Saturday, February 21, 2015

தெரிந்து கொள்ளுவோம்


எப்பேர்ப்பட்ட தாக்குதலையும் எதிர்க்கிற, அதனைத் 

தவிடுபொடியாக்குகிற சக்தி தர்ப்பைக்கு உண்டு. எனவே, வீட்டிலுள்ள 

தண்ணீர்ப் பாத்திரங்களில் ஒரு தர்ப்பையை எடுத்துப் போட்டுவிடுவது 

நல்லது. தர்ப்பையின் சக்தி புரிந்ததனால்தான், ஆற்றங்கரை- 

குளக்கரைகளில் மௌனமாக அமர்ந்து, தர்ப்பையைக் கொண்டு 

ஜபதபங்களில் ஈடுபட்டனர் நமது முன்னோர்கள்.


வீட்டில் உள்ள பொருள்களில் கிரகணத் தாக்குதல் நிகழ்ந்திருக்கலாம் 

என்பதால் கிரகணம் முடிந்ததும், அணிந்திருந்த உடைகள், நமது 

படுக்கை 

என அனைத்தையும் நனைத்து, நீராடிய பிறகே காபி- டீ ஆகியன 

உட்கொள்ள வேண்டும் என்கிறார் காஞ்சி காமாட்சியம்மன் கோயில் 

அர்ச்சகர் நடராஜ சாஸ்திரிகள்
---------------------------------------------------------
ஹேதுநாகண்டே பத்நாமி ஸுபகேத்வம ஜீவ
சரதஸ்சதம்
என்னும் இந்த மந்திரம் தாலி கட்டும்
சமயத்தில், கெட்டிமேளச் சத்தத்துடன் சொல்லப்
படும். இதன் பொருள், மங்களம் நிறைந்தவளே!
உன்னோடு இல்லற வாழ்வை நல்லமுறையில்
நடத்த வேண்டும் என்று திருமாங்கல்யத்
உன்னுடைய கழுத்தில் அணிவிக்கிறேன். என்
வாழ்வில் ஏற்படும் சுக, துக்கங்களில்
பங்கேற்கும் நீ, சுபயோகங்களுடன்
நுõறு ஆண்டு காலம் வாழ்வாயாக!
என்று பொருள்.
புதுமணத்தம்பதிகள் இந்த
மந்திரத்தை விளையாட்டாக எடுத்துக்
கொள்ளாமல், பொருள் உணர்ந்து வாழ்வைத்
துவக்குங்கள். நுõறாண்டு காலம் நலமாக
வாழுங்கள்.
மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள் :-
01. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
02. மனது புண்படும்படி பேசக் கூடாது.
03. கோபப்படக்கூடாது.

04. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
05. பலர் முன் திட்டக்கூடாது.
06. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
07. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
08. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
09. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வேண்டும் பாராட்ட வேண்டும்.
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
17. ஒளிவு மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக்
கூடாது.
37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.

No comments:

Post a Comment