Sunday, March 1, 2015

ருத்ராக்ஷம் 1



உத்ராக்ஷம்  என்றால்
" உருத்திரர் + ஆக்கும் = உத்ராக்ஷம் "
இருபத்தோரு உருத்திராக்க மாலையையே அருளுலகப் பயிற்சி முயற்சியாளர்கள் முதன் முதலில் அணிந்துகொள்ளும் மரபு உருவாக்கப்பட்டது ஏன் ?
உருத்திராக்ஷம் என்றால்  என்ன ?
உருத்திராக்ஷம் என்றால் 
"உருத்திரர் + ஆக்கும் = உருத்திராக்ஷம்
அண்டபேரண்டமாளும் பதினெண்சித்தர்களும் வழங்கியுள்ள இந்துவேதத்திற்கும் இந்துவேத மதமான இந்துமதத்திற்கும் உரிய
  நாற்பத்தெட்டு வகைப்பட்ட கடவுள்களுக்கும்
  நாற்பத்தெட்டு வகைப்பட்ட வழிபடு நிலை யினர்களுக்கும்
  நாற்பத்தெட்டு வகைப்பட்ட சித்தர்களுக்கும்
  நாற்பத்தெட்டு வகைப்பட்ட அருளாளர்களுக்கும்
  நாற்பத்தெட்டு வகைப்பட்ட அருளாளிகளுக்கும்
  நாற்பத்தெட்டு வகைப்பட்ட அருளாடு நாயகங்களுக்கும்
  நாற்பத்தெட்டு வகைப்பட்ட மருளாளர்களுக்கும்
  நாற்பத்தெட்டு வகைப்பட்ட மருளாளிகளுக்கும்
  நாற்பத்தெட்டு வகைப்பட்ட மருளாடு நாயகங்களுக்கும்
  நாற்பத்தெட்டு வகைப்பட்ட ஈசுவராச்சாரியார்களுக்கும்
  நாற்பத்தெட்டு வகைப்பட்ட ஆதிஈசுவராச் சாரியார்களுக்கும்
  நாற்பத்தெட்டு வகைப்பட்ட சிவாச்சாரியார்களுக்கும்
  நாற்பத்தெட்டு வகைப்பட்ட ஆதிசிவாச் சாரியார்களுக்கும்
  நாற்பத்தெட்டு வகைப்பட்ட பரமாச்சாரியார்களுக்கும்
  நாற்பத்தெட்டு வகைப்பட்ட ஆதிபரமாச் சாரியார்களுக்கும்
இதுவரை தோன்றியுள்ள நாற்பது சங்கராச்சாரியார்களுக்கும் (இனிமேல் தோன்றப்போகும் எட்டு
சங்கராச்சாரியார்களுக்கும்)
இதுவரை தோன்றியுள்ள முப்பத்திரண்டு ஆதி சங்கராச்சாரியார்களுக்கும் (இனிமேல் தோன்றப்போகும் பதினாறு
ஆதிசங்கராச்சாரியார்களுக்கும்)
  நாற்பத்தெட்டு வகைப்பட்ட பத்தியாளர்களுக்கும்
  நாற்பத்தெட்டு வகைப்பட்ட சத்தியாளர்களுக்கும்
  நாற்பத்தெட்டு வகைப்பட்ட சித்தியாளர்களுக்கும்
  நாற்பத்தெட்டு வகைப்பட்ட முத்தியாளர்களுக்கும்
இந்த இருபத்தோரு அருளுலகத்தவர்களை வணங்கும் வண்ணமாகத்தான் இருபத்தோரு உருத்திராக்க மாலையையே
அருளுலகப் பயிற்சி
முயற்சியாளர்கள் முதன் முதலில் அணிந்துகொள்ளும் மரபு பதினெண்சித்தர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது;
அதாவது, மேலே பட்டியலிட்டுக் காட்டப்பட்ட இருபத்தோரு வகைப்பட்ட அருளுலகத்தவர்களும் பேசுகின்ற ஒரே ஒரு
மொழிதான் அருளூறுஅமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழி.
பின்குறிப்பு : " மனிதரை கடவுளாக்க உதவுவது உருத்திராக்ஷம் " எனவே எல்லாரும் உருத்திராக்ஷம் அணியலாம். [அதர்வான 36: :12]
உத்ராக்ஷம் முறைப்படி குருவின் அருளுடன் அணிவது உச்சிதம்.
------------------------------------------------------------------
ருத்ராக்ஷம் !!!
-உயிருள்ள ஜடப்பொருள்
உலக நிகழ்வுகள் அனைத்தும் இரு தளங்களில்
செயல்படுகிறது. இயற்கையனவை மற்றும்
செயற்கையனவை என இரு பரிமாணங்களில்
செயல்படும் நிகழ்வுகள் உலக
இயக்கத்திற்கு மூலமாக அமைந்துள்ளது.
வேதாந்தம் இதையே புருஷத்துவம் மற்றும்
ப்ரகிருதி என விளைக்குகிறது. இருவகையன
செயல் அனைத்து நிகழ்வுகளில்
பிரதிபலிக்கிறது என்பது பலருக்கு தெரியாது.
வேதாந்த உண்மையான இந்த
இரு செயல்களை புரிந்துகொண்டோமேயானால்
இயற்கையின்
செயல்படுகளை புரிந்துகொள்ளமுடியும்.
இயற்கையின் தன்மை சாஸ்வதமானது.
இயற்கை என்பது உருவக்கப்பட்டது அல்ல
இயற்கை என்னும் சொல் இருக்கிறது,
இருந்தது மற்றும் எப்பொழுதும் இருக்கும்
என்பதயே குறிக்கும்.
ப்ரகிருதி என்பது செயற்கை தன்மையை குறித்தாலும்,
இது தற்காலிகமானது மற்றும் இதன்
உருவாக்கத்திற்கு மூலம்
புருஷத்துவமே ஆகும்.
அறிவியலை எடுத்துக்கொண்டோமானால்
சக்கரம் கண்டுபிடித்தது என்பதுதான் முதல்
அறிவியல் கண்டுபிடிப்பு என கூறமுடியும் .
சக்கரத்தின் செயல்கள், வடிவம் மற்றும்
தன்மை இயற்கையில் உள்ள
பொருளை சார்ந்து இருப்பதை அறிவோம்.செயற்கை
என்பது இயற்கையின் பிரதிபிம்பம் என
கூறலாம். ஆனால் இயற்கை தன்னிகரற்றது.
ஆயுர்வேதத்தில் இந்த உலகம்
மூன்று முக்கியமான குணத்தால்
இயங்கிவருகிறது என கூறுவார்கள்.
முக்குணத்தை (தோஷங்கள்) வாத, பித்த, கப
குணம் சொல்லுவதை கேள்விப்பட்டுள்ளோம்.
இந்த இயற்கையன மூன்று குணங்கள் மனித
உடலில் சமநிலை தருவதால் நோய்
ஏற்படுவதாக ஆயுர்வேத சாஸ்திரம்
கூருகிறது. மனித உடலில் தோஷத்தில்
ஏதவது ஒன்று ஓங்கி நிற்கும்.
இயல்பான மூன்று தோஷங்கள் புருஸார்த்தம்
(இயற்கையானது) என்றும் மனித உடலில்
ஏற்படும் தோஷ ஏற்றத்தாழ்வுகள்
ப்ரகிருதித்துவம் (செயற்கையானது) என்றும்
வகைபடுத்துகிறார்கள். உபவேதமானஆயுர்வே
தத்தில் வேதாந்த சாரமான புருஷ,
ப்ரகிருதி தத்துவம் செயல்படுவதற்கான
சான்றை விளக்கியுள்ளேன்.
நமது வாழ்க்கையில்
இயற்கை,செயற்கை தத்துவம்
எவ்வாறு செயல்படுகிறது என பார்ப்போம்.
மனித உடல் என்பது இயற்கை யின் படைப்பு,
இதை புருஷார்த்தம் என கூரலாம் . ஆணும்
பெண்ணும் இணைந்து உருவாக்கும்
பொழுது புருஷத்துவம் கொண்ட மனித உடல்
ப்ருகிருதித்துவம் பெருகிறது.
நமது இயற்கையான (புருஷார்த்த) குணம் என
ஒன்று உண்டு. ஆனால் சமூக நடத்தைக்காக
நாம் உருவாக்கிய குணதிசயங்கள்
ப்ருகிருதித்துவம் எனும் செயற்கைத்
தன்மையை சாரும். நான் கூறும் இது போன்ற
உதாரணங்களால் புருஷத்துவம்
மேலானது ப்ருகிருதித்துவம் கீழானது என
எண்ணுதல் கூடாது. புருஷத்துவமும்,
பிருகிருதித்துவமும் இணைந்தால்
மட்டுமே வாழ்வியல் சிறப்பாக இயங்கும்.
இறைதன்மையை விளக்கும் மதங்கள்
இயற்கை தன்மையான புருஷத்துவமே மூலம்
என கூருகிறார்கள்.
புருஷத்துவமே அனைத்து விஷயங்களுக்கும்
ஆதாரமானது என்பது அனைத்து மதத்தின்
விளக்கம். அதனால் தான் சில மதங்கள்
ஒரே கடவுள் எனும்
கொள்கையை கொண்டுள்ளது. பாரதத்தில்
தோன்றிய மதங்கள் மட்டுமே புருஷ-ப்ருகிருத
ி இணைவே உண்மையான இறை நிலை என
ப்ரகடனப்படுத்தியது. புருஷ நிலையை சிவன்
என்றும்,ப்ருகிருதி நிலையை சக்தி என்றும்
விளக்கினார்கள். சிவன் ஆண்
தன்மை சக்தி பெண் தன்மை என விளக்க
காரணம் சிவநிலை என்பது அசைவற்றது,
சக்திநிலை என்பது அசையக்கூடியது.(
இயங்கும் தன்மை) என்ற வேறுபாட்டால் தான்.
சிவ-சக்தி நிலை என்பதை சீனர்கள்(யாங்-யன்)
என வகைப்படுத்தினார்கள். இயற்கையில்
செயற்கை தன்மையும், செயற்கையில்
இயற்கைத் தன்மையும் கலந்துள்ளது என்பதன்
கருத்தே யாங்-யன் தத்துவம் ஆகும்.
இத்தத்துவத்தின்
அடிப்படையிலேயே நமது சாஸ்திர
சம்பிரதாயங்கள் அமைந்துள்ளன.
பருத்தி என்பது இயற்கையன ஒரு தாவரம்,
இதை பயிரிட்டு,நூலாக்கி ஆடை அணிதல்
என்பது செயற்கையான செயல்பாடு.
இயற்கையான பருத்தியில் எதிர்காலத்தில்
உருவகப்போகும் ஆடையும், ஆடையில்
இயற்கையான பருத்தியும்
கலந்திருப்பது சிவசக்தி நிலையை குறிக்கும்.
இதனால்தான் சக்தி வழிபாடு செய்பவர்கள் அதிக
ஆடை அணிகலன் அணிவதும், இயற்கையான
சிவநிலையில் இருப்பவர்கள் ஜடாமுடியுடன்
நிர்வாணமாக இருப்பதும் ஆன்மீக இயல்பாக
இருக்கிறது.
சிவ தத்துவத்தில் இருக்கும் முனிவர்கள்
வைத்திருக்கும் பொருட்களை கவனித்தால்
சங்கு, ஜடாமுடி, மண்டை ஓடு,
ருத்ராஷம்,மிருக தோல் அனைத்தும்
இயற்கையாக கிடைத்த பொருட்கள்.
இந்த பொருட்களை செயற்கையாக உருவாக்க
முடியாது. சில பொருட்களை உருவாக்கினாலும்
செயற்கை என தெரிந்துவிடும். ப்ரபஞ்சத்தின்
படைப்புத் தன்மை புருஷ தன்மையிலிருந்து
துவங்குகிறது. புருஷ
தன்மை என்பது இயக்கமற்றது. புருஷத்
தன்மைக்கு கால தேச வித்தியாசம் இல்லை.
பிரகிருதிக்கு கால பரிமணமும் உண்டு. பிறந்த
குழந்தை புருஷ தன்மையில் தேச, கால
வித்யாசம் இன்றி இருக்கிறது. வளர்ந்த மனிதன்
புருஷ நிலையில்
இருந்து பிரகிருதி நிலைக்கு மாற்றமடைந்து தனக்குள்
கால மற்றும் தேச வித்தியாசத்தை அடைகிறான்.
ப்ரகிருதி நிலையை அடைந்த மனிதன் மீண்டும்
புருஷத்துவத்தை அடையவே மீண்டும் ஜபம்,
தியானம் மற்றும் யோகம் எனும் ஆன்மீக வழிகள்
உருவாக்கப்பட்டுள்ளன. செயற்கை நிலையில்
இயங்கக்கூடிய மனிதன் இயற்கை நிலை எனும்
நிர்விகல்ப சமாதியை அடைய
அவனுக்கு இயற்கையன பொருட்கள்
உதவுகிறது. இயற்கை பொருட்கள் மூலம்
மனிதன் தனது சுயதன்மையான புருஷ
நிலையை அடைய முயற்சிக்கும்
பொழுதுஅதிகம் பயன்படுவதும் எளிமையாக
கிடைப்பதும் ருத்ராஷம் எனும்
இயற்கையானமணிகள் ஆகும்.
சைவ சம்பிரதாயத்தில் மட்டும் ருத்ராஷம்
பயன்படுத்துவதாக அனைவரும் நம்புகிறார்கள்.
ஆனால் சனாதான தர்மம் என அழைக்கப்படும்
பாரத தேசத்தின் அனைத்து ஆன்மீக மார்க்கமும்
ருத்ராஷத்தை பயன்படுத்திய சான்றுகள்
உண்டு. குறிப்பாக ருத்ராஷத்தை மட்டும் நான்
இங்கு விளக்க காரணம் உண்டு. பிற ஆன்மீக
வஸ்துக்களை காட்டிலும்
ருத்ராஷத்தை பற்றி நிறைய முரண்பாடான
தகவல்கள் உலவுகிறது. தெரியவேண்டிய
விஷயம் மறைக்கப்பட்டும், தேவையற்ற
விஷயங்கள் உண்மையாக்கப்பட்டும்
மக்களிடையே குழப்பத்தை உண்டு செய்கிறது.
இந்த தெய்வீகம் நிறைந்த
ருத்ராஷத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த
வேண்டிய அவசியம் இதனாலேயே ஏற்பட்டது.
ருத்ராஷம் எனும் இயற்கையில் விளையும்
இந்த காய் (விதை) கனி வடிவம்
பெருவதில்லை.
அத்தி பூக்காது விதை அளிப்பது போல
ருத்ராஷம் விதை தன்மை கொண்டது.மித
வெப்பமும் மிதமான குளிரும் கொண்ட
பகுதிகளில் ருத்ராஷம் விளைகிறது.
நேபாள தேசம் மேலே குறிப்பிட்ட தட்ப வெட்ப
நிலையில் இருப்பதால் அதிகமான
ருத்ராஷத்தை விளைவிக்கும் நாடாக
திகழ்கிறது. இந்தியாவில் அதிக அளவில்
ருத்ராஷம் கிடைப்பதில்லை. மேலும்
ருத்ராஷத்தை பயிர் செய்து விளைவிக்க
முடியாது. ருத்ராஷ மரக்கன்று நம்
தோட்டத்தில் வளர்க்கும் பொழுது இயல்பான
வளர்சியையோ, ருத்ராஷத்தின்
வடிவத்தையோ பெறுவதில்லை. நேபாள
தேசத்தில் பெரும்பாலும் ருத்ராஷ மரத்தோட்டம்
வைத்திருப்பவர்கள் கூட
அதை ஒரு இயற்கையான வன பகுதியாக
வைத்திருக்கிறார்கள். நேபாளத்திற்குப்
பிறகு இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைப்
பகுதிகளில் ருத்ராஷம் இயற்கையாக
கிடைக்கிறது.
ருத்ராஷத்தின் வடிவம், அதில் உள்ள
துளை அனைத்தும் இயற்கையானது.
பார்க்கும்பொழுது எந்த வித செயல்படும்
இல்லாத பொருளாக தெரிந்தாலும்
ருத்ராஷத்திற்குள் புதைந்திருக்கும் ஆற்றல்
விவரிக்க முடியாத ஒன்று. சாதாரண
ஒரு மரத்தின் விதையில் என்ன ஆற்றல் இருக்க
முடியும் என எதிர்வாதம் செய்பவர்கள்
கேட்பதுண்டு.
மணல் துகள்கள் மூலம் செய்யப்பட்டு தாமிர
கம்பிகளால் இணைக்கப்பட்ட கணிப்பொறியின்
சில்லு(Chip) வேலை செய்வதையும், உலகின்
பல கிலோ மீட்டர் தூரம் இடைவெளியில்
இருக்கும் இருவரையும் தொடர்பு கொள்ள
செய்வதை நாகரீக மக்கள் நம்மில் அனேகர்
உண்டு. உயிரற்ற மணல் இது போன்ற
செயலை செய்யும்பொழுது உயிருள்ள
தாவரவிதை ஏன் இதைக்காட்டிலும் அதிக
செயல்களை செய்ய முடியாது ? என
சிந்திப்பதில்லை.
கணிப்பொறி சிப்பை மட்டும் கையில்
வைத்திருந்தால் அது வேலை செய்யாது.
அதற்கு தேவையான இணைப்புகள், மின்சாரம்
வழங்கி தகுந்த நிபுணர்களை நியமித்தால்
அவர்கள் அந்த
கணிப்பொறி சிப்பை வேலை செய்ய
வைப்பார்கள். அது போல சிறந்த
ருத்ராஷத்தை தேர்ந்தெடுத்து, ஆன்மீக ஆற்றல்
கொண்டவர்களிடம் சக்தியூட்டப் பணிந்தோம்
என்றால் அத்தகைய ருத்ராஷம் பிரஞ்சத்தின்
சிறு மாதிரி வடிவமாகி உங்களை பிரபஞ்சத்தை கையில்
வைத்திருப்பவராக மாற்றும்.
ருத்ராக்ஷம் என்பது ருத்ரனின் ஆக்ஷம் என
விளக்குபவர் உண்டு. ஆக்ஷம் என்றால் கண்ணீர்
என பொருள்பட சிவனின் கண்ணீர் என
ருத்ராக்ஷம் எனும்
சொல்லை மொழி பெயர்ப்பார்கள்.சிவன் ஏன்
அழவேண்டும்? அவருக்கு என்ன கஷ்டம்
வந்தது அழுது கண்ணீர் வடிக்கும் அளவிற்கு,
என குழப்பம் கொள்ளும் அளவிற்கு இத்தகைய
மொழிபெயர்ப்பு அமைந்து விடுகிறது. ருத்ரன்
எனும் சிவ அம்சம் அதிக ஆற்றல் வாய்ந்த,
வேகமான ஆன்ம உணர்வை ஊட்டும்
நிலையாகும். தவநிலையிலிருந்த
ு வெளிப்பட்டவுடன் அதிக வேகமான இயக்க
நிலைக்கு சிவன் மாற்றம்மடையும்
தன்மை ருத்ராம்சம் என அழைக்கப்படும்.
சூரியனின் மையம் ருத்ரமண்டலம் என
அழைக்கப்படுவதை கொண்டு ருத்ராம்சம்
என்பது எத்தகைய ஆற்றல் வாய்ந்தது என
பொருள்கொள்ளலாம். ருத்ரநிலையில்
தனது புருவ மத்தியில் உள்ள மூன்றாம்
கண்ணை திறக்கும்
பொழுது வெளிப்பட்டஆற்றல் திண்ம வடிவில்
மாற்றம் அடைவதே ருத்ராக்ஷம் என
அழைக்கிறோம்.
ஆக்ஷம் என்ற சொல்லுக்கு "
கண்ணிலிருந்து வெளிப்படுவது"
என்றும்பொருள்கொள்ளமுடியும். ருத்ரனின்
நெற்றி கண்ணிலிருந்து உதிரும் பொருள் என
சரியாக மொழி பெயர்க்க வேண்டும். இதன்
மூலம் சூரியனுக்கு ஒப்பான ஆற்றல்
கொண்டது ருத்ராக்ஷம் என்றும் மனதில்
கொள்ளவேண்டும். சூரியன்
எவ்வாறு தன்னுடைய ஆற்றல் மூலம் சூரிய
மண்டலத்தை உருவக்கியதோ அது போல
ருத்ராக்ஷம் தனது ஆற்றல் மூலம் அதன்
சூழ்நிலை முழுவதும் கட்டுப்பட்டில் வைக்கும்
சக்தி கொண்டது.
ருத்ராக்ஷத்திற்கு என சில இயல்பு குணங்கள்
உண்டு. சக்தியூட்டப்பட்ட ருத்ராக்ஷம்
அணிந்திருப்பவர்களை மிருகம் மற்றும் விஷ
ஜந்துக்கள்
தீண்டாது என்பது அறிவியலுக்கு அப்பாற்பட்ட
உண்மை. இதனால்தான் காடுகளில் தவம்செய்ய
செல்லும் ரிஷிகள் தங்களின் உடல் முழுவதும்
ருத்ராக்ஷத்தை அணிந்தார்கள்.
ருத்ராக்ஷம் என்பது நமக்கு நிகரான ஒர் உயிரின்
வடிவம் என
அறிந்து கொள்வது அவசியம்.நீங்கள்
ருத்ராக்ஷத்தை தொடர்ந்து அணிபவராக
இருந்தால் உங்களுக்கு ஏற்படும் சுக-
துக்கங்களின் வெளிப்பாடு ருத்ராக்ஷத்திலும்
தெரியும். உங்களின் உடலில் அதிகமான
உடலுக்கு ஒத்துக்கொள்ளாத வேதிப்பொருட்கள்
இருந்தால் ருத்ராக்ஷம்
தனது இயல்பு நிறத்தை மற்றிக்கொள்ளும்.
விஷபொருட்கள் உடலில் கலந்தால் ருத்ராக்ஷம்
அந்த விஷப்பொருட்களைப்
பிரித்தெடுத்து தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ள
ும் வகையில்
உடைந்து விடுவதை எனது அனுபவத்தில்
கண்டிருக்கிறேன்.
தியான நிலையில் இருப்பவர்களுக்கு சூட்சும
முறையில் ஆற்றலை கடத்துதல், அவர்களின்
ஆன்மாவுடன் உரையாடுதல் என ருத்ராக்ஷம்
ஒர் உயிராகவே செயல்படும். 108 மணிகள்
கொண்ட ருத்ராக்ஷ மாலை அணிந்து வலம்
வருபவர் ஒரு கூட்டமாக
நூற்றுக்கு மேற்பட்டவர்கள்
உலா வருவதற்கு சமமான செயலை செய்கிறார்
என்பதை உணரவேண்டும்.
ருத்ராக்ஷம் பயன்படுத்த எந்த
ஒரு கட்டுப்பாடும் இல்லை. குறிப்பிட்ட ஜாதி,
மத, இன வேறுபாடு கிடையாது. ஆண்/பெண்
என இருவரும் பயன்படுத்தலாம். வயது மற்றும்
இதர விசயங்கள் தடையாக இருக்காது. ஆனால்
ஒழுக்கமும் தூய்மையும் ருத்ராக்ஷத்திற்
கு முக்கியமான ஒன்று.
தூய்மையற்ற நிலையிலும் ஒழுக்கமற்ற
நிலையிலும் பயன்படுத்தும்
பொழுது ருத்ராக்ஷத்தின் இயல்பு நிலையான
தன்மை பாதிக்கப்படுகிறது. மேலும்
தெய்வீகமான ஒர்
பொருளை எவ்வாறு பாதுகாப்போமோ அதற்குண்டான
மரியாதை செலுத்துவது நல்லது.
எனக்கு தெரிந்த ஓர் சினிமா நடிகர்
ருத்ராக்ஷத்தை தவறாக ஃஷேன் ஷோவில்
பயன்படித்தினார். அதுவரை சிறப்பாக இருந்த
அவரின் வெற்றிகள் தடம்மாற துவங்கின.
அதனால் ருத்ராக்ஷம் பயன்படுத்தும்
பொழுது கவனம் தேவை.
குரு தீஷை பெற்றவர்கள் தினமும் ஜெபம் செய்த
பிறகு ருத்ராக்ஷ மாலையை கழுத்தில்
அணிவது நல்லது.ஜெபிக்கப்பட்ட
மந்திரமானது ருத்ரக்ஷ மாலையில்
தொடர்ந்து அதிர்வுகளை உண்டு பண்ணி அன்ரு முழுவதும்
அவர்களை ஆனந்திக்கச் செய்யும்.
மந்திர ஜெபம் செய்யாதவர்கள் கூட ஆன்மீக
ஆற்றல் வாய்ந்தவர்களிடத்தில் பிரசாதமாக
வாங்கி அணிந்து கொள்ளலாம். இதை தவிர
வேறு தன்மையில் ருத்ராக்ஷம் அணிந்தால்
அது ஓர் சாதாரண அணிகலனுக்குச் சமமானது.
வேரு விசேஷம் அதில் இல்லை.
ருத்ராக்ஷ மாலையை பயன்படுத்தும்
பொழுது நன்றாக பாதுகாப்பது முக்கியமான
ஒன்று.
பயன்படுத்த துவங்குவதற்கு முன்னால்
ஒரு வார காலம் பசு நெய்
அல்லது நல்லெண்ணையில் ஊறவைக்க
வேண்டும். பின்பு நீரால் கழுவி ஈரம் போக
துடைத்து விட்டு திருநீறில் ஒரு நாள்
முழுவதும் வைக்கவேண்டும். பின்பு காய்ச்சாத
பசும்பாலில் கழுவி நீரில்
முக்கி எடுத்து நன்றாக துடைத்துக்
கொள்ளவும். பின்பு பூஜையில்
வைத்து ஜெபங்கள் செய்து அணியலாம். இந்த
தூய்மையாக்கும்
முறையை வருடத்திற்கு ஒரு முறை செய்ய
வேண்டும். மாத
சிவராத்திரி அல்லது மஹாசிவராத்திரி அன்று அணியுமாறு தூய்மை வேலையை துவக்க
வேண்டும்.
ருத்ரக்ஷத்தை தூய்மை செய்ய
இத்தனை வேலை செய்ய வேண்டுமா என்ற
மனநிலை ஏற்படுகிறதா? இதை செய்ய
வேண்டிய அவசியத்தை நிதர்சனமான
விஷயத்திலிருந்து பார்ப்போம். உங்கள் உடலில்
மேல்தோல் முழுவதும் இல்லாமல் வெறும்
சதைப்பகுதி மட்டும் வெளியே தெரிந்தால்
உங்கள் உடல் எவ்வளவு உணர்வு மயமாக
இருக்கும். இதற்கு ஒப்பானது ருத்ராக்ஷத்தின்
உணர்வு நிலை. அதனால் தான்
மேற்பகுதியை கடினமாக்கவும்,
உணர்வு மிகாமல் சரியான நிலையை அடைய
இயற்கையான பொருள் மூலம் சுத்திகரிக்க
முயல்கிறோம்.
ருத்ராக்ஷ மணிகளில் பல வகைகள் உண்டு.
ஒன்று முதல் பதினான்கு முகங்கள்
வரை ருத்ராக்ஷ மணிகள் கிடைக்கிறது. முகம்
என்பது ருத்ரக்ஷ மணிகள் மேல் உள்ள
செங்குத்தான கோடுகள் ஆகும்.
ஆரஞ்சு பழத்தை தோல் உரித்தால் உள்
பகுதியில் ஒவ்வொரு சுளைக்கும்
இடையே தெரிவது போல உள்ள
பகுதியை முகம் என அழைக்கிறார்கள்.
ஒவ்வொரு முக தன்மைக்கு ஏற்ப ருத்ராக்ஷம்
ஆற்றலை வேறுபடுத்துகிறது என்றும்
அதன்மூலம் கிடைக்கும் பலன்கள்
வேறுபடுகிறது என்றும் கூறுகிறார்கள்.
உண்மையில் ருத்ராக்ஷத்திற்கு பலன் தருவது,
செல்வம் கொடுப்பது போன்ற செயல்
கிடையாது.நவரத்தின கல் போல இதனையும்
வியாபாரமாக்கும் யுக்தியே இந்த பிரச்சாரம்.
ருத்ரக்ஷத்தை தங்கம், தாமிரம்
அல்லது பருத்தி நூலில் மாலையாக
அணிவது நல்லது. நூலில் அணியும்
பொழுது மட்டும் நெருக்கமாக கோர்த்து அணிய
வேண்டும். ருத்ரக்ஷ
வடிவங்களுக்கு என்று சில முக்கிய செயல்கள்
உண்டு. இந்த ஒவ்வொரு வகையான
ருத்ரக்ஷமும் அடிப்படையில் ஒன்றான
செயல்களை செய்தாலும், சில பிரத்யேக
காரணங்களுக்கும் பயன்படுத்தலாம்.
1. ஐந்து முக
ருத்ராக்ஷத்தை மட்டுமே (கிரஹஸ்தர்கள்)
குடும்ப வாழ்க்கையில் உள்ளவர்கள்
பயன்படுத்தலாம்.
2. ஏக முகி என அழைக்கப்படும் ஒருமுக
ருத்ராக்ஷம் சன்யாசிகள்
மட்டுமே அணியவேண்டும். பிறர் வீட்டில் உள்ள
சாலிக்ராமம் மற்றும் விக்ரஹம் போல
வைத்து பூஜை செய்யலாம்.
3. நான்கு முக
ருத்ராக்ஷத்தை பயன்படுத்தினால் கலை நயம்,
சங்கீத ஞானம் போன்ற கலையாற்றல் வளரும்.
குழந்தை பிறப்பு இல்லாமல் சிரமப்படுபவர்கள
ுக்கு நான்கு முக
ருத்ராக்ஷத்தை பயன்படுத்துவதால் தடை நீங்க
வாய்ப்பு உண்டு.
4. துடிப்பு இல்லாமல் சோர்வுடன் இருக்கும்
பன்னிரெண்டு வயதுக்கு உட்பட்ட
குழந்தைகளுக்கு ஆறுமுக (ஷண்முகி)
ருத்ராட்சம் நல்ல பலனை அளிக்கும்.
5. மணவாழ்க்கையில் வாழ்க்கைத்
துணைவருடன் பிரிவு உள்ளவர்கள்
கௌரி சங்கர் என்ற ருத்ராட்ச
வகையை அணிந்தால் மண வாழ்க்கையில்
முன்னேற்றம் உண்டு.
தனியாக ஒரே ஒரு ருத்ராக்ஷம் அணிவதை விட
மணிமாலையாக அணிவது நல்லது. பஞ்சமுக
ருத்ராக்ஷத்தை தவிர வேறு வகையான
ருத்ராக்ஷம் அரிது. எனவே நமது பஞ்ச
ப்ராணன்களில் சக்தி நிலை மேம்பட 108
மணிகள் கொண்ட ஐந்துமுக
ருத்ராக்ஷத்தை அணிந்தால்
அனைத்து மேம்பாட்டையும் பெறலாம்.
ருத்ராக்ஷத்தில் போலியான மணிகள்
வருவதுண்டு. இதை எவ்வாறு கண்டறிவது என
குழப்பம் அனைவருக்கும் உண்டு. ருத்ராக்ஷம்
தனக்கெனசில தனித் தன்மைகளைக் கொண்டது.
தாவர வகையாக இருந்தாலும் நீரில்
மூழ்கிவிடும். மரவகைகள் நீரில் மிதப்பதைப்
போல மிதக்காது. ருத்ராக்ஷத்தில்
செயற்கையாக எதையும் இணைக்க முடியாது.
ருத்ராக்ஷ மணியின்
துளைகளுக்கு அருகே செப்பு நாணயங்களை வைத்தால்
ருத்ராக்ஷம் காந்தப்புலம் விலகுவதை போல
வேறு திசைக்கு மாற்றமடையும். ருத்ராக்ஷம்
போன்ற உருவத்தில் இருக்கும் சில மரவகைகள்
உண்டு. இதை" பத்ராட்சம் " என அழைப்பார்கள்.
இதில் சாயத்தைக் கொடுத்து ருத்ராக்ஷம் போல
விற்பனை செய்வார்கள். தகுந்த
பரிசோதனைக்குப் பிறகு வாங்குவது நல்லது.
ஜோதிட ரீதியாக ருத்ராக்ஷம்
பயன்படுமா என்றால் முடியும்
என்றே கூறலாம். ஒருமுக ருத்ராக்ஷம் முதல்
அதன் வரிசைகிரமமாக உள்ள முக அமைப்புகள்
சூரியன் முதல் சனி வரை உள்ள வானியல்
அடிப்படையான கிரக வரிசைக்கு சமமானவை.
எந்த கிரகத்தின் ஆற்றல் தேவையோ அந்த
கிரகத்தின் அமைப்பு கொண்ட ருத்ராக்ஷத்தில்
கிரகத்தின் மூலமந்திரத்தை ஜெபம்
செய்து அணியலாம்.
ருத்ராக்ஷத்தை பல லட்ச ரூபாய் விலையில்
விற்கவும் வாங்கவும் ஆட்கள் தயாராக
இருக்கிறார்கள். பத்திரிகையிலும்,
தொலைக்காட்சிகளிலும் விளம்பரம்
செய்கிறார்கள். பல கோடி ரூபாய் செல்வம் சேர
ருத்ராக்ஷம் அணியுங்கள் என பிரச்சாரம்
செய்கிறார்கள். எனக்கு தெரிந்தவரை எந்த
ஒரு உடல் முழுவதும் ருத்ராக்ஷம் அணியும்
எந்த சிவனடியாரும் கோடிஸ்வரராக
இருந்து பார்த்ததில்லை.
பிறருக்கு கோடிகளை அளிக்கும்
ருத்ராக்ஷத்தை விற்கும் வியாபாரி ஏன்
கோடீஸ்வரன் ஆவதில்லை என சிந்தித்துப்
பார்த்தால் நிதர்சனம் புரியும்.
ருத்ராக்ஷத்தைக் கொண்டு கோடீஸ்வரனாக
முடியாது. ஆனால் அண்டத்தைப் படைத்த
ஈஸ்வரனாக முடியும். லஷ்மியை அடைய
முடியாவிட்டாலும் ஆன்ம
லஷியத்தை அடையமுடியும்.
பிறப்பு இறப்பு அற்ற நிலையை அடையும்
முக்தி எனும் விருட்சத்தை வளர்க்க ருத்ராக்ஷம்
என்ற விதையை விதையுங்கள்.
ஸ்ரீருத்ராக்ஷ மகிமை
சிவநாமத்தை விரல் விட்டு எண்ணுவதை விட
ருத்ராக்ஷமணிகளால் எண்ணுவது விசேஷம்.
ருத்ராக்ஷத்தின் மகிமை அளவில்லாப்
பெருமை பெற்றது.
ஈசனுக்கு உகந்தது ருத்ராக்ஷமும்,
திருவெண்ணீறும் தான்.
ஒரு சுப முஹூர்த்த வேலையில் சதாசிவ
மூர்த்தியான திருச்சடைப் பெருமானின்
மூன்று திருநேத்ரங்களில்
இருந்து கோடிக்கணக்கான சூரியகாந்தியின்
பேரொளிப் பிரகாசம் தோன்றியது.
மூன்று கண்களிலிருந்தும் பனி நீர்த் துளிகள்
முத்திட்டு தெறித்து வீழ்ந்தன.
அன்று ஆறுமுகன் தோன்ற நுதல்
விழியினின்று எழுந்தன ஆறு தீப்பொறிகள்.
இன்று ருத்ராக்ஷம் தோன்ற தண்துளிகள்
சிந்தின.
சங்கரன் கண்களில் இருந்து தெறித்து வீழ்ந்த
நீர்த்துளிகள் நிலத்தில் வீழ்ந்து ருத்ராக்ஷ
விருக்ஷங்களாக மாறின.
அந்த அற்புதத்தைக் கண்டு, தேவர்களும்
சிவகணத்தவர்களும், முனிவர்களும்,
சிவபெருமானின் சேவடிக் கமலங்களைப்
போற்றித் துதி செய்தனர்.
லோகக்ஷேமத்துக்காக ஈசன் வித விதமான
ருத்ராக்ஷங்களை சிருஷ்டித்துள்ளார். இந்த
விருக்ஷங்களில்
இருந்து முப்பத்து எட்டு வகையான
ருத்ராக்ஷங்கள் தோன்றின.
சிவபெருமானின் வலக்கண்ணாகிய சூரியன்
எனப்படும் திருவாயில் இருந்து கபில
நிறத்தோடு தோன்றிய நீர்த்துளிகள்
பன்னிரண்டு வகையான பேதங்களோடு கூடிய
ருத்ராக்ஷங்களாக விளங்கின.
இடக் கண்ணாகிய சந்திரன் எனும் திருவாயில்
இருந்து தோன்றிய வெண்ணிறத்தோடு கூடிய
நீர்த்துளிகள் பதினாறு வகையான
பேதங்களோடு கூடிய ருத்ராக்ஷங்களாக
விளங்கின.
ருத்ராக்ஷங்களை அணிபவர் முறைப் படி சிவ
பூசை செய்து, ''ஓம் நமசிவய'' எனும் சிவ
பஞ்சாக்ஷர மந்திரத்தை ஓத வேண்டும்.
பலவிதமான ருத்ராக்ஷன்களைப்
பற்றி கீழே காணலாம்.ஏகமுக ருத்ராக்ஷம்:
சிவ சொரூபம். இதனை அணிவதால்
ப்ரும்மஹத்தி தோஷம் நிவர்த்தி ஆகிறது.
இருமுக ருத்ராக்ஷம்:
தேவ தேவனாகிய சிவசக்தி வடிவான ஸ்ரீ
அர்த்த நாரீஸ்வர சொரூபமாகும்.
இதனை அணிவதால் புத்தி பூர்வம்,
அபுத்தி பூர்வம் என்னும் இரண்டு வகையான
பாப வினைகள் நீங்குகிறது.
மூன்று முக ருத்ராக்ஷம்:
ஸ்ரீ திரேதாக்கினி ஸ்வரூபம்.
இதனை அணிவதால்
ஸ்திரீஹத்தி (பெண்கொலை பாவம்) தோஷ
நிவர்த்தி உண்டாகும்.
நான்கு முக ருத்ராக்ஷம்:
ஸ்ரீ பிரம்மா ஸ்வரூபம். இந்த
ருத்ராக்ஷத்தை அணிவதால் நரஹத்தி தோஷ
நிவர்த்தி உண்டாகும்.
ஐந்து முக ருத்ராக்ஷம்:
ஸ்ரீ காலாக்னி ருத்ர ஸ்வரூபம்;
இதனை அணிபவருக்கு சிவ அனுக்ரகம் கிட்டும்.
ஆறுமுக ருத்ராக்ஷம்:
ஸ்ரீ சுப்பிரமணிய ஸ்வரூபமானது. ஆறுமுக
ருத்ராக்ஷத்தை அணிவதால்
பிரம்மஹத்தி தோஷம் விலகும். ஸ்ரீ
சுப்பிரமணியர்- ஸ்ரீ விநாயகர் அருள் கிட்டும்.
இதனை வலது காதில்
குண்டலமாகவோ அல்லது வலது புஜத்தில்
அணிவது விசேஷ பலன்களைக் கொடுக்கும்.
ஏழுமுக ருத்ராக்ஷம்:
ஸ்ரீ ஆதிசேஷன் ஸ்வரூபம்.
இதனை அணிவோர்க்கு பிரம்மஹத்தி தோஷ
நிவர்த்தி உண்டாகும். பெரும் சம்பத்து,
ஆரோக்கியம், ஐசுவரியம், ஞானம், வாக்குத்
தூய்மை போன்ற நல்ல சுகபோகங்கள்
வாய்க்கும்.
எட்டுமுக ருத்ராக்ஷம்:
இது ஸ்ரீ மஹாகணபதி ஸ்வரூபம். அஷ்ட
வசுக்களை தெய்வமாகக் கொண்ட எட்டுமுக
ருத்ராக்ஷத்தை தரிப்பவர்களுக்கு பலவகையான
தோஷங்கள் நீங்குகின்றன.
ஒன்பதுமுக ருத்ராக்ஷம்:
இதனை ஸ்ரீ காலபைரவ ருத்ராக்ஷம் எனவும்
கூறுவார். இது சிகப்பு நிறமுடையதாக
இருக்கும். இதன் அதிர்ஷ்ட தேவதை அம்பிகை.
இதனை இடது கையில் தரிப்பவர்கள் சிவ
ரூபமாகவே கருதப்படுகிறார்கள்.
புத்தி முத்திகளை கொடுக்க வல்லது.
பத்துமுக ருத்ராக்ஷம்:
இது விஷ்ணு ச்வரூபமாகும். தச
திக்குகளுக்கு தேவதைகளின் சொரூபமாக
விளங்கும் இந்த ருத்ராக்ஷத்தை தரிப்பவர்களுக்க
ு அந்தந்த தேவதைகளின் ப்ரீதி கிட்டும்.
கிரஹதோஷங்களையும், பூத பேய்
பிசாசுகளை விரட்டும். சர்ப்ப விஷங்களையும்
போக்கும்.
பதினோரு முக ருத்ராக்ஷம்:
இது ஸ்ரீ ஏகாதச ருத்ரரின் ச்வரூபமாகும். இந்த
ருத்ராக்ஷத்தின் பதினொரு முகங்களும்
பதினொரு ருத்ர ஸ்வரூபங்களைக் குறிக்கும்.
அவை: போலி - பிங்கள - பீம - விரூபாக்ஷ -
வியோகித - சாஸ்தா - அஜபாத - அஹிர்புத்தீய
- சம்பு - சண்ட - பவ. இதனை சிரசில்
தரிப்பதால் ஆயிரம் அஸ்வமேத
யாகங்களை நடத்திய பலனும், கோடி கோதானம்
செய்த பலனும் உண்டாகும்.
பன்னிருமுக ருத்ராக்ஷம்:
ஸ்ரீ துவாதசாதித்யர் ஸ்வரூபம்.
இதனை அணி

No comments:

Post a Comment