Sunday, March 1, 2015

திருநீறு

திருநீறு !!!

எத்தகையினராக இருந்தாலும், மரணத்திற்குப்
பின் இறுதியில் தீயில்தத்துவத்தை உணர்த்தி,
நாமும் இதுபோல்தான்; ஆகையால்
தூய்மையாக, அறநெறியில்
இறைச்சிந்தனையோடு வாழவேண்டுமென
உணர்த்துகிறது. சைவத்தின் முழுமுதற்
கடவுளான சிவனை இது குறிப்பதாக சைவர்கள்
நம்புகின்றனர். ஞானம் என்னும் நெருப்பில்
அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின்
எஞ்சுவது பரிசுத்தமான
சிவதத்துவமே என்பதை விபூதி குறிக்கின்றது.
வெந்து அனைவரும் பிடி சாம்பலாக ஆவார்.

திருநீற்றை நான்கு வகைகளாகப் பிரிக்கின்றனர். அவை

கல்பம், அணுகல்பம், உபகல்பம், அகல்பம்

கல்பம்:
கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின்
சாணத்தைப் பூமியில்
விழாது தாமரை இலையில்
பிடித்து உருண்டையாக்கி பஞ்ச பிரம்ம
மந்திரங்களால் சிவாக்கினியில்
எரித்து எடுப்பதே கல்பத் திருநீறு எனப்படும்.

அணுகல்பம்
ஆரண்யங்களில் (காடுகளில்) கிடைக்கும்
பசுஞ்சாணங்களைக்
கொண்டு முறைப்படி தயாரிக்கப்படுவது
அணுகல்பத் திருநீறு எனப்படும்.

உபகல்பம்
மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும்
இடங்களில் இருந்து எடுத்த சாணத்தைக்
காட்டுத்தீயில் எரித்து, பின்பு சிவாக்கினியில்
எரித்து எடுக்கப்படுவது உபகல்பத்
திருநீறு எனப்படும்.

அகல்பம்
அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும்
சாணத்தைச் சுள்ளிகளால்
எரித்து எடுப்பது அகல்பத் திருநீறு எனப்படும்.

அணியும் காரணம் !!!
"மந்திரமாவது நீறு" - திருஞானசம்பந்தர்,
திருநீற்றுப் பதிகம். மன் + திறம் = மந்திரம்.
மும்மலங்களையும் சாம்பலாக்கி அழித்தபின்
எஞ்சியது நீறு. நீறிடுதல் என்பது மாசற்ற சுத்த
சாந்த நிலைக்கு அடையாளமும் ஆகும்.
புருவ நடுவே தியான நிலை;ஆத்ம பிரகாசம்
உள்ளது.அப்பகுதியில் முக்கோண வடிவாக
எரிவதை யோகியர் என்பர், அவ்விடத்தில்
தியானம் ஊன்ற வேண்டுமென்பதற்ககவே 
சந்தனம், குங்குமம், திருநீறு, திருமண்
முதலியவற்றினை இடுவர். புருவ நடுவின்
மேல் நெற்றியின் சஹஸ்ராரத்தில்
துரியவெளியுள்ளது. அவ்விடத்தில்
அருட்சோதி தோன்றுவதனைக்
குறிக்கவே நீறு இடுவர்.[1]
இது தற்பொழுது உள்ள குறிப்பு.
1.இருபுருவங்களின் நடுப்பகுதியில் மிக
நுண்ணிய நரம்பு அதிர்வு நிலை உள்ளது.
அதனால் மன வசியம் (hypnotisers) எளிதாக
வசியம் செய்ய முடியும் என்பதற்காகவே,
நெற்றியில் திலகமும், திருநீறு, திருமண்
போன்றவற்றை இடுவது வழக்கம்.
2.அருட்சோதி புருவ நடுவில்
தோன்றுவது இல்லை. அது கபாலக்
குகைக்குள்தான் தோன்றும். புருவ
நடுப்பகுதி வழியாகக் கபாலக் குகைக்குள்
நுழைய முடியும் என்பதைக் குறிக்க
வேண்டுமாகில்
திருக்குறிகளை அங்கு இட்டிருக்கலாம்.
அணியும் காரணம் -- மற்றொரு விளக்கம்
மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய
பாகம், அதன் வழியாக மிக அதிக மாக
சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும்.
இது ஒரு
வர்ம ஸாதனம் கூட.
சூரிய கதிர்களின்
சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும்
வேலையை திருநீர் செவ்வனே செய்யும்,
அதனால்தான் நெற்றியில்
திருநீறு பூசுகிறார்கள்.
மற்றவர்களின் பார்வையினால் வெளிப்படும்
சக்திகளும்
அவர்களுக்கு தெரியாமலேயே நெற்றி வழியாக
அதிகம் கவரப்படும்,
அவர்களை தன்னிலை இழக்கச்செய்வதும்
வசப்படுத்துவதும் இதன் மூலமாக எளிதாக
செய்துவிடலாம். மனோ தத்துவம்,
ஹிப்னாட்டிஸம், மெஸ்மரிஸம்
போன்றவற்றிலும் இங்கே பார்வையும் மன
எண்ணங்களும் முக்கிய இடம் வகிக்கிறது.
கண்ணேறு என்று சொல்லப்படும்
தேவையில்லாத எண்ணங்கள்
ஊடுறுவதை தடுக்கவும் திருநீறு இடப்படும்.
ஆக்ஞா தியானம் செய்பவர்களுக்கு உடல் மிக
வெப்பம் அதிகரிக்கும். அந்நேரம் சூடு தணிய
இங்கே சந்தனம் பூசுவார்கள்.
மருத்துவ ரீதியாக உடலுக்கு மிக முக்கியமான
ஹார்மோன் சுரக்கும்
பிட்யூட்டிரி சுரப்பியை தூண்டச்செய்யும்
இடம் இந்த நெற்றி ஆகும், ஆக்ஞா தியானம்
என்பதே இந்த சுரப்பியை தூண்டத்தான்.
இது தொடக்கம்.
நீறில்லா நெற்றி பாழ். என்பார்கள்.
எரிவது என்றால் தீயோடு எரிவது. தீ
இல்லாமல் வெறும் கனலால் எரிவதை நீறுதல்
என்பார்கள். சுண்ணாம்பு தயாரிக்க
சிப்பி தோடையும் வெறும் நீரையும் சேர்க்கும்
போது அது நீறத்துவங்கும் கொதிக்கும்,
நெருப்பு இல்லாமல் புகையும், அதில்
நெருப்பு இல்லை. ஒரு வகை வேதி வினை.
அதை நீற்றுதல் என்பார்கள். அதை போல
நீற்றி எடுக்கப்பட்டது திருநீறு.
ஆக்ஞா (நெற்றி) தியானம்
மேலும் நெற்றி என்பதை இதே போல நீற்ற
வேண்டும், நீறிக்கொண்டிருக்க வேண்டும்,
அதாவது சுண்டு விரலை நமது நெற்றிப்பொட்டில
் தொட்டும் தொடாமலும் நேராக பிடித்தால்
நெற்றியில் ஒருவித உணர்வு ஏற்படும். அந்த
உணர்வை அப்படியே வைத்து தியானம்
செய்யவது ஆக்ஞா (நெற்றி) தியானம்,
இது குண்டலினி யோகாவின் தொடக்கம்,
இதை வேதாத்ரி மகரிஷிஸ
ஈஷா யோகோ போன்ற இடங்களில் சென்றால்
சொல்லித்தருவார்கள்.
பண்டைய சித்தர்கள் சொல்லிச்சென்ற உயிர்
வளர்ப்பு முறையின் தொடக்கம் இது.
இதை முறையாக செய்தால் நம் சிந்தனைகள்
சீர்படும், மற்றவரை விட அதிகமாக
சிந்திக்கலாம். மனம் ஒருநிலைப்படும்.
எதையும் எளிதாக புரிந்து கொள்ள முடியும்,
காரிய சித்தி உருவாகும்.
இதை முறையாக செய்யவேண்டும், இந்த
தியானம் செய்தால் கண்டிப்பாக
சாந்தி தியானமும் செய்யவேண்டும்,
இல்லையென்றால் அது ஒற்றைத்
தலைவேதனையில்
கொண்டுவந்து விட்டுவிடும்.
இதை நம்மிலேயே வைத்துக்கொண்டு செய்யாமல்
இருப்பது பாழ். அதுதான் நீறில்லா நெற்றி பாழ்.
கற்றது கையளவு கல்லாதது உலகளவு
அணியும் முறை !!!
வடதிசை அல்லது கிழக்கு திசையையாவது நோக்கி நின்றுகொண்டு,
கீழே சிந்தாமல், வலது கையின்
ஆட்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல்
ஆகிய மூன்று விரல்களால்
திருநீறை எடுத்து அண்ணாந்து நின்று,
பூசிக்கொள்ளல் வேண்டும். எடுக்கும்
போது திருச்சிற்றம்பலம் என்றும் பூசும்
போது சிவாயநமசிவசிவ
என்று உதடு பிரியாது மனம் ஒன்றிச் சொல்லிக்
கொள்ளுதல் வேண்டும்.
ஒன்று நெற்றி முழுவதும் அல்லது 3
படுக்கை வசக் கோடுகளாகத் தரிக்க வேண்டும்.
காலை, மாலை, பூசைக்கு முன்னும் பின்னும்,
ஆலயம் செல்வதற்கு முன்னும், இரவு உறங்கப்
போவதற்கு முன்னும் திருநீறு தரிக்க
வேண்டும். அல்லது
அணியும் இடங்கள் !!!
உடலில் திருநீறு அணியக்கூடிய இடங்களாகப்
பதினெட்டு இடங்கள் குறிப்பிடப்படுகின்றன.
அவை
தலை நடுவில் (உச்சி)
நெற்றி
மார்பு
தொப்புளுக்கு(கொப்பூழ்) சற்று மேல்.
இடது தோள்
வலது தோள்
இடது கையின் நடுவில்
வலது கையின் நடுவில்
இடது மணிக்கட்டு
வலது மணிக்கட்டு
இடது இடுப்பு
வலது இடுப்பு
இடது கால் நடுவில்
வலது கால் நடுவில்
முதுகுக்குக் கீழ்
கழுத்து
பொட்டு
பலன்கள் !!!
திருநீறு அணிவதால் தடையற்ற இறைச்
சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள், குறைவற்ற
செல்வம், நல்வாக்கு, நல்லோர் நட்பு, போன்ற
எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம்.
உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படும்.
பாவங்கள் என வரையறுக்கப்
பட்டவைகளை ஒதுக்கும் மனப் பாங்கும்,
தொல்லைகள் அனைத்தையும் அழித்தும்
அனைத்துப் பேறுகளையும் அளித்துப் பிறவிப்
பிணி அறுத்து மோக்கம்(மோட்சம்) செல்ல
வழிகாட்டும். இதைத்தான் திருமூலர் பின்வரும்
பாடலில் தெரிவிக்கிறார்.
கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே!

++++++++++++++++++

திருநீற்று இயல்

1. சைவ சமயத்தோர் உடம்பில் அணிய வேண்டிய அடையாளம் யாது?

திருநீறு 

2.    திருநீறாவது யாது?

பசுவின் சாணத்தை நெருப்பில் சுடுதலால் உண்டாகிய திருநீறு. 

3.    எந்த நிறத் திருநீறு பூசத்தக்கது?

வெள்ளை நிறத் திருநீறு. 

4.    திருநீற்றினை எதில் வைத்துக் கொண்டு அணிய வேண்டும்?

பட்டுப் பையிலோ, சம்புடத்திலோ வைத்துக் கொண்டு அணிய வேண்டும். 

5.    திருநீற்றினை எத்திக்கு முகமாக இருந்து அணிதல் வேண்டும்?

வடக்கு முகமாகவே, கிழக்கு முகமாகவே இருந்து அணியலாம். 

6.    திருநீற்றினை எப்படி அணிய வேண்டும்?

நிலத்தில் சிந்தாத வண்ணம் அண்ணாந்து ‘சிவசிவ / நமசிவாய / சிவாயநம' என்று சொல்லி, வலக்கையின் நடு மூன்று விரலினாலும் நெற்றியில் அணிதல் வேண்டும். 

7.    திருநீறு நிலத்தில் சிந்திவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

சிந்திய திருநீற்றினை உடனே எடுத்து விட்டு, மேலும் அந்த இடத்தில் துடைத்தெடுக்க வேண்டும். 

8.    திருநீற்றினை நடந்து கொண்டோ, படுத்துக்கொண்டோ பூசலாமா?

கூடாது. 

9.    திருநீற்றினைக் கட்டாயமாக அணிய வேண்டிய நேரங்கள் யாவை?

தூங்கப் போகும் போதும், தூங்கி எழுந்த போதும், பல் துளக்கிய உடனும், குளித்த உடனும், உணவு உண்ணும் முன்னும், உண்ட பின்னும், சூரியன் தோன்றி மறையும் போதும் திருநீறு அணிய வேண்டும். 

10.    ஆசாரியார், சிவனடியார் திருநீறு தந்தால் எப்படி வாங்குதல் வேண்டும்?

விழுந்து வணங்கி எழுந்து கும்பிட்டு இரண்டு கைகளையும் நீட்டி வாங்குதல் வேண்டும். 

11.    கடவுள் முன்னும், குரு முன்னும், அடியார் முன்னும் எப்படி நின்று திருநீறு அணிய வேண்டும்?

முகத்தை திருப்பி நின்று அணிய வேண்டும். 

12.    திருநீறு அணிதல் எத்தனை வகைப்படும்?

இரண்டு வகைப்படும், அவை : 1. நீர் கலவாது பொடியாக (உத்தூளனம்) அணிதல், 2. நீர் கலந்து முக்குறியாக ( திரி புண்டரம் ) அணிதல். (ஹோமம் செய்த நீற்றினை நெய்யில் குழைத்து அணிதல் ரக்ஷை எனப் பெயர் பெறும்.) 

13.    திரிபுண்டரமாகத் தரிப்பதன் அறிகுறி யென்ன?

ஆணவம், கன்மம், மாயை யென்னும் மூன்று மலங்களையும் நீக்குமென்கிற குறிப்புத்தோன்றத் தரிப்பதாம். 

14.    முக்குறியாக அணியத்தக்க இடங்கள் யாவை?

தலை, நெற்றி, மார்பு, கொப்பூழ், முழந்தாள்கள் இரண்டு, புயங்கள் இரண்டு, முழங்கைகள் இரண்டு, மணிக்கட்டுகள் இரண்டு, விலாப்புறம் இரண்டு, முதுகு, கழுத்து என்னும் பதினாறு இடங்களாம். 

15.    முக்குறியாக அணியும் போது நெற்றியில் எவ்வளவு நீளம் அணிய வேண்டும்?

இரண்டு கடைப் புருவ எல்லை வரை அணிய வேண்டும். அதற்குக் கூடாமலும் குறையாமலும் அணிய வேண்டும். 

16.    மார்பிலும், புயங்களிலும் எவ்வளவு நீளம் அணிய வேண்டும்?

அவ்வாறங்குல நீளம் அணிய வேண்டும். 

17.    மற்றைய இடங்களில் எவ்வளவு நீளம் அணிய வேண்டும்?

ஒவ்வோர் அங்குல நீளம் அணிய வேண்டும். 

18.    முக்குறிகளின் இடைவெளி எவ்வளவினதாய் இருத்தல் வேண்டும்?

ஒவ்வோர் அங்குல அளவினதாய் இருத்தல் வேண்டும். ஒன்றை ஒன்று தீண்டலாகாது. 

19.    சைவ சமயத்துக்கு விபூதி ருத்திராக்ஷம் முக்கியமானதற்குக் காரணமென்ன?

பரமசிவனுடைய திருமேனியிலும் திருநேத்திரத்திலும் உண்டானமையால் முக்கியமாயின. 

20.    அவைக ளுண்டான வகை எப்படி?

பரமசிவனுடைய அக்கினிபோன்ற திருமேனிமேல் இயல்பாகப் பூத்ததுவே அனாதியான விபூதி. பின்பு தேவர் முதலிய சராசரங்களையெல்லாம் இறுதிக்காலத்தில் நீறாக்கித் தம்முடைய திருமேனியில் தரித்தருளினாரே அது ஆதி விபூதி. நெருப்பின்மேல் நீறுபூத்திருப்பதை இப்போதும் திருஷ்டாந்தமாகக் காணலாம். 

21.    அதனை அணிவதனால் பயன் என்ன?

மாபாதகங்களெல்லாம் நீங்குமென்றும் அப்படிக்கொண்ட விபூதியை பசுவின் சாணத்தினால் விளைக்க வேண்டுமென்றும் அப்படி விளைப்பதில் கற்பம், அநுகற்பம், உபகற்பமென மூன்று விதியுண்டென்றும் அவற்றுள் ஒரு விதிப்படி விளைவித்துத் தரித்துகொள்ள வேண்டுமென்றும் ஆகமங்கள் சொல்லுகின்றன. 

22.    கற்பவிதி யாவ தெப்படிக்கொத்தது?

நோயற்ற நல்லபசுக்களைப் பரிசுத்தமுள்ள தொழுவத்திற் சேர்த்து அவைகளிடுகிற சாணத்தைப் பூமியில் விழவிடாமல் தாமரையிலையில் சத்தியோசாத மந்திரத்தால் எடுத்துக் கொண்டு மேலுள்ள வழுவை நீக்கிவிட்டு, வாமதேவத்தாற் பஞ்சகவ்வியம் விட்டு, அகோரத்தால் பிசைந்து, தற்புருடத்தால் உருண்டையாக்கி சிவ மந்திர ஓமத்தால் உண்டான சிவாக்கினியில் சிவபெருமான் திருவடிகளை நினைந்து இட்டுப் பக்குவமாக வெந்த பிற்பாடு எடுத்துப் புதுப்பானையிலிட்டு வேண்டியமட்டில் விபூதிக் கோவிலில் வைத்துக் கொண்டு பூமியில் சிந்தாமல் தரித்துக்கொண்டால் செனன மரணதுக்கம் நீங்கி மோக்ஷமடையலாம். இவ்வாறு விளைவிப்பதுதான் கற்பவிதி. சாணத்தை யேந்தும்போதும் அக்கினியி விடும் போதும் வெந்தபின்பு எடுக்கும்போதும் புதுப்பானையில் வைக்கும்போதும் மந்திரஞ் சொல்லவேண்டும். 

23.    அனுகற்பவிதி எப்படி விளைவிப்பது?

காட்டிலுலர்ந்த பசுவின் சாணத்தை யுதிர்த்துக்கோசலம் விட்டுப் பிசைந்து சிவாக்கினியி லிட்டுப் பக்குவப்படுத்துவதாம். 

24.    உபகற்ப விபூதியாவது யாது?

இயல்பாக வெந்த காட்டுச்சாம்பல் சிவாலய மடைப்பள்ளிச் சாம்பல் இவைகளையெடுத்துக் கோசலம்விட்டுப் பிசைந்து உண்டாக்கி சிவாக்கினியிலிட்டுப் பக்குவப்படுத்தி முன்போல் எடுத்து வைத்துக்கொண்டு தரித்துக்கொள்ளுவதாம். 

25.    விபூதிக்கோவில் எதனாலமைக்கப்பட்டது?

வஸ்திரம், புலித்தோல், மான்தோல் இவைகளால் அமைக்கவேண்டும். இவையேயன்றி வேறுமுண்டு. 



No comments:

Post a Comment