களுடன் வலம் வரக்கூடாது. குறுக்கும், நெடுக்கும் நடந்து வலம் வரக்கூடாது. போதைப் பொருளை உட்கொள்ளக் கூடாது. சிகரெட், பீடி குடிக்கக் கூடாது. புலால் உண்ட அன்றும், போதைப் பொருட்கள் பயன்படுத்திய தினத்திலும் கிரிவலம் வரக்கூடாது. தூரம் அதிகமாக உள்ளதே என்று மலைத்து, இன்னும் எவ்வளவு தூரம் உள்ளது.
* எப்படி நடக்கப் போகிறோம் என்று மலைப்புடன் வலம் கூரக்கூடாது. யாருடனும் பேசாது அஞ்செழுத்தை மனதிற்குள் கூறியபடி வலம் வருதல் நல்லது. மனம் முழுவதும் சிவன் மீது நாட்டம் கொண்டிருக்க வேண்டும். கை வீசிக் கொண்டு செல்லாமல் நிதானமாக நடந்து வலம் வர வேண்டும். இது பிராணாயாமம் செய்வதற்கு சமமான பலன் கிடைக்கும்.
* இன்னும் கூறப்போனால் ஒரு கர்ப்பிணிப் பெண் போல் மெல்ல அடி எடுத்து வைத்து நடக்க வேண்டும். இது ஒட்டப் பந்தயமோ, நடைப்பந்தயமோ அல்ல எவ்வளவு வேகமாக நடந்தோம் என்பதை விட எவ்வளவு மெதுவாக நடந்தோம் என்பதிலேயே பலன் உள்ளது. கிரிவலம் வரும்போது சுற்றுச் சாலையின் இடது ஓரமாக நடக்க வேண்டும்.
* மலையை பார்த்துக் கொண்டே நடக்க வேண்டும். அப்போது ஓம் நமச்சிவாய என்று தவறாமல் உச்சரிக்க வேண்டும். கையில் ஊதுபத்தி மற்றும் தூபம் எடுத்துக் கொண்டு சென்று அதன் மூலம் ஆராதித்து வழிபடுவது சிறப்பு. திருமணம் ஆகாதவர்கள், திருமணம் ஆனவர்கள் ஆகியோர் துறவியர்க்குரிய காவி ஆடை அணிந்து வலம் வரக்கூடாது.
* பிராணிகளுக்கோ, பசுக்களுக்கோ, பிச்சை கேட்போருக்கோ, வலம் வரும்போது சிறு பிரசாதம் அல்லது வாழைப்பழம், பிஸ்கட் ஆகியவற்றை தருதல் நலம். வலம் வரும்போது முக்கிய தூபம் காட்டி சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குதல் மிகவும் நல்லது. அடிக்கு ஆயிரத்தெட்டு லிங்கங்கள், அடித்துகள் பட்ட இடம் எல்லாம் கோடாணு கோடி லிங்கங்கள் இருப்பதால் மலையை நோக்கி நின்று கொண்டு சிறுநீர் கழிக்கக்கூடாது.
* வாகனத்தால் வலம் வரக்கூடாது. திருவண்ணாமலையில் ஏமாற்றுதல், நம்பிக்கை துரோகம் செய்தல் கூடாது. கிரிவலத்தின்போது அவரவர் பித்ருக்களை வணங்கி அவர்களது ஆசியுடன் அவரவர் குல தர்மப்படி ஆடை அணிந்து, வீண் பேச்சுக்களை அறவே தவிர்த்து அருணாசல இறை நாமம் போற்றிப் பாடி, துதித்து கர்ப்பிணிப் பெண் நடப்பது போல் மெதுவாக நடந்து வலம் வருதல் மிகவும் விசேஷம். மலையை ஒட்டிய பாதையைத் தவிர்த்து இடது புறமாக செல்ல வேண்டும்.
திருவண்ணாமலை கிரிவலம் : 
சித்தர்களின் அருளை நாடியோர் தொண்டர்கள்'s photo.


====================================
சித்ரா பெளர்ணமி - மே 03 
*************************************
மாதம்தோறும் முழு நிலவான பவுர்ணமி சத்திய நாராயணப் பெருமாள் பூஜையாகக் கொண்டாடப்படும். சித்திரை மாதம் வரும் சித்ரா பெளர்ணமி அன்று மேலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் செய்யப்படும் சத்ய நாராயண பூஜை பல மடங்கு நன்மை அளிக்கக்கூடியது என்பது நம்பிக்கை.
சத்ய நாராயண பூஜை
*******************************
ஸ்ரீ மன் நாராயணனே சத்ய நாராயணன். வாழ்வும் வளமும் மங்காத செல்வமும் பெற சத்ய நாராயண பூஜை செய்யலாம். எளிதான இந்த பூஜையை இல்லத்திலேயே செய்துவிடலாம். அருகில் உள்ள கோயில்களில் இப்பூஜை செய்யப்பட்டால் கலந்து கொண்டு நலம் பெறலாம். பொதுவாக இந்தப் பூஜை செய்யப்படுவதே பதினாறும் பெற்று பெருவாழ்வு அடையத்தான்.
பூஜையை விடியற்காலை செய்வதே நல்லது. ஆனால் சத்திய நாராயண பூஜையை மாலையில் பவுர்ணமி நிலவு எழுந்தபின் தான் செய்வார்கள். சத்ய நாராயணன் படத்தை வைத்து, நெய் விளக்கேற்றி பூஜையைத் தொடங்க வேண்டும். பால் பாயசம், கோதுமை அப்பம், ராவா கேசரி ஆகியவற்றை நிவேதனம் செய்ய வேண்டும்.
பூஜை தொடங்குவதற்கு முன்பே கலந்துகொள்பவர்கள் வந்துவிட வேண்டும். பின்னர் இறுதிவரை அங்கேயே இருந்து பிரசாதத்தைப் பெற்று அங்கேயே சிறிது உண்டுவிட்டுப் பின்னர் இல்லத்துக்கும் எடுத்து வரலாம்.
இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால், குடும்பத்தில் கஷ்டங்கள் குறையும், செல்வ வளம் பெருகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும். பெற்றோருக்கு நற்பெயர் வாங்கித்தரும் குழந்தைகள் பிறக்கும் என்கிறது கந்த புராண சுலோகம்.
சித்ரா பவுர்ணமி விரதமிருக்கும் முறை
*******************************************************
சித்ரா பவுர்ணமி விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். எமதர்மனின் உதவியாளர் சித்திரகுப்தன் நம் பாவக்கணக்குகளை வைத்து நம்முடைய பூர்வ ஜென்ம கர்மாவுக்கேற்ப பலன்களை வழங்குகிறார். சித்ரா பவுர்ணமியன்று கீழ்க்காணும் சக்தி வாய்ந்த விரத முறையை சித்ர குப்தனை நினைத்து மேற்கொண்டால் நல்ல பலன் கிடைப்பது உறுதி. நாளை 3.5.2015 அன்று சிறப்பு வாய்ந்த சித்ரா பவுர்ணமி வருகிறது. அன்றைய தினம் இந்த விரதத்தை மேற்கொண்டு வாழ்வில் வளம் பெறுங்கள்.
சித்ரா பௌர்ணமி அன்று காலையில் பூஜை அறையில் விநாயகர் படத்தை வைத்து அருகில் ஏடும் எழுத்தாணியும் (நோட்புக், பேனா ) வைத்து, ஒரு பேப்பரில் ”சித்திர குப்தன் படியளப்பு” என்று எழுதி வைக்க வேண்டும்.
சர்க்கரை பொங்கல் அல்லது வெண் பொங்கலை ஒரு தலை வாழை இலையில் வைத்து படைக்க வேண்டும். படையலுடன் மாங்காய், தேங்காய், பலவகை காய்கறிகள், பருப்புகள் , தயிர் கடையும் மத்து, உளி போன்றவற்றையும் வைக்க வேண்டும்.
தொடர்ந்து தேங்காய் உடைத்து தீப ஆராதனை காட்டி வழிபட்டு பொங்கலை எல்லோருக்கும் தானமாகக் கொடுக்க வேண்டும். இந்த வழிபாட்டின்போது,
சித்ரா குதம் மஹா ப்ராக்ஜம் லேகணீ பத்ர தாரிணம் சித்ர ரத்னாம் பரதாரம் மத்யஸ்தம் சர்வ தேஹினாம்”
என்ற மந்திரத்தைக் கூறி சித்ர குப்தனை வழிபட வேண்டும் என்பது ஐதீகம். சித்தரகுப்த வழிபாடு- சித்திரா பௌர்ணமி வழிபாடு "சித்திரைப் பாவையே உன்றன் வருகையால் தரணி செழிக்க வேண்டும்! செகமே வளம் பெற நன்மழை பெய்தென்றும் தீமைகள் நீங்க வேண்டும்'' சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தின் உச்சத்தில் இருக்கும் பவுர்ணமியானது எமதர்மனின் கணக்காளரான சித்ரகுப்தருக்கு மிகவும் புனிதமானது"சித்ரகுப்த'' என்ற வடமொழிச் சொல்லுக்கு `மறைந்துள்ள படம்' என்பது பொருள்.
சித்திரகுப்தன் நமது பாப புண்ணியங்களைக் கணக்கிடும் ஒரு தேவன். சித்ரகுப்தனைத் திருப்தி செய்வதற்காக விரதம் இருந்து சித்ரகுப்தரை வழிபட வேண்டும்

மகான்கள்

மகான்களை அறிவோம் 01 : கண்ணப்ப சுவாமிகள்
*********************************************************************
சித்தர்கள் பிறப்பதும் இல்லை; இறப்பதும் இல்லை; வருவதுமில்லை; போவதுமில்லை என்று திருமூலர் கூறியதுபோல் கண்ணப்பசாவாமிகள் எங்கே பிறந்தார்? அவர் யார்? எப்படிச் சென்னைக்கு வந்தார் என்று எவருக்கும் தெரியவில்லை. பல அவதார புருஷர்கள் ஜீவ சமாதி கொண்ட புண்ணிய பூமியான திருவொற்றியூர்க் கடற்கரையில் உடலில் எந்தவித ஆடையுமின்றிச் சடை முடியும், நீண்ட தாடியுமாக அலைந்துகொண்டிருந்தார் ஒருவர். அவர் ஒரு சித்தர் என்பதை அப்போது எவரும் அறிந்திருக்கவில்லை.
அவரைச் சித்தம் கலங்கியவர் என மக்கள் துரத்தியதால் அலைந்து திரிந்து இறுதியில் புழலில் உள்ள காவங்கரைக்கு வந்து சேர்ந்தார். அவரைக் கண்ட சித்ராம்பாள் என்பவர் ஒரு வேட்டியை எடுத்து வந்து அவரது இடுப்பில் கட்டிவி்ட்டார். பின்னர் அவரது தாடியையும் சடை முடியையும் மழிப்பதற்கு ஏற்பாடுசெய்தார். அவரது முடியை மழிப்பதற்கு வந்தவர் அருவருப்பு அடைந்தார். ஆனால் சாமிகளின் தலையில் இருந்து நறுமணம் வீசியது. அதைக் கண்டு வியப்படைந்த மக்கள் அவரை ஒரு மகான் என்று அறிந்து கொண்டனர்.
அப்போது முதல் காவாங்கரையிலேயே தங்கிவிட்டார் அவர். ஒரு கையில் சட்டி மற்றொரு கையில் தடியுடன் யாசகம் எடுத்து வாழ்ந்து வந்தார். அதனால் அவரைச் சட்டிச் சாமி என்று மக்கள் அழைத்தனர். அவருக்கு உடை வழங்கிய சித்ராம்பாளும் அவருடைய கணவரும் ‘கண்ணா’ என்று அன்புடன் அழைத்ததால் கண்ணப்பசாமி என்றும் அவர் அழைக்கப்பட்டார்.
நடமாடக் கோயில் நம்பர்க்கொன் றீயில்
படமாடக் கோயில் பகவற்க தாமே
என்ற திருமூலரின் கூற்றுப்படி பக்தர்களுக்குச் செய்யும் உதவி இறைவனைச் சென்றடைய உதவும் என்று கண்ணப்பசாமி நம்பினார். தன் கையிலிருக்கும் சட்டியை அட்சய பாத்திரமாக மாற்றினார். உணவை எடுக்க எடுக்க அது பெருகிய அதிசயத்தை, இன்றும் பலர் வழி வழியாகப் பேசி வருகின்றனர்.
கண்ணப்பசாமிகள் தமது பக்தர்களின் குறைகளை, அவர் சொல்லாமலேயே தீர்த்து வைத்துள்ளார். அவரது தீவிர பக்தரான பொற்கொல்லர் ஒருவர் தமது வாடிக்கையாளர் நகை செய்வதற்குக் கொடுத்த பணத்தைக் குடும்பச் செலவுக்காகப் பயன்படுத்திவிட்டதாகக் குற்ற உணர்வுடன் வந்து அவரிடம் முறையிட்டார். சாமிகள் தனது பக்தனின் கையில் மூன்று கூழாங்கற்களைக் கொடுத்தார். அவை தங்கக் கட்டிகளாக மாறி ஜொலித்தன.
நவகண்ட சித்தர்
***********************
வியாசர்பாடியைச் சேர்ந்த கண்ணையா பாகவதர் என்பவர் நள்ளிரவு 12 மணிக்குச் சாமிகளைப் பார்க்கச் சென்றார். அப்போது சாமிகளின் அவயங்கள் அனைத்தும் தனித்தனியாகக் கிடந்ததைப் பார்த்துப் பயந்து ஓடிவிட்டார். இப்படி அவயங்களைத் தனித்தனியாகப் பிரித்துவிட்டு யோகம் செய்வதை ‘சொரூப சித்து’ என்றும் ‘நவ கண்ட சித்து’ என்றும் போகர் குறிப்பிடுகிறார்.
இப்படிப் பல அற்புதங்களைப் புரிந்த கண்ணப்பசாமிகள் தாம் சமாதி அடையப்போகும் தருணத்தை முன்பே அறிந்தார். தமக்கான சமாதிக் குழியைத் தோண்டப் பணித்தார். தாம் சமாதி அடைந்து 41 நாள்களுக்குப் பிறகுதான் தன்னைப் புதைக்க வேண்டும் என அவரது பக்தர்களிடம் கூறினார். 1961-ம் ஆண்டு பிலவ வருடம், புரட்டாசி மாதம் மகாளய அமாவாசையன்று சோமவாரம், அஸ்த நட்சத்திரத்தில் சமாதிக் குழிக்குள் இறங்கிச் சின் முத்திரையுடன் பத்மாசனத்தில் அமர்ந்தார்.
சமாதிக் குழியைப் பலகையால் மூடி 41 நாளும் விளக்கேற்றி வழிபட்டனர் பக்தர்கள். பின்னர் பலகையை அகற்றிவிட்டுச் சமாதியை மூடினர். சாமிகள் சொன்னதுபோல சமாதியின் மீது விநாயகர் சிலையைப் பிரதிஷ்டை செய்தனர். பின்னால் காஞ்சிப் பெரியவரின் ஆலோசனையின் பேரில் கண்ணப்பசாமிகளின் கற்சிலை ஸ்தாபிக்கப்பட்டது. தற்போது சிலை சமாதியின் முன்புறம் வைக்கப்பட்டு சமாதி மீது லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
புழல் செல்லும் சாலையிலிருந்து காவாங்கரையினுள் நுழைந்து சிறிது தூரம் சென்று வலது புறம் சென்றால் கண்ணப்பசாமிகளின் ஜீவசமாதியை அடையலாம். அங்கே சிவமாக வீற்றிருக்கும் சித்தரை உணர்ந்து கொண்டால் அவர் நம்முடன் பேசுவார்; துன்பங்களுக்குத் தீர்வு கூறுவார்.


---------------------------------------------------------------------------------------------------------
மகான்களை அறிவோம் 02 : கற்றங்குடி மௌனகுரு சுவாமிகள்
***************************************************************************************
அருப்புக்கோட்டைக்கு அருகிலுள்ள கற்றங்குடியில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த குமரவேல் என்ற வேல்சாமி ரெட்டியார், தமது 55 வயதில் இந்த உலகியல் வாழ்வைத் துறந்து ஞானத்தைத் தேடிப் புறப்பட்டார் .
திருப்பரங்குன்றத்திற்கு அருகிலுள்ள திருக்கூடல் மலை என்ற காகபுஜண்டர் மலை அவரை ஈர்த்தது . அங்கே அவருக்காக ஒரு சித்தர்களின் கூட்டமே காத்திருந்தது. அவர்களின் குரு கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் வேல்சாமியை வரவேற்றுத் தமது சீடராக ஏற்றுக்கொண்டார்.
சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளிடம் தீட்சை பெற்ற வேல்சாமி அந்த மலையின் மீதே கடுந்தவம் மேற்கொண்டார்.
“பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோல்
சீவனுக் குள்ளே சிவமனம் பூத்தது”.
அவர் தேடிய ஞானம் கிடைத்தது . அட்டமா சித்திகளையும் பெற்றார்.அதன் பிறகு, மதுரையில் லாலாத்தோப்பு லெட்சுமிநாராயணன் கோயில் புட்டுத்தோப்பு சாமியார் மடம் ஆகிய இடங்களில் தங்கி யோகப் பயிற்சிகள் செய்துவந்தார். இரவினில் இரு மரங்களுக்கிடையே ஒற்றை விரல் அளவுள்ள கயிற்றைக் கட்டி அதன் மீது படுத்து உறங்குவார் . சில சமயங்களில் நள்ளிரவில் மதுரை தத்தனேரி மயானத்திற்கு அருகிலுள்ள தோப்பில் தரையில் ஆசனமிட்டு அமர்ந்து யோக சாதனை மூலம் ஒரு பனைமர உயரத்திற்குச் சென்று அங்கு தியானம் செய்துவிட்டுக் கீழே வருவாராம் .
துண்டைக் கயிறாக்கியவர்
*************************************
தினமும் பேச்சியம்மன் படித்துறை வழியாக வைகை ஆற்றுக்குச் சென்று, அங்குள்ள உறை கிணற்றில் குளித்துவிட்டு வருவார் . அந்தக் கிணற்றிலிருந்து நீர் இறைப்பதற்காகக் கயிற்றுடன் கூடிய சிறு வாளி கிடைக்காததால் சுவாமிகள் தமது துண்டை எடுத்து வாளியில் கட்டிக் கிணற்றினுள் விட்டார்.
அந்தத் துண்டு கயிறு போல் நீண்டு கொண்டே சென்றது. சுவாமிகள் நீர் இரைத்துக் குளித்துவிட்டு ஒன்றுமே நடவாதது போல் சென்றதைக் கண்டு அங்கு குளித்துக் கொண்டிருந்தவர்கள் திகைத்துப் போய்விட்டனர். அவர் செல்லும்போது அவரது தலையில் வெயில் படாமல் ஈரத்துண்டு அவரது தலையின் மீது பறந்தபடி கூடவே செல்லுமாம்.
இந்தக் காலகட்டத்தில் நெல்பேட்டையைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி அலாவுதீன் ராவுத்தருக்கு முடக்குவாதம் ஏற்பட்டுக் கை,கால்கள் செயலிழந்துவிட்டன . அவரது நண்பர் ஒருவர் அவரை ரெட்டி சுவாமிகளிடம் அழைத்துவந்தார். சுவாமிகள் அவருக்குத் திருநீறு மந்தரித்துக் கொடுத்து, மூன்று நாட்களில் சரியாகிவிடும் என்று சைகையில் கூறினார் . ராவுத்தர் அந்தத் திருநீறை நீரில் கலக்கி மூன்று நாட்கள் குடித்ததும் நோய் குணமாகியது . அது முதல் ராவுத்தர் சுவாமிகளின் தீவிர பக்தராக மாறிவிட்டார். தினமும் காலை, மாலையில் சுவாமிகளைத் தரிசித்து திருநீறு பெற்றுத் தமது நெற்றியில் இட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது .
சுவாமிகள் பிறந்த ஊரான கற்றங்குடியிலிருந்து பொதுமக்கள் ஒன்று சேர்ந்து சுவாமிகளுக்கு ஒரு மடாலயம் எழுப்பி அவரை அழைத்து வந்து தங்கியிருக்கச் செய்தனர். அப்போதும் ராவுத்தர் அவர்கள் மதுரையிலிருந்து தினமும் கற்றங்குடிக்கு வந்து சுவாமிகளைத் தரிசனம் செய்துவிட்டுச் செல்வார் .
சொன்ன நாளில் சமாதி
********************************
ஒரு நாள் சுவாமிகள் ராவுத்தரிடம் மூன்று விரல்களைக் காட்டி மூன்று நாளில் தாம் சமாதியாகப் போவதாகக் கூறினார். அதைக் கேட்டு ராவுத்தர் சிறு குழந்தையைப் போல் அழுதாராம் .
சுவாமிகள் கூறியபடி, அட்சய வருடம், ஆனி மாதம், ஏழாம் நாள் 21.06.1926, திங்கட்கிழமை, பூர்வபட்சம், சுவாதி நட்சத்திரத்தில் பத்மாசனத்தில் அமர்ந்து நிர்விகற்ப சமாதியானார் .
அதனை அறிந்த சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள், ஆற்றங்கரை சுவாமிகள், பாளையம்பட்டி ஜமீன்தார் போன்றவர்கள் வந்து சுவாமிகளுக்கு மரியாதை செய்தனர். பின்னர் சுவாமிகளை சமாதிக் குழிக்குள் இறக்கி முறைப்படி அடக்கம் செய்தனர்.
அதன் பிறகு, ராவுத்தர், சுவாமிகளின் ஜீவசமாதியின் மீது ஆலயம் எழுப்ப விரும்பினார். அதற்காகக் கற்குவாரிக்குத் தாமே சென்று கற்கள் பெற்றுவந்தார் . கற்றங்குடி மடாலயத்திலேயே தங்கியிருந்து சுவாமிகளின் ஜீவசமாதியைக் கற்றளியாக்கினார் .
அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பாகப் பூசைகளும் ஆண்டுக்கு ஒரு முறை குரு பூசையைப் பெரும் விழாவாகவும் நடத்தினார். பின்னர் தமது அந்திமக் காலத்தில், தமது சொத்தில் ஒரு பகுதியைச் சுவாமிகளின் மடத்திற்கு எழுதிவைத்து, அறக்கட்டளை ஒன்றையும் ஏற்படுத்தினார் . அவரது காலத்திற்குப் பின் அவரது துணைவியார் திருமதி ஆயிஷா பீவி அவர்கள் அறங்காவலராகப் பொறுப்பேற்று அனைத்து பூசைகளையும் சிறப்பாக நடத்திவந்தார்.
“ சாதி யாவ தேதடா சலந்திரண்ட நீரெலாம்”
“ சாதி பேத மோதுகின்ற தன்மை யென்ன தன்மையே”
என்று சிவவாக்கியர் கூறியது போல் ஓர் இஸ்லாமியக் குடும்பத்தினர் இந்து சமய நெறிகளின் படி நடைபெறும் பூசைகளை எவ்விதக் குறைபாடும் இன்றி நடத்தி வருவது சுவாமிகளின் திருவருள் என்றே கூறலாம்.
பூத உடல் மறைந்தாலும் புகழ் உடல் என்றும் நிலைத்து நிற்கும் என்று திருமூலர் கூறியபடி மதுரை கா.ம. அலாவுதீன் ராவுத்தர் அவர்கள் தம் மனதில் குடிகொண்ட ‘ஸ்ரீமௌன குரு’ என்ற ஸ்ரீமத் ரெட்டி சுவாமிகளுக்கு ஆலயம் எழுப்பிப் பூசித்துவந்ததால், ரெட்டி சுவாமிகளின் ஜீவசமாதியில் ராவுத்தரின் புகைப்படத்தை வைத்துப் பூசித்து வருகிறார்கள் . ஜீவசமாதியில் சிவமாக வீற்றிருக்கும் கற்றங்குடி ரெட்டி சுவாமிகளை நினைக்கும்போது அலாவுதீன் ராவுத்தரின் நினைவும் வருவதே இதற்கு சாட்சியாகும்.

-------------------------------------------------------------------------------------------------
மகான்களை அறிவோம் 03 : அன்னை நீலம்மையார் !
*************************************************************************
சக்தியின் திருவுருவே பேரின்பம்
*********************************************
“அறிவார் பராசக்தி ஆனந்தம் என்பர்
அறிவார் அறிவுரு வாம்அவள் என்பர்
அறிவார் கருமம் அவள்இச்சை என்பர்
அறிவார் பரனும் அவளிடத் தானே”. - நீலம்மையார்
மெய்யுணர்வு பெற்ற ஞானிகள் அன்னை பராசக்தியின் திருவுருவே பேரின்பம் என்பர். ஞானத்தின் திருவுருவும் அவளே, ஞானத்தை அளிப்பவளும் அவளே என்பர் . ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஜந்தொழில்களும் அவளது விருப்பப்படியே நடக்கின்றன .
முழுமுதற் கடவுளாகிய சிவனும் அவளன்றி எதுவும் நடக்காது என அறிந்திருக்கிறான் என்று திருமூலர் கூறுகின்றார். ஆகவே, சக்தியும் சிவனும் ஒன்றே என்று அறிந்தவர்களே ஞானிகளாக இருக்கின்றனர் . அந்தச் சக்தியின் வழிவந்த பெண்களும் சிவத்தை அறிந்து சித்தராக முடியும் என்று நிரூபித்தவர் அன்னை நீலம்மையார் .
குமாரி மாவட்டம், சுசீந்திரத்தை அடுத்துள்ள போத்தியூரில் வள்ளிநாயகம் பிள்ளை, மாலையம்மாள் தம்பதியருக்குப் பிரமாதி ஆண்டு சித்திரை மாதம், 19-ம் நாள் புதன்கிழமை, ஆயில்ய நட்சத்திரத்தில் (30.04.1879),இரண்டாவது மகளாக அன்னை நீலம்மையார் அவதரித்தார் . சிறுவயது முதல் ஆன்மிக நாட்டம் கொண்ட அவர் ராஜராஜேஸ்வரி அம்மனை வழிபட்டு வந்தார்.
அவருக்குப் பதினைந்து வயதாகும்போது, அவரது பெற்றோர் அவரை ராமசாமி பிள்ளை என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தனர் . அவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்தன.
சாந்த சொரூபி
*********************
இல்லற வாழ்வில் ஈடுபட்டிருந்த போதும் அன்னையார் ஆன்மிகத்தில் மிகவும் ஈடுபாட்டுடன் இருந்தார் . அன்பு, கருணை, சாந்தம், பொறுமை ஆகியவற்றின் எடுத்துக்காட்டாக விளங்கிய அவர் மிகக் குறைவாகவே பேசுவாராம், பேசும் போது தனது புடவையின் நுனியை வாயில் வைத்து மறைத்துக் கொண்டு மிகவும் தாழ்ந்த குரலில் பேசுவாராம் .
மூன்று பெண்களுக்கும் திருமணம் செய்து வைத்தபின், மகனுக்குத் திருமணம் செய்ய முயற்சி செய்த போது, மகன் தனக்குத் திருமணம் வேண்டாம், துறவறம் மேற்கொள்ளப் போகிறேன் என்று கூறினாராம் . அவர் தன் அன்னையையு அழைத்துக்கொண்டு கேரளாவிலுள்ள வடகரை என்னும் ஊரில் சித்த சமாஜத்தை நிறுவியிருந்த ஸ்ரீ சிவானந்த பரமஹம்சர் அவர்களின் ஆசிரமத்திற்குச் சென்று தமது விருப்பத்தைக் கூறினார்.
மகனுக்கு அந்த வாய்ப்பு இல்லை என்று கூறிய ஸ்ரீசிவானந்த பரமஹம்சர் அவர்கள் அன்னையைப் பார்த்து, உன்னைத்தான் இறைவன் தேர்ந்தெடுத்திருக்கிறான் என்று கூறினார். அதைக் கேட்ட அன்னையார் தாம் இவ்வுலகில் பிறந்ததன் நோக்கத்தை அறிந்து ஆனந்தக் கண்ணீர் வடித்தார் . அந்த நிமிடமே தாம் அணிந்திருந்த ஆபரணங்களைக் களைந்து விட்டு, வெள்ளை ஆடை அணிந்து துறவறம் பூண்டார் . ஸ்ரீசிவானந்த பரமஹம்சர் அவருக்குத் தீட்சையளித்து உபதேசமும் செய்து வைத்தார் .
தியானம் மற்றும் யோகப் பயிற்சிகள்
***************************************************
மகனைத் துறவியாக்கச் சென்ற அன்னையார் தாமே துறவியாகித் திரும்பியதைக் கண்ட அவரது கணவர், இது இறைவனின் திருவருள் என்று ஏற்றுக்கொண்டு அன்னையாரை வாழ்த்தினார் . அன்னையார் தமது இல்லத்தில் ஒரு தனியறையில் தியானம் மற்றும் யோகப் பயிற்சிகளை மேற்கொண்டார். இருப்பினும் ஏதோ ஒன்று அவரது மனதை உறுத்திக் கொண்டிருந்தது. அவர் பூசித்த ராஜராஜேஸ்வரி அம்மன் அதற்கும் வழிகாட்டினார்.
அம்மனின் உத்தரவின் பேரில் அன்னையார் 1957-ல் வடதிருமுல்லைவாயிலுக்கு வந்து, பல நூறு ஆண்டுகளுக்கு முன் தொண்டைமான் சக்கரவர்த்தியால் கட்டப்பெற்ற அருள்மிகு கொடியிடை நாயகி உடனுறை அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயிலைத் தாரிசத்தார். பல மகான்களால் பாடப்பெற்ற அந்தத் திருத்தலத்திற்கு அருகிலேயே தங்கியிருக்க விரும்பினார் . கிழக்கு மாடவீதியில் அன்பர் ஒருவர் இடம் கொடுத்தார் . அன்னையின் பக்தர்கள் அங்கு குடிசை ஒன்றை அமைத்துக் கொடுத்தனர் . அன்னையார் சில காலம் அங்கு தங்கியிருந்து பக்தர்களின் குறைகளைத் தீர்த்துவைத்தார்.
காற்று மட்டுமே ஆகாரம்
***********************************
பின்னர், அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் ஆலயத்தை அடுத்த வடக்கு மாசி வீதியில், ஈசானிய மூலையில் ஆசிரமம் ஒன்றை அமைத்துக்கொண்டார் . அங்கே ஒரு அறையையும், தியானம் செய்ய ஒரு குழியையும் ஏற்படுத்திக் கொண்டார். அந்தக் குழி நான்கு அடி நீளமும், நான்கு அடி அகலமும், ஐந்து அடி ஆழமும், உள்ளே இறங்கிச் செல்ல மண்ணால் ஆன படிகளும் கொண்டது . அன்னையார் அதில் இறங்கித் தியானம் செய்வதற்கு முன் தமது ஆடைகளைக் களைந்து மேட்டின் மீது வைத்துவிட்டு, ஆடையின்றி உள்ளே அமர்ந்து தியானம் செய்வார் . குழியின் மேட்டில் ஆடைகள் இருந்தால், அன்னையார் தியானம் செய்கின்றார் என்று எவரும் அங்கு செல்ல மாட்டார்கள். அன்னையார் குழிக்குள் இறங்கித் தியானம் செய்யத் துவங்கிவிட்டால் மாதக்கணக்கில் தியானத்தில் ஆழ்ந்துவிடுவார். அப்போது அவருக்குக் காற்று மட்டுமே ஆகாரம்.
பல்வேறு சித்துக்களையும் பெற்றிருந்த அன்னையார் சில சமயங்களில் தமது அவயவங்களைத் தனித்தனியே பிரித்துவிட்டு நவகண்ட யோகத்தில் ஆழ்ந்துவிடுவாராம் .
அன்னையார் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு உபதேசம் செய்வதுண்டு . “உன் மனம் உனக்கு அடங்கினால், உலகம் உனக்கு அடங்கும்” என்பது அவர் அடிக்கடி கூறும் உபதேசங்களில் ஒன்றாகும் .
இந்தப் பூவுலகில் தம்முடைய பிறவிக் காலம் முடிவுற்றதை உணர்ந்த அன்னையார், தாம் இறைவனுடன் ஐக்கியமாகும் நாளை முன்னதாகவே அறிவித்துவிட்டார் . அந்த நாளில் தம்மைத் தியானக் குழிக்குள் இறக்கி மூடிவிடும்படி பக்தர்களிடம் தெரிவித்தார் .
அதன்படி, சாதாரண வருடம் கார்த்திகை மாதம் 23-ம் தேதி(13.12.1970) பௌர்ணமிக்கு அடுத்த நாள், ஞாயிற்றுக்கிழமை, மாலை 5.45 மணிக்கு, கிருஷ்ணபட்சம், மிருகசீரிஷம் நட்சத்திரத்தில், ஏராளமான பக்தர்களின் முன்னிலையில் தமது ஆசனத்தில் அமர்ந்து பரிபூரணம் அடைந்தார் .
சென்னை, வடதிருமுல்லைவாயில் ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் ஆலயத்தை அடுத்த, வடக்கு மாசி வீதியில் அன்னையாரின் ஜீவசமாதி ஆசிரமம் அமைந்துள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------------------
மகான்களை அறிவோம் 04 : மாசிலாமணி சுவாமிகள் !
**************************************************************************
மனதை வெட்ட வெளியாக்கு
****************************************
“ வெளியில் வெளிபோய் விரவிய வாறும்
அளியில் அளிபோய் அடங்கிய வாறும்
ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும்
தெளியும் அவரே சிவசித்தர் தாமே .”
வானும், நெருப்பும், நீரும், காற்றும், ஆகாயமும் தம்முன் ஒடுங்கியிருக்கின்றன என்று உணர்பவரே சிவசித்தர் என்று திருமூலர் கூறுகிறார்.
சித்தர் என்றாலும் சிவம் என்றாலும் ஒன்றுதான் . ‘பரவெளி’ என்று சொல்லக்கூடிய அண்டவெளியே சிவம் ஆகும் . அதனால்தான் மனதை வெட்ட வெளியாக்கு என்று அனைத்துச் சித்தர்களும், ஞானிகளும் கூறுகின்றனர்.
சித்தர்களில் சிலர் பிறக்கும்போதே ஞானப் பிறப்பாகப் பிறக்கின்றனர் . சிலர் பிறக்கும்போதே, பிற்காலத்தில் சித்தராக வேண்டும் என்ற விதி நிர்ணயிக்கப்பட்டுவிட்டாலும், அதனை அறிந்து கொள்ளாமல் சாதாரண மனிதர்களைப் போல் வாழ்ந்து, பின்னர் எவருடைய தூண்டுதலின் பேரிலாவது ஞானம் பெறுவர்.
அப்படி ஞானம் பெறுபவர்கள் தமது ஆன்மிகப் பயணத்தைப் பஞ்சாட்சரத்துடன்தான் தொடக்குவார்கள்.
“ சிவனொடொக் கும்தெய்வம் தேடினும் இல்லை
அவனொடொப் பார்இங்கு யாவரும் இல்லை.”
என்பதுதான் அவர்களின் எண்ணங்கள் முழுவதிலும் இருக்கும் . ஆனால் ஸ்ரீ மாசிலாமணி சுவாமிகளின் எண்ணம் முழுவதும் ஆஞ்சநேயரின் மீது இருந்தது என்பதும் ஆஞ்சநேயரின் அருளால் ஞானம் பெற்றார் என்பதும், ஒரு காலகட்டத்தில் இவரே ஒரு வானரமாக மாறிவிட்டார் என்பதும் வியப்பிற்குரிய செய்திகளாகும் .
ராணுவத்தில் இருந்து ஓய்வு
***************************************
சென்னை, திருமுல்லைவாயிலில் உள்ள சோழம்பேடு என்ற கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீ மாசிலாமணி சுவாமிகளின் பாலபருவத்துச் செய்திகள் எதுவும் நமக்குக் கிடைக்கப்பெறவில்லை. அவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.
ராணுவத்தில் பணிபுரியும்போதே, இவர் ஆஞ்சநேயரை வழிபட்டுவந்தார். ஒருமுறை இவர், ராணுவ வண்டியில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநர் மிக விரைவாகவும், அபாயமான முறையிலும் வண்டியை ஓட்டிச் செல்வதைக் கண்டு, ஓட்டுநரை எச்சரித்தார் . ஓட்டுநர் அதனைச் சட்டை செய்யாமல், மேலும் விரைவாக வண்டியை ஓட்டினார் .
சுவாமிகள் வண்டியை நிறுத்துமாறு கூறி, வண்டியிலிருந்து இறங்கிக்கொண்டார் . அந்த ஓட்டுநர், சுவாமிகளை விட்டுவிட்டு வண்டியைக் கிளப்ப முயன்றார் . என்ன செய்தும் வண்டியைக் கிளப்ப முடியவில்லை . சுவாமிகள் வண்டியில் ஏறி அமர்ந்ததும் வண்டி கிளம்பியது . அப்போதுதான் சுவாமிகளிடம் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்று அனைவரும் உணர்ந்து கொண்டனர் .
சுவாமிகள் ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற பின் சோழம்பேடு கிராமத்தில் உள்ள பொங்குலக் கரையில் (குளத்தின் கரையில்) ஆஞ்சநேயரின் சொரூபத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார் . ஆஞ்சநேயர் எவ்வாறு தம் தலைவரான ஸ்ரீ ராமரின் நாமத்தை எப்போதும் ‘ராம் ராம்’ என்று உச்சரித்துக்கொண்டிருந்தாரோ, அது போன்றே சுவாமிகளும் ‘ராம் ராம்’ என்று மூச்சுக்கொரு முறை கூறிவந்தார் .
1982-ம் ஆண்டில் தாம் வழிபட்டு வந்த ஆஞ்சநேயருக்கு ஒரு சிறு மண்டபத்தை எழுப்பி, கார்த்திகை மாதம் கும்பாபிஷேகமும் செய்தார் . சுவாமிகள் அடிக்கடி தாம் நிறுவிய ஆஞ்சநேயரைக் கட்டிப் பிடித்துக்கொண்டு ‘ராம் ராம்’ என்று கூறிக் கண்ணீர் விடுவாராம் . அவரைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு உபதேசமும் செய்வார். “காடு நாடாகிறது நாடு காடாகிறது - மனிதர்களின் மன நிலை விலங்குகளைப் போல் மாறிவிடும்” என்று அடிக்கடி கூறுவாராம் .
ஆஞ்சநேயர் ஆலயத்தில் அடிக்கடி பஜனைகள் நடக்கும்போதும், பக்தியின் வெளிப்பாடு அதிகமாகும்போதும் வானரம் போன்று சப்தமிட்டுக்கொண்டு அங்கும் இங்கும் தாவுவாராம். கீழே விழுந்து புரள்வதும் பல்ட்டி அடிப்பதும், பக்தர்கள் கொண்டு வந்திருக்கும் வாழைப்பழங்களைக் கடித்துவிட்டு மீண்டும் பக்தர்களின் மீது எறிவதுமாக இருப்பாராம்.
காக்கை குருவிகளுக்கு சோறு
*****************************************
சுவாமிகள் யாசகம் செய்து அரிசி, காய்கறிகளை வாங்கி வந்து அனைத்தையும் ஒன்றாகப் போட்டு, உப்பு சேர்க்காமல் தாமே சமையல் செய்வார் . அது பாதி வேகும்போதே, சூட்டுடன் எடுத்து இரண்டு வாய் உண்பார். இதுதான் அவருக்கு அன்றைய உணவு. சோறு வெந்தபின், வந்திருக்கும் பக்தர்களுக்குக் கொடுத்துவிட்டுக் காக்கை, குருவிகளுக்கும் ஆகாரமிடுவார் .
சுவாமிகளின் மகிமையைப் பற்றி அறிந்த மக்கள், ஆலயத்தில் தொடர்ந்து அன்னதானம் நடைபெறவேண்டுமென்று, சமையலுக்குத் தேவையான அனைத்தையும் வழங்கினர் . அது இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது .
சுவாமிகள் அடிக்கடி பருத்திப்பட்டில் உள்ள தமது உறவினர் ஒருவரின் இல்லத்திற்குச் சென்று வருவார் . 1995 - ம் ஆண்டு டிசம்பர் மாதம், 4-ம் தேதி, யுவ ஆண்டு, கார்த்திகை மாதம், 18-ம் தேதி, திங்கட்கிழமை, திரயோதசி திதி, பரணி நட்சத்திரத்தின்று காலை 9.10 மணிக்கு அங்கிருந்தவர்களிடம் “ராம் ராம் இவனுக்கு நேரம் வந்துவிட்டது” என்று கூறிவிட்டுப் படுத்தார் . அடுத்த கணம் சமாதியடைந்தார்.
ஆஞ்சநேயருக்கு அருகே சமாதி
*******************************************
பருத்திப்பட்டிலிருந்து சுவாமிகளின் பூதவுடலை ஊர்வலமாக சோழம்பேட்டிற்குக் கொண்டு வந்தனர். இதனை அறிந்த அவரது பக்தர்கள் ஆஞ்சநேயர் ஆலயத்தில் அவரை எதிர்பார்த்துப் பஜனைகள் செய்து கொண்டிருந்தனர் . சுவாமிகள் பிரதிஷ்டை செய்த ஆஞ்சநேயருக்கு அருகில் சமாதி தோண்டப்பட்டுத் தயாராக இருந்தது.
சுவாமிகள் படுத்த நிலையில் சமாதியடைந்ததால், அவரை எப்படிச் சமாதிக்குள் உட்கார வைப்பது என்ற குழப்பம் ஏற்பட்டது . சுவாமிகளின் சீடரான துக்காராம் அவர்கள், சுவாமிகளிடம் கால்களை மடக்கிக்கொள்ளுங்கள் என்று கூறியதும் சுவாமிகள் பத்மாசனமிடுவது போல் கால்களை மடக்கிக் கொண்டாராம்.
பின்னர் 108 குடங்களில் நீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்து, புத்தாடை அணிவித்து அவரைச் சமாதியினுள் அமர வைத்தனர் . அவரைச் சுற்றி வில்வம், துளசி, விபூதி, ஆகியவற்றை நிரப்பி சமாதியை மூடினர்.
பல அதிசயங்களை நிகழ்த்திய சுவாமிகள் இறுதிவரை திருமணம் செய்துகொள்ளவில்லை . அவரது சீடரான துக்காராம் அவர்கள், சுவாமிகளின் சமாதிப் பீடத்தின் மீது சுவாமிகளின் திருஉருவச் சிலையை ஸ்தாபிதம் செய்துள்ளார் . சுவாமிகள் பிரதிஷ்டை செய்த ஆஞ்சநேயருக்கு எதிரே ஸ்ரீ ராமருக்கு ஒரு ஆலயம் எழுப்பியுள்ளார் . அங்கு ஸ்ரீ ராமர் சீதா தேவியுடன், தம்பி லட்சுமணன் சமேதராக எழுந்தருளியுள்ளார் .
அம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள சோழம்பேடு மெயின் ரோட்டில் சுமார் ஒரு கிலோ மீட்டர் பயணம் செய்த பின், குளக்கரைக்குச் செல்லும் பாதையில் சென்றால் ஆஞ்சநேயர் ஆலயத்தை அடையலாம்.

----------------------------------------------------------------------------------------------------
மகான்களை அறிவோம் 05 : கட்டிக்குளம் சூட்டுக்கோல்
ஸ்ரீ மாயாண்டி சுவாமிகள்
************************************
நம்முடைய ஆன்மிகத் தேடலுக்கும் அடைய விரும்பும் பேரின்பத்துக்கும் நல்ல குரு ஒருவரே வழிகாட்ட முடியும் . ஒரு குருவை நாம் தேடிக் கண்டடையும் போது அவரின் திருமேனியைத் தரிசிப்பதும் அவருடைய திருநாமத்தைச் சொல்லுவதும் அவருடைய உபதேசத்தைக் கேட்பதும் அவருடைய திருவுருவை நம் மனதில் வைத்துத் தியானிப்பதும் ஞானத்தை அளிக்கும். நமக்கு நல்ல கொடுப்பினை இருந்தால் சிவனே குருவாக வந்து நமக்கு மெய்யுணர்வை அளிக்கிறார் என்று திருமூலர் கூறுகிறார் .
"தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே " - திருமூலர்.
அதனால்தானோ என்னவோ சிவனாகவே மாறிவிட்ட மாயாண்டி சுவாமிகள் ‘தாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறுக’ என்று ஒரு நல்ல குருவாக இருந்து பல சித்தர்களை உருவாக்கியிருக்கிறார் .
சிறுவனைச் சுற்றிய நாகம்
*************************************
மதுரையிலிருந்து மானாமதுரை செல்லும் வழியில் இருக்கும் திருப்பாச்சேத்தியிலிருந்து தெற்கே எட்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கட்டிக்குளம் . அங்கு குப்பமுத்து வேளாளர், கூத்தாயி அம்மாள் ஆகியோரின் மகனாக காளயுக்தி வருடம் ஆடி மாதம் பூராட நட்சத்திரத்தில் (1855 ஜூலையில்) மாயாண்டி சுவாமிகள் அவதரித்தார் . சிறு வயது முதலே ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.
கட்டிக்குளத்தில் உள்ள அய்யனார் கோயிலின் பூசாரியாக இருந்த குப்பமுத்து வேளாளர் ஒரு நாள் தம் மகன் மாயாண்டியையும் பூசை செய்வதற்காக அழைத்துச் சென்றார் . வெளிக்கூடத்தில் மகனை உட்காரவைத்துவிட்டு உள்ளே சென்று பூசைகளைச் செய்துவிட்டுத் திரும்பியவர் அதிர்ச்சியடைந்தார் .
குத்துக்காலிட்டு மகன் தியானம் செய்துகொண்டிருப்பதையும் அவனுடைய உடலை நாகம் ஒன்று சுற்றிக்கொண்டு தலையின் மீது படம் எடுத்து நிற்பதையும் கண்டார் . “அய்யனாரப்பா என் மகனைக் காப்பாற்று” என்று குரல் எழுப்ப அந்தப் பாம்பு சட்டென்று மறைந்துவிட்டது. அதைக் கண்ட அவர் தம் மகன் சாதாரணப் பிறவியல்ல என்று உணர்ந்து கொண்டார்.
சிறு வயதில் மாயாண்டி சுவாமிகள், சித்தர் பாடல்களைத் தேடித் தேடிப் படிப்பதையும் அடிக்கடி ஆலய யாத்திரைகள் சென்று வருவதையும் கண்டு அச்சமுற்ற பெற்றோர் அவருக்குத் திருமணமும் செய்து வைத்தனர். இருப்பினும் அவரது ஆன்மிகத் தேடல் குறையவில்லை. அவர் தமது தேடல்களுக்குச் சரியான வழிகாட்டும் குரு ஒருவரைத் தேடியலைந்தார். இறைவன் அதற்கும் வழிகாட்டினான்.
குரு செல்லப்ப சுவாமிகள்
************************************
மன்னார்குடியைச் சேர்ந்த சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகளின் சீடரான செல்லப்ப சுவாமிகள் இராமேசுவர யாத்திரை செல்லும் வழியில் கட்டிக்குளத்துக்கு வந்திருந்தார். அவரைச் சந்தித்த மாயாண்டி சுவாமிகள் அவரிடம் தம் விருப்பத்தைக் கூறியதும் உடனே அவருக்குத் தீட்சையளித்தார். அந்த நிமிடமே அனைத்தையும் துறந்த மாயாண்டி சுவாமிகள் கட்டிய கோவணத்துடன் வீட்டை விட்டுப் புறப்பட்டார்.
பல புனித ஸ்தலங்களுக்குச் சென்று யோக சமாதியில் ஆழ்ந்த அவர் இறுதியாகத் திருக்கூடல் மலை என்ற காகபுஜண்டர் மலைக்கு வந்து சேர்ந்தார்.(இன்றைக்கும் காகபுஜண்டர் அந்த மலையில் யோக சாமதியில் இருப்பதாகக் கூறப்படுகிறது). அந்த மலையில் அரூபமாக இருக்கும் சித்தர்கள் அவரை வரவேற்று, இங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடும்படி அருளாசி கூறினர் . அதன்படி மாயாண்டி சுவாமிகள் அங்கிருக்கும் குகை ஒன்றில் லிங்கம் ஒன்றைப் பிரிதிஷ்டை செய்து யோக சமாதியில் ஆழ்ந்து அட்டமாசித்திகளையும் பெற்றார் .
ஆசிர்வாதமும் வழிநடத்தலும்
*******************************************
ஒருநாள் சுவாமிகள் மதுரைக்கு அருகே ஒரு சிறு கிராமத்தில் வசித்த பிராமணத்துக் தம்பதியினரின் இல்லத்திற்குள் திடீரென நுழைந்தார் . அத்தம்பதியினரிடம், “உங்களுக்குப் பத்தாவதாக ஒரு பிள்ளை பிறக்கப்போகிறது . அதற்குச் சுப்பிரமணி என்று பெயர் வை .
ஆனால் அவன் சில காலம் மட்டும் உங்களுடன் இருப்பான் . பின்னர் அவனை இந்த உலகமே கொண்டாடும்” என்று ஆசி வழங்கினார் . அதன்படி பிறந்த சுப்பிரமணி தான் பின்னர் சுவாமிகளிடம் தீட்சை பெற்று ‘சாந்தானந்த சுவாமிகள்’ ஆனார். சேலம் புதுக்கோட்டை போன்ற இடங்களில் உள்ள ‘ஸ்கந்தாஸ்ரமம்’ அமைத்துப் பக்தர்களின் குறைகளைத் தீர்த்தார் .
ஒருமுறை சுவாமிகள் நாகப்பட்டினம் சென்றிருந்தார். சுவாமிகளைத் தரிசித்துத் திருநீறு பெறுவதற்காகப் பெரும் கூட்டம் கூடியிருந்தது . அப்போது ஒரு சிறுவன் திருநீறு வாங்குவதற்காக நீட்டிய கையைத் தொட்டதும் சுவாமிகள் மகிழ்ச்சியுடன் “நீ யோகக்காரனப்பா! உன் பேச்சைக் கேட்கப் பணத்தைக் கொட்டிக் கொடுப்பார்கள் .
அதனைக் கொண்டு ஏராளமான ஆலயங்களுக்குத் திருப்பணிகள் செய்யும் யோகமும் உனக்கு இருக்கிறது” என்று கூறி ஆசிர்வதித்தார் . அந்தச் சிறுவன்தான் பின்னாளில் திருமுருகக் கிருபானந்த வாரியார் சுவாமிகள் எனப் புகழ் பெற்றார் . சுவாமிகள் கூறியபடி சுமார் நாற்பது திருத்தலங்களுக்குத் திருப்பணிகளும் செய்தார் .
சுவாமிகளின் நெருங்கிய சீடரான இருளப்பக் கோனார் சுவாமிகளின் அறிவுரையின்படி திருக்கூடல் மலையில், தண்டாயுதபாணியின் சொரூபத்தைப் பிரதிஷ்டை செய்தார். இப்போது அங்கு பெரும் ஆலயம் ஒன்று எழுப்பப்பட்டிருக்கிறது. சுவாமிகளிடம் தீட்சை பெற்றுச் சீடர்கள் பலர் சித்தரானார்கள். கற்றங்குடி ரெட்டி சுவாமிகள், மூக்கையா சுவாமிகள், கச்சைகட்டி சுவாமிகள், வேலம்மாள், முத்துமாணிக்கம் சுவாமிகள், சோமப்பா சுவாமிகள், சாந்தானந்த சுவாமிகள் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள் .
சட்டையைக் கழற்றிவிடலாமா?
*********************************************
நீரின் மீது நடந்தது தண்ணீரில் விளக் கேற்றியது போன்ற பல சித்துக்களைச் செய்த மாயாண்டி சுவாமிகள் 1928-ம் ஆண்டு புரட்டாசி மாதம் ஆறாம் தேதி, தமது பக்தர்களிடம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் அடக்கம் ஏற்படும் என்று தெரிவித்தார் . அடக்கம் செய்ய வேண்டிய இடத்தைக் குறிப்பிட்டு அங்கே சமாதிக் குழியும் வெட்டச் செய்தார் .
சுவாமிகள் கூறியபடி 1930-ம் ஆண்டு புரட்டாசி மாதம் 11-ம் தேதி இரவு இருளப்பக் கோனாரின் இடது தோளில் சாய்ந்து “அப்பு இந்தச் சட்டையைக் கழற்றிவிடலாமா?” என்று கேட்டுவிட்டுச் சமாதியானார் . சமாதிக் குழிக்குள் சுவாமிகளின் பூத உடலை வைக்கும்போது அவரது ஜீவநாடி ஓடிக்கொண்டிருந்ததாம் . சுவாமிகளின் விருப்பப்படி அவரது சமாதிப் பீடத்தில் சுவாமிகள் பூசித்துவந்த விநாயகரின் சொரூபம் பிரதிஷ்டை செய்யப்பட்டது .
திருக்கூடல் மலை(திருப்பரங்குன்றம்,மதுரை) என்ற காகபுஜண்டர் மலையில் காகபுஜண்டர் இன்றும் அரூபமாக யோக சமாதியில் இருக்கின்றார் என்றும் அங்கு பல சித்தர்கள் அரூபமாக வாழ்ந்துவருவதாகவும் கூறப்படுகிறது . இப்படிப்பட்ட புனிதமான அந்த மலையின் அடிவாரத்தில் மாயாண்டி சுவாமிகள் ஜீவசமாதியடைந்து அதனை மேலும் புனிதமாக்கியிருக்கிறார் .


Wednesday, June 24, 2015

ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயம Vaishnava Sampradayam

Vaishnava Sampradayam

வைஷ்ணவ சம்பிரதாயத்தை சேர்ந்த ஒரு அம்மா பெரியவாளை தரிசனம் பண்ணி அவர்கள் மரபுப்படி நமஸ்கரித்து விட்டு நின்றாள். அவள் கண்களில் ஏதோ ஏக்கம், எதிர்பார்ப்பு, நம்பிக்கை.
மெல்ல பெரியவாளிடம் விண்ணப்பித்தாள் ” குடும்பத்துல பலவித கஷ்டங்கள். வியாதி வெக்கை. ஒரு பொண்ணுக்கு கல்யாணம் ஆகி ஏழெட்டு வருஷம் ஆகியும், குழந்தை இல்லை. இன்னொரு பொண்ணுக்கு வயசு எகிறிண்டே போறதே ஒழிய வரன் அமைய மாட்டேங்கறது. பையனுக்கோ படிப்பே வரலை. பண கஷ்டம்………கேரளா போய் நம்பூதிரி கிட்டே பிரச்னம் பாத்தோம். பித்ரு தோஷமாம். பித்ரு கர்மாக்களை ஒழுங்கா பண்ணாம விட்டதுக்கு ராமேஸ்வரம் போய் பரிகாரம் பண்ணணும்…ங்கறார். வைஷ்ணவ சம்பிரதாயப்படி, ராமேஸ்வர யாத்ரை, பரிகார சடங்கு எதுவுமே பண்ணக் கூடாது. என்ன பண்ணறதுன்னே தெரியலை. பெரியவாதான் வழி காட்டணும்” என்றாள்.
“நீங்க தென்கலையா?”
“ஆமா”
“உப்புச்சாறு, சாணிச்சாறு, சடைச்சாறு….ங்கற மூணும் தென்கலைக்கு கெடையாது…….”
” ஆமாமா, எங்க அம்மா கூட உப்புச்சார், சாணிசார், சடைசார்…..ன்னு சொல்லுவா”
“அதேதான். ராமேஸ்வர சமுத்ர ஸ்நானம், உப்புச்சாறு. பஞ்சகவ்ய பிராசனம் சாணிச்சாறு. கங்காஸ்நானம் சடைச்சாறு. ஏன்னா, பரமேஸ்வரனோட சடையில் இருந்துதானே கங்கை வரது! அதுனால, சம்பிரதாய விரோதமா போகவேணாம். அதுக்கு பதிலா, நித்யம் சாளக்ராமம் [பெருமாள்] திருவாராதனம் பண்ணி, திருமஞ்சன தீர்த்தம் சாப்பிடணும். அப்புறம், எகாதசியன்னிக்கு உபவாசம் இருங்கோ. பால், பழம், கிழங்கு சாப்பிடலாம். அன்னிக்கு ஓங்காத்துக்காரர் பன்னெண்டு திருமண் இட்டுண்டு திருவாராதனம் பண்ணணும். சரியா? மறுநா, த்வாதசியன்னிக்கி சீக்கிரமாவே திருவாராதனம் பண்ணிட்டு, துளசி தீர்த்தம் சாப்டுட்டு பாரணை பண்ணணும். தெனமும் ஒரு பசுமாட்டுக்காவது ஒரு கைப்பிடி புல் தரணும். இப்பிடி பண்ணினா, சர்வ பிராயச்சித்தம் பண்ணினாப்ல ஆகும். பண்ணுவியா?”
பெரியவாளோட உபதேசம் ஆக ஆக, அந்த அம்மா அழுகையை அடக்க முடியாமல் மாலை மாலையாக கண்ணீர் விட்டாள்.
“பெருமாளே வந்து சொன்னா மாதிரி இருக்கு பெரியவா. என்னென்னமோ நெனச்சு குழம்பிண்டு இருந்தேன். ராமேஸ்வரம் போகத்தான் வேணும்னு சொல்லுவேள்னு நெனச்சேன். பெரியவா சுத்த ஸ்படிகம். சம்பிரதாய விரோதமில்லாம வழி காட்டிட்டேள்! ”
காமத்தை வென்ற காமேஸ்வரனே நம்மை மாதிரி அல்பங்களுக்காக இறங்கி வந்து நாவினிக்க “நாராயண நாராயண” என்று சொல்லி ஆசிர்வதிக்கும்போது, எல்லா சம்பிரதாயங்களும் அவனுள்ளே அடக்கம்தானே!
 

பூணூல் / யகஞோபவீதம்

பூணூலை மூன்று விதமாக அணிந்து கொள்ளுதல் 

ஷர்ட் போடும்போது பூணூல் நிவீதமாக (மாலையாக) இருக்கவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

பூணூலை மூன்று விதமாக அணிந்து கொள்ளுதல் 
(’யக்ஞோபவீதம்’ புஸ்தகத்திலிருந்து ஒரு பக்கம்)

பூணூலை மூன்று விதமாக அணிந்துக் கொள்ளும் சந்தர்பங்கள்:
1. உபவீதம். 
2. ப்ராசீனாவீதம். 
3. நிவிதம்.

இவற்றைச் சற்று விவரமாக பார்ப்போம்
1. உபவீதம் : இது இயல்பான முறையாகும். உதாரணத்திற்கு நாம் வீட்டில் சாதாரணமாக இருக்கும் போது இடதுதோள்பட்டையின் மேல் பகுதியிலிருந்து வலதுபுறம் கைப்பகுதிக்கு அணிந்து கொள்வது. இந்தப் பொதுவான முறை உபவீதம் எனப்படுகிறது.

2. ப்ராசீனாவீதம் : பித்ரு கார்யங்கள் செய்யும் போது பூணூல் ப்ராசீனாவீதமாக அணிந்து கொள்ளப்பட வேண்டும். ப்ராசீனாவீதத்தின் போது வலது தோள்பட்டையின் மேல் பகுதியிலிருந்து இடது கை வரை கீழ்நோக்கி பூணூல் இருக்கும். தர்ப்பணம் அல்லது ச்ராத்தம் செய்யும் போது கர்த்தா இவ்வாறு அணிந்து கொண்டிருப்பதைரீ பார்க்கலாம்.

3. நிவிதம் : பூணூலை அணிந்து கொள்ளும் மூன்றாவது முறை நிவிதம் என்றழைக்கப்படுகிறது. பூணூலை கழுத்தைச் சுற்றி மார்பு வரையில் மாலை போல் அணிந்து கொள்வதே நிவிதம் எனப்படுகிறது. 

கீழ்கண்ட சந்தர்ப்பங்களில் பூணூலை நிவிதமாக அணிவது சம்ப்ரதாயத்தில் உள்ளது:
இயற்கை உபாதைகளை கழிக்கும் போதும், உடலைச் சுத்தப்படுத்திக் கொள்ளும் போதும் நிவிதமாக பூணூலைப் போட்டுக் கொள்ள வேண்டும். பஞ்சகச்சம் அணியும்போது நமது பூணூல் நிவீதமாக அதாவது மாலையாக இருக்கவேண்டும் இறந்தவர்கள் வீடுகளுக்கு 10 நாட்களுக்குள் சென்று துக்கம் விசாரிக்கும் போதும் பூணூலை நிவிதமாகத்தான் போட்டுக் கொள்ள வேண்டும். ஸ்திரீ சம்போக காலத்தில் யக்ஞோபவீதம் நிவிதமாகத்தான் இருக்க வேண்டும்.

அது மட்டுமல்ல. தற்காலத்தில் நாம் சட்டை அணிந்து கொண்டு வெளியே போகும் போது பூணூலை இவ்வாறு, நிவிதமாக. அணிந்து கொள்ள வேண்டும்.

Courtesy Sarma Sastrigal