Wednesday, May 4, 2016

தியானம்

🌹வாழ்வதற்கு பிறந்தவர்கள்🌹

இலவசமாக கிடைக்கும் அற்புதமான பிரபஞ்ச சக்தி

🌹பிரபஞ்சம் என்றால் என்ன? இந்த உலகம், மற்றும் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள், கோள்கள் எல்லாம் சேர்ந்ததுதான் இந்த பிரபஞ்சம் ஆகும்.கற்பனைக்கெட்டாத விஸ்தாரணம் இந்த பிரபஞ்சம். எளிதாக புரிந்து கொள்ளுவதற்காக ஆகாயத்தை நாம் பிரபஞ்சம் என்று கொள்ளலாம். எல்லா நட்சத்திரங்களையும், கோள்களையும் தாங்கி இருப்பது வானம் தானே. அந்த ஆகாயம் எவ்வளவு சக்தி மிக்கதாய் இருந்தால் அத்தனை எடையுள்ள நட்சத்திரங்களையும், கோள்களையும் தாங்கி நிற்கும்? அது தான் பிரபஞ்ச சக்தி (Cosmic Energy) எனலாம். கடவுள் என்றும் கூறலாமே.
பிரபஞ்ச சக்தி மகத்துவமானது. அபரிதமானது. மேலும் நாம் அதை இலவசமாக பெறலாம். ஆனால் எத்தனை பேர் அந்த பிரபஞ்ச சக்தியை பயன்படுத்துகிறோம்? மிக மிகக் குறைவான மக்களே பிரபஞ்ச சக்தியின் பெருமைகளை அறிந்திருக்கின்றனர். வெகு சிலரே பிரபஞ்ச சக்தியைப் பெற்று பயன் பெறுகின்றனர். பிரபஞ்ச சக்தியை பெறுவது எப்படி?
தியானம் மூலமே நாம் பிரபஞ்ச சக்தியை உறிஞ்ச முடியும். மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்யும் போது நாம் பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு பெற முடியும். அந்த சக்தியை நாம் உள் வாங்கவும் முடியும். பிரபஞ்ச சக்தியை நாம் உள் வாங்கும் போது நம் உடலில் உள்ள நோய்கள் நீங்கும். மனம் உறுதி பெறும். நினைத்ததை சாதிக்க முடியும். மன உளைச்சல் நீங்கும்.
நம் உடலில் ஏழு சக்கரங்கள் உள்ளன. அவை தியானம் பண்ணும் போது திறக்கும். அப்பொழுது பிரபஞ்ச சக்தி நம் உடலில் பாயும். நம் வாழ்க்கை வெற்றிகரமானதாகவும், மகிழ்ச்சிகரமானதாகவும் மாறும்.

ஆயிரக்கணக்கில் செலவு செய்து வைட்டமின் மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதற்குப் பதிலாக இலவசமாக கிடைக்கும் பிரபஞ்ச சக்தியை தியானம் மூலம் பெற்று பயன் பெறலாமே?
+++++++++++++++++++++++++++++

🌹உங்கள் மனது தோல்வியை நினைத்து கொண்டு இருந்தால் 
உங்களுக்குள்ளே அடிக்கடி கூறி சொல்லுங்கள் தோல்வியின்
மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்று. உடனே அந்த தோல்வி
என்ற எண்ணம் இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும்.
உங்கள் ஆழ்மனதுதான் உங்களுடைய நடத்தைகள்
அனைத்திற்கும் காரணம். நீங்கள் ஒரு செயலை தவறு என்று
உங்கள் மனதிற்கு கூறினால் உங்கள் ஆழ்மனதும் "ஆம்"
அந்த செயல் தவறு என்று ஆமோதிக்கும்.
இல்லை நான் செய்யும் செயல் சரிதான் என்று உங்கள்
ஆழ்மனதிற்கு கூறினீர்கள் என்றால் ஆம் அந்த செயல் சரிதான்
என்று உங்கள் ஆழ்மனது உங்களுடன் சேர்ந்து துதி பாடும்.
ஆழ்மனது தான் உங்களுக்கு நடக்கும் நல்லவை கெட்டவை
அனைத்திற்கும் காரணம்.
எண்ணம் போல் வாழ்வு என்று ஏன் கூறுகிறார்கள். நீங்கள்
நல்லவற்றை நினைக்குபோது உங்கள் ஆழ்மனதில் அந்த
நல்ல எண்ணங்கள் பதிந்து உங்கள் நடத்தையும்
நல்லவையாக இருக்கும்.
கெட்டதை நினைக்கும் போது அவையும் உங்கள்
ஆழ்மனதில் பதிந்து உங்கள் நடத்தையும்
கெட்டவையாக இருக்கும்.
மனது என்பது ஒளி நாடாவை போன்றது. 
எது எப்படி இருக்கிறதோ அதை அப்படியே பதிவு செய்து
திருப்பி சொல்லும்.
ஆழ்மனது என்பது ஒரு ஜெராக்ஸ் மிஷினை போன்றது.
உள்ளதை உள்ளபடியே எடுத்து காட்டும்.
ஆழ்மனது என்பது முகம் பார்க்கும் கண்ணாடி போன்றது.
எது எப்படியோ அதை அப்படியே பிரதிபலிக்கும்.
அதனால் தோல்வி 
கரமான சிந்தனைகளுக்கு பேச்சுக்களுக்கு இடம்
கொடுக்காதீர்கள். ஏனென்றால் அவை அப்படியே உங்கள்
ஆழ்மனதில் பதியப்பட்டு உங்களுடைய் நடத்தையிலும் பேச்சிலும் வெளிப்படும்.
இந்த காரியம் நடக்காது என்னால் அங்கு போக முடியாது 
என்னால் அந்த செயலை செய்ய முடியாது என்று நினைத்தீர்கள் 
என்றால் நிச்சயம் நீங்கள் நினைப்பதுதான் நடக்கும். 
அதாவது எல்லாமே எதிர் மறையாகத்தான் நடக்கும்.
இதையே மாற்றி நினைத்து பார்த்தால் என்னால் அந்த செயலை 
செய்ய முடியும், என்னால் அங்கு போக முடியும், என்று 
நினைத்தால் நல்ல பலனையே எதிர்பார்க்கலாம். 
எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்.
நீங்கள் தடை என்று நினைக்கும் எந்த காரியமும் 
உங்களுடைய நினைப்பில்தான் உள்ளது. அந்த தடையை 
தகர்த்து எறியலாம் என்று நினைத்தீர்கள் என்றால் 
அந்த தடையை தகர்த்து எறிந்து விடுவீர்கள்.
விளையாட்டு வீரர்களை எடுத்து கொள்ளுங்கள்.
எப்படி அவர்களால புதிய சாதனைகளை படைக்க முடிகின்றது. 
சாதனைகளை படைக்க முடியாது என்று அவர்கள் 
நினைத்தால் அவர்களால் புதிய சாதனைகளை 
உண்டாக்க முடியுமா?
எனவே எந்த தடையையும் மாற்று சிந்தனை மூலம் தகர்த்து 
எறிந்து விடலாம்.
ஒரு செயலில் நீங்கள் தோல்வியை சந்திக்கிறீர்கள் என்றால் 
அதற்க்கு என்ன காரணம். பல நாட்களாக பல வாரங்களாக 
பல வருடங்களாக தோற்று விடுவீர்கள் என்று உங்களுக்குள் 
சொன்னதின் விளைவாகத்தான் இருக்கும்.
தோல்வியை நான் நம்புவதில்லை என்று மாற்றி
நினைத்து உங்களுக்குள்ளேயே கூறிக்கொண்டு 
இருங்கள். வெற்றி நிச்சயம்.
மாற்றி சிந்திப்பதற்கு உங்களுடைய மனம் ஒரு 
முக்கிய கருவியாகும். அந்த மனதை உங்களுக்கு சாதகமாக 
மாற்றி நினைப்பதற்கு ஒரு கருவி தேவை. 
அந்த கருவிதான் தியானம்.
தியானம் என்ற கருவியின் மூலமாகத்தான் உங்கள் மனதை 
மாற்றி நினைக்க வைத்து உங்கள் வெற்றியை 
அடையலாம். 

+++++++++++++++++++++++++++
பிராணாயாமம் பற்றி?★

பகவான்ஸ்ரீரமண மஹரிஷி : 

அது பற்றி என்ன? பூரகம் கும்பகம் ரேசகம் என்று அந்தக் கலைச்சொற்களை நான் பேசாமல் போனாலும், அவற்றை பயன்படுத்தலாம் என்று கூறியிருக்கிறேன்.

 மனமும் பிராணனும் ஒரே மூலத்திலிருந்தே உதிக்கின்றன. ஒன்று அடங்கினால் மற்றொன்று தானே அடங்கும்

். மூச்சை அடக்குவதை விட மனத்தை அடக்குவது எளிது.


 மூச்சை அடக்குவது என்பது பசுவைக் கட்டாயப்படுத்திப் பால் கறப்பது.

No comments:

Post a Comment