Wednesday, November 18, 2015

மைத்ர முஹுர்த்தம் கடன் தீர

உங்கள் தீராத கடன் தீர 100 % உண்மையான ஆலோசனை...

இந்தக் காலத்தில் கடன் இல்லாத மனிதரே இல்லை எனலாம். கொஞ்சம் கொஞ்சம் என்று ஆரம்பிக்கும் இந்த பழக்கம் கடைசியில் ஒரு மனிதரின் ஒட்டு மொத்த நிம்மதியை குலைத்து , சமயங்களில் குடும்பத்தை பிரித்து.. ஏன் ஒரு சிலரின் உயிரையே எடுத்து இருக்கிறது... நமது இணைய தளத்தில் ஏற்கனவே நாம் நிறைய கட்டுரைகள் பிரசுரித்து இருக்கிறோம். அவைகளை மீண்டும் ஒருமுறை படித்துக் கொள்ளவும்.

ஒரு சிலரது அனுபவத்தில், சில கடன்கள் எத்தனை பிரயாசைப் பட்டும் அடைவது இல்லை. அந்த மாதிரி தீராத கடன்களுக்கு ஜோதிடம் கூறும் வழி தான் இது...

மைத்ர முகூர்த்தம் என்ற ஒன்று ஜோதிடத்தில் இருக்கிறது.ஒரு தமிழ் மாதத்தில் அதிகபட்சமாக மூன்று நாட்களுக்கு வரும்.அந்த மூன்று நாட்களில் ஒவ்வொரு நாளும் அதிகபட்சமாக இரண்டு மணிநேரம் வரும்.இந்த நேரத்தைப் பயன்படுத்தி,நமது கடன் எத்தனை கோடி ரூபாய்களாக இருந்தாலும்,அதை முழுமையாக அடைத்துவிட முடியும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள மைத்ர முகூர்த்த நேரம் ஒன்றில் வாங்கிய கடனில் அசலில் ஒரு சிறு பகுதியை திருப்பித் தர வேண்டும்.அப்படி ஒரே ஒரு முறை திருப்பித் தந்தாலே,அதன்பிறகு,அந்தக் கடன் அடியோடு,முழுமையாக தீர்ந்துவிடும் என்பது அனுபவ உண்மை.

9.11.2015 திங்கள் மாலை 4.12 முதல் 6.12 வரை
25.11.2015 புதன் மாலை 5.40 முதல் 7.40 வரை
6.12.2015 ஞாயிறு மதியம் 2.40 முதல் 4.40 வரை
23.12.2015 புதன் காலை 5.50 முதல் 7.50 வரை
3.1.2016 ஞாயிறு மதியம் 1.45 முதல் 3.45 வரை
30.1.2016 சனி காலை 11.05 முதல் மதியம் 1.05 வரை
26.2.2016 வெள்ளி காலை 9 முதல் 11 வரை
27.2.2016 சனி காலை 9.04 முதல் 10.04 வரை
13.3.2016 ஞாயிறு இரவு 10.10 முதல் 12.10 வரை
25.3.2016 வெள்ளி காலை 7.10 முதல் 9.10 வரை
9.4.2016 சனி இரவு 8.30 முதல் 10.30 வரை
பெரிய அளவு கடனை அடைக்க விரும்புவோர்,இந்த நேரங்களை தொடர்ந்து பயன்படுத்துவது விரைவில் கடன் தீர வழிவகுக்கும்.

Monday, November 16, 2015

கந்த சஷ்டி கவசம்

சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட
மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார் கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து வரவர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலா எண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக! வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக! சரவண பவனார் சடுதியில் வருக
ரவண பவச ர ர ர ர ர ர ர ரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி விநபவ சரவண வீரா நமோநம நிபவ சரவண நிறநிற நிறென
வசுர வணப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை ஆளும் இளையோன் கையில் பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்
பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க விரைந்தெனைக் காக்க வேலோன் வருக ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும் உய்யொளி சௌவும் உயிரைங் கிலியும்
கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும் நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும் சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும் குண்டலி யாஞ்சிவ குகன் தினம் வருக!
ஆறு முகமும் அணிமுடி ஆறும் நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகுகுண் டலமும் ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்
முப்புரி நூலும் முத்தணி மார்பும் செப்பழ குடைய திருவயி றுந்தியும் துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும் நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்
இருதொடை யழகும் இணைமுழந் தாளும் திருவடி யதனில் சிலம்பொலி முழங்க செககண செககண செககண செகண மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண ரரரர ரரரர ரரரர ரரர ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு விந்து விந்து மயிலோன் விந்து முந்து முந்து முருகவேள் முந்து
என்றனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா வினோ தனென்று
உன் திருவடியை உறுதியென் றெண்ணும் எந்தலை வைத்துன் இணையடி காக்க என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க விதிசெவி இரண்டும் வேலவர் காக்க
நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க முப்பத் திருபல் முனைவேல் காக்க செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை ரத்ன வடிவேல் காக்க சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க பிடரிக ளிடண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழுபதி னாறும் பருவேல் காக்க
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க நாணாங் கயிற்றை நல்வேல் காக்க ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க வட்டக் குதத்தை வல்வேல் காக்க
ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க கைகளி ரண்டும் கருணைவேல் காக்க முன்கையி ரண்டும் முரண்வேல் காக்க பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணை யாக நாபிக் கமலம் நல்வேல் காக்க முப்பால் நாடியை முனைவேல் காக்க எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க
அடியேன் வதனம் அசைவுள நேரம் கடுகவே வந்து கனகவேல் காக்க வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க அரையிருள் தன்னில் அனையவேல் காக்க
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறக் தாக்க பார்க்க பார்க்க பாவம் பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை அகல வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும் கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும் எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும் கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும் தண்டியக் காரரும் சண்டாளர் களும் என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட ஆனை யடியினில் அரும்பா வைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும் நகமும் மயிரும் நீண்முடி மண்டையும் பாவைக ளுடனே பலகல சத்துடன் மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும் காசும் பணமும் காவுடன் சோறும் ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும் அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட வாய்விட் டலறி மதிகெட் டோட
படியினில் முட்ட பாசக் கயிற்றால் கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு கட்டி உருட்டு கைகால் முறிய கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட செக்கு செக்கு செதில் செதிலாக சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு குத்து குத்து கூர்வடி வேலால்
பற்று பற்று பகலவன் தணலெரி தணலெரி தணலெரி தணலது வாக விடு விடு வேலை வெகுண்டது வோடப் புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோட தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம் ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும் வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம் குலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல்விப் புருதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத் தரணை பருஅரை யாப்பும் எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீஎனக் கருள்வாய் ஈரேழு உலகமும் எனக் குறவாக ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்
உன்னைத் துதிக்க உன் திரு நாமம் சரவண பவனே சைலொளி பவனே திரிபுர பவனே திகழொளி பவனே பரிபுர பவனே பவமொளி பவனே
அரிதிரு மருகா அமரா வதியைக் காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய் கந்தா குகனே கதிர்வே லவனே கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை யழித்த இனியவேல் முருகா தனிகா சலனே சங்கரன் புதல்வா கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா பழநிப் பதிவாழ் பாலகு மாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா சமரா புரிவாழ் சண்முகத் தரசே காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யானுனைப் பாட எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப் பாடினேன் ஆடினேன் பரவச மாக ஆடினேன் ஆடினேன் ஆவினன் பூதியை
நேச முடன்யான் நெற்றியில் அணிய பாச வினைகள் பற்றது நீங்கி உன்பதம் பெறவே உன்னரு ளாக அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமும்
மெத்தமெத் தாக வேலா யுதனார் சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன் வாழ்க வாழ்க வாரணத் துவசம் வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை அடியேன் எத்தனை செயினும் பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன் பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித் தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய் கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக் காலையில் மாலையில் கருத்துடன் நாளும் ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி நேசமுடன் ஒரு நினைவது வாகிக்
கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச் சிந்தை கலங்காது தியானிப் பவர்கள் ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு ஓதியே செபித்து உகந்துநீ றணிய   அஷ்டதிக் குள்ளோர் அடங்கிலும் வசமாய்த் திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங்கு அருளுவர் மற்றவ ரல்லாம் வந்து வணங்குவர் நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமதனெனவும் நல்லெழில் பெறுவர் எந்த நாளுமீ ரட்டாய் வாழ்வார் கந்தர்கை வேலாம் கவசத் தடியை வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள் பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வ சத்ரு சங்கா ரத்தடி
அறிந்தென துள்ளம் அஷ்ட லட்சுமிகளில் வீரலட் சுமிக்கு விருந்துண வாகச் சூரபத் மாவைத் துணித்தகை யதனால் இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த
குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி! எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம் மேவிய வடிவுறும் வேலவா போற்றி!
தேவர்கள் சேனா பதியே போற்றி! குறமகள் மனமகிழ் கோவே போற்றி! திறமிகு திவ்விய தேகா போற்றி! இடும்பா யுதனே இடும்பா போற்றி!
கடம்பா போற்றி கந்தா போற்றி! வெட்சி புனையும் வேளே போற்றி! உயர்கிரி கனக சபைக்கோ ரரசே! மயில்நட மிடுவோய் மலரடி சரணம்!
சரணம் சரணம் சரவண பவஓம் சரணம் சரணம் சண்முகா சரணம்!

Thursday, November 12, 2015

வாஸ்து  குறிப்புகள்

வாஸ்து  குறிப்புகள்

“படுக்கை அறையில் தையல்மெஷின்களைவைத்திருந்தால் கணவன்மனைவிக்கும் இடையேஅடிக்கடி சண்டை வரும் உண்மைதான் எனக்கும் எனதுகணவருக்கும் இடையில்அடிக்கடி சண்டை நடந்துகொண்டுதான் இருந்தது.நீங்கள் எழுதியதைப் படித்தபிறகுதான் அதற்குக் காரணம்புரிந்தது. எங்கள் படுக்கைஅறையில் தையல் மெஷின்ஒன்றை வைத்திருக்கிறேன்.உடனே அதை அங்கிருந்துவேறு இடத்திற்குமாற்றிவிட்டேன். அதைமாற்றிய பிறகு எங்கள்இருவருக்கும் இடையில்சண்டை நடக்கும் வாய்ப்புகள்குறைந்துவிட்டது” என்றுகூறிய அவர் மேலும் பலவிஷயங்களுக்கு விளக்கம்கேட்டுத் தெரிந்து கொண்டார்.

வாஸ்து முறையில்பணக்காரராக சில ரகசியங்கள்வாஸ்து என்பது மிகவும்அற்புதமான ஒரு சாஸ்திரம்.இதை சரியான முறையில்பின்பற்றினால் நீங்கள்வாழ்வில் உயர்ந்து கொண்டேபோகலாம். ஆனால், அதில்தவறு ஏற்பட்டால், நீங்கள்அதள பாதாளத்தில் விழுந்துவிடுவீர்கள் என்பதையும்மறந்துவிடக்கூடாது.

உங்கள் கையில் அடிக்கடிபணம் வந்து கொண்டிருக்கவேண்டுமானால் நீங்கள்தூங்கும் போது மேற்குப் பக்கம்தலை வைத்துப் படுக்கவேண்டும். அதாவது, நீங்கள்தூங்கும் போது உங்கள் தலைமேற்குப் பக்கமாக இருக்கவேண்டும். சூரியன் உதிக்கும்பக்கத்திற்கு எதிர்ப்பக்கமாகஇருப்பது மேற்கு பக்கம். இந்தபக்கம் தலை வைக்கும்விதத்தில் உங்கள் கட்டிலைதிருப்பிவைத்துக்கொள்ளுங்கள்.எக்காரணம் கொண்டும்வடக்குப் பக்கம் தலைவைத்துப்படுக்காதீர்கள்.இப்படி செய்வதன் மூலம்நீங்கள் சோம்பேறிகளாகிவிடுவீர்கள்.

எவ்வளவுதான் கஸ்டப்பட்டுவேலை செய்தாலும் அதற்குஏற்ற விதத்தில் பணம்கிடைக்காமல்வேதனைப்பட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு இந்தமுறை நிறையவேபயன்தரும்.

உங்கள் வீட்டில் உள்ளகுழாய்களில் அடிக்கடிதண்ணீர் ஒழுகிக்கொண்டிருக்கிறதா என்பதில்கவனமாக இருங்கள் சிலவீடுகளில் உள்ள பைப்புகளில்பார்த்தால் சொட்டுச் சொட்டாகதண்ணீர் ஒழுகிக் கொண்டேஇருக்கும் இப்படி நடப்பதனால்அந்த வீட்டில் செலவுஅதிகமாகவே இருக்கும்.இதேபோல், வீட்டினுள் எந்தப்பகுதியிலும் ஈரத்தன்மைஇல்லாமலும், பூசணம்பிடிக்காமலும்வைத்திருப்பதில் கவனமாகஇருங்கள். அதேபோல், பணம்சம்பாதிக்கும் ஆர்வமும்குறைந்துவிடும்.

உங்கள் வீட்டில் உள்ளகிழக்குப் பகுதியில் எந்தஇடத்திலாவது சில்லறைகாசுகள் போட்ட பானைஒன்றை வையுங்கள்.இதற்காக சிறுவர்கள்கூட்டாஞ்சோறு ஆக்கும்பானை ஒன்றை நீங்கள்பயன்படுத்துவதுதான் சிறப்பு.இந்த பானை நிறையமாற்றப்பட்ட சில்லறைக்காசுகளைப் போட்டு அதன்வாயை மூடாமல் கிழக்குபக்கத்தின் ஒரு பகுதியில்வையுங்கள். முக்கியமானஒரு விஷயம்என்னவென்றால், இப்படி ஒருபானை அந்தப் பகுதியில்இருப்பது எவருக்கும்தெரியக்கூடாது. அதாவது,யாருடைய பார்வையிலும்படாத ஓர் இடத்தில் தான்இந்தப் பானையை வைக்கவேண்டும். சாதாரணஅறைகளில் குடியிருப்பவர்கள்கிழக்கு பக்கத்தில் உள்ள ஓர்இடத்தில் இந்தப் பானையைவைக்கலாம். இப்படிசெய்வதன் மூலம் உங்களுக்குமேலதிகமாக பணம் வந்துசேருவதை நீங்கள் அனுபவரீதியாக பார்த்துக்கொள்ளலாம்.

உங்களது சாப்பாட்டுஅறையில் பிரேம் போட்டவட்ட வடிவமான கண்ணாடிஒன்றை மாட்டி வையுங்கள்.இதிலும் முக்கியமான ஒருவிஷயத்தை நீங்கள் கவனிக்கவேண்டும். அதாவது,சாப்பாட்டு அறை சுவற்றில்மாட்டப்படும் அந்தக்கண்ணாடியில் மேசைமீதுள்ளஉணவுவகைகள் தெரியவேண்டும். இப்படி செய்வதன்மூலம், உங்களுக்குக்கிடைக்கும் பணம் இரண்டுமடங்காக அதிகரிக்கும்வாய்ப்பு ஏற்படும்.

உங்கள் வீட்டுக்குள்தென்கிழக்குப் பகுதி எதுஎன்பதைக் கண்டுபிடித்துஅந்தப் பகுதியில் ஒன்பதுமீன்கள் கொண்ட மீன் தொட்டிஒன்றை வையுங்கள். இதிலும்முக்கியமான ஒருவிஷயத்தில் கவனம் செலுத்தவேண்டும். அதாவதுதொட்டியில் இருக்கும்மீன்களின் எண்ணிக்கைஒன்பதாகத்தான் இருக்கவேண்டும். அதில் எட்டுமீன்கள் கோல்பிஷ் என்றுசொல்லப்படும் மீன்களும்(சிவப்பு அல்லது பொன்நிறம்)ஒரு மீன் கருப்பு நிறத்திலும்இருக்க வேண்டும். இப்படிச்செய்வதன் மூலம் பணமும்அதிர்ஸ்டமும் உங்களைநோக்கி பாசக்கரம் நீட்டும்

 வீட்டிற்குள் நுழையும் நேர்மறையான ஆற்றல் சக்தி உங்கள் வீட்டில் கண்ணாடி மாட்டப்பட்டிருப்பதை அமைப்பை சார்ந்திருக்கும். அனைத்து கண்ணாடிகளும் அது மாட்டப்பட்டிருக்கும் இடங்களும் வாஸ்து படி இருக்கிறது என்று கூற முடியாது. நீங்கள் கண்ணாடியை பொருத்தியிருக்கும் சில முறைகள்,உங்கள் வீட்டை நேர்மறையான ஆற்றல் திறன் கொண்டதாக மாற்றும். ஆனால் கண்ணாடியை பொருத்தியிருக்கும் வேறு சில முறைகள், உங்கள் வீட்டை எதிர்மறையான ஆற்றல் திறன் கொண்டதாக மாற்றும்.

நீங்கள் வீட்டில் ஒரு கண்ணாடியை மாட்ட எண்ணுகிறீர்களா?அப்படியானால் கீழ்கூரியதை கருத்தில் கொள்ள வேண்டும். உங்கள் படுக்கை பிரதிபலிப்பதை போல கண்ணாடியை மாட்டக் கூடாது. இதனால் அதிகமாக நோய்வாய் பட்டு எதிர்மறை ஆற்றலை பெறுவீர்கள். ஒரு வேலை உங்கள் தலைவாசல் கதவை பிரதிபலிப்பதை போல கண்ணாடி வைக்கப்பட்டிருந்தால் உங்கள் வீட்டிற்குள் அனைத்து நேர்மறையான ஆற்றல் திறனும் உள்ளேறும். அதே போல் உங்கள் வீட்டில் எதிர்மறையான ஆற்றல் சக்தி கொண்டுள்ள பொருட்களை நோக்கியே கண்ணாடியை வைத்திடுங்கள். இதனால் உங்கள் வீட்டில் இருக்கும் அனைத்து எதிர்மறை ஆற்றல்கள் எல்லாம் நீங்கும் என்று வீட்டில் கண்ணாடி வைப்பதற்கான வாஸ்து கூறுகிறது.

உங்கள் குளியலறையில் கண்ணாடி வைக்க விரும்பினால், வடக்கு அல்லது கிழக்கு திசையை நோக்கி வைக்கவும். வீட்டின் நடுவே சுவர் இருந்தால், வீட்டை இணைப்பில் வைக்கும் விதமாக கண்ணாடி வைக்கலாம். இரண்டு கண்ணாடிகளை எதிரெதிரே கண்டிப்பாக வைக்க வேண்டாம். இது உங்களுக்கு அமைதியின்மையை ஏற்படுத்துவதால் வாஸ்து சாஸ்திரம் இதை கண்டிப்பாக தவிர்க்க சொல்கிறது.குளியலறையை தவிர்த்து, வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி கண்ணாடியை வைக்காதீர்கள். அது நேர்மறையான ஆற்றல்களை எடுத்துச் சென்று விடும். உங்கள் பிம்பம் பிரதிபலிக்குமாறு கண்ணாடியை வைக்காதீர்கள். அதே போல் தலைவாசல் கதவை பார்த்தவாறு கண்ணாடியை வைக்க கூடாது.