Tuesday, June 16, 2015

பசு / பசு மாடு / Cow


பசு பற்றி தகவல்கள்:
1. இந்தியாவில் குஜராத் மாநிலத்தில்தான் பசுவதைத் தடை சட்டம் மிகத் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
2. நேபாளம் நாட்டில் பசுவை கவுரவிக்கும் வகையில் அதை அந்த நாட்டின் தேசிய விலங்காக அறிவித்துள்ளனர்.
3. பகவான் கண்ணபிரானுக்கு மிக, மிக பிடித்தது பசுதான். எனவேதான் அவர் தன்னை கோபாலகிருஷ்ணன் என்று அழைக்கும்படி கூறினார்.
4. கோபூஜை நடத்தும் போது கண்டிப்பாக பசுவுடன் அதன் கன்றும் இருக்க வேண்டும்.
5. பசுவின் வாயில் கலிதேவதை இருப்பதால்தான் பசு முன் பகுதியில் பூஜை செய்யப்படுவது இல்லை.
6. சஷ்டியப்பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற நாட்களில் பசு தானம் செய்தால் கூடுதல் புண்ணியம் கிடைக்கும்.
7. ஒரு பசு முதல் கன்று பிரசவித்ததும், அதை தேனு என்பார்கள். இரண்டாவது கன்று பிரசவித்ததும் அதற்கு ``கோ'' என்றழைப்பார்கள். எனவே இரண்டாவது கன்று பிரசவித்த பசுவைத்தான் கோ பூஜைக்கு பயன்படுத்துவார்கள்.
8. காமதேனு பசு மூவுலகிற்கும் தாயாக கருதப்படுகிறது.
9. பசுவின் கால் தூசி நம் மீது படுவது கங்கையில் புனித நீராடலுக்கு சமம் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
10. பசுவுக்கு தினமும் பூஜை செய்வது என்பது பராசக்திக்கு பூஜை செய்வதற்கு சமமாகும்.
11. பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும், அஷ்ட வசுக்களும், நவக்கிரகங்களும் ஆட்சி செய்கின்றனர்.
12. கோபூஜை செய்வதால் கிடைக்கும் உடனடி நன்மை என்ன தெரியுமா? பணக் கஷ்டம் நீங்கும்.
13. பசுவை 108 போற்றி சொல்லி வழிபட்டால் பல புராதனக் கோவில்களுக்கு சென்று வந்த பலன் கிடைக்கும்.
14. வீட்டில் பசு வளர்ப்பது செல்வ செழிப்பை உண்டாக்கும்.
15. பசுவுக்கு அகத்திக்கீரை கொடுக்க இயலாவிட்டால் வாழைப்பழம் வாங்கிக் கொடுக்கலாம்.
16. பசுக்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை கேட்க முடியாது. எனவே குறிப்பறிந்து பசுக்களுக்கு உதவ வேண்டும்.
17. பசுக்களை அடிக்கடி நீர் நிலைகளில் நீந்தி குளிக்க வைப்பது நல்லது.
18. பசுவின் கோசலத்தில் (கோ முத்திரம்) அதிகமான நன்மை பயக்கும் நுண் உயிர்கள் வாழ்கிறது.
19. உங்களால் வீட்டில் உள்ள பசுவை பராமரிக்க இயலாவிட்டால், அதை அடி மாடாக விற்காமல், ஏதாவது ஒரு கோ சாலையில் சேர்த்து விடுவது நல்லது.
20. பசுக்கள் இறந்தால், அவற்றுக்கு உரிய முறையில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட வேண்டும்.
21. பசுவையும் கன்றையும் பிரிக்கும் பாவத்தை ஒரு போதும் செய்யக் கூடாது.
22. பசுவானது பால் கறக்கும் நிலையில் இருக்கும் போது தானம்
செய்வதுதான் மிக சிறந்த தானமாகும். பால் கறக்கும் பாத்திரமும் கொடுப்பது இன்னும் சிறப்பானது.
23. சிலர் பசுவுடன் காளையையும் சேர்த்து தானம் அளிப்பார்கள். இந்த தானம் கூடுதல் பலன் தருவதாகும்.
24. ஒரு காரியம் வெற்றி அடைய வேண்டும் என்று விரும்புகிறீர்களாப அதற்காக கோ தானம் செய்து பாருங்கள். நிச்சயம் வெற்றி உண்டாகும்.
25. பசு தானம் வாங்குபவர்கள் லட்சம் தடவை காயத்ரி மந்திரம் சொன்னால் சுமை குறையும்.
26. ஏதாவது மங்கல நிகழ்ச்சி நடக்கும்போது பசுதானம் செய்தால், அதற்குரிய நன்மை கிடைக்கும்.
27. பசு தானம் கொடுக்கும் போது ஜெர்சி இன பசுக்களை தானம் வழங்கக் கூடாது. நாட்டு பசுவையே தானமாக கொடுக்க வேண்டும்.
28. சனீஸ்வரனுக்கு காராம்பசு தானம் கொடுப்பது நல்லது.
29. சூரிய பலம் பெற விரும்புபவர்கள் சிவப்பு நிற பசுவை தானமாக கொடுக்க வேண்டும்.
30. பசுவை மாடு என்று அழைக்காமல் பசுத்தாய், கோமாதா என்று அழைத்தால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும்.
31. நன்றாக பால் கறக்கும் பசுக்களை காசியில் தானம் செய்தால், அவர்களது 7 தலைமுறை பலன் அடையும்.
32. ராமேசுவரத்தில் காராம் பசு தானம் செய்தால் ஆண் வாரிசு கிடைக்க வாய்ப்புள்ளது.
33. ஒரு பசுவை ஒருவருக்கு மட்டுமே தானமாக கொடுக்க வேண்டும்.
34. மரணப்படுக்கையில் இருக்கும் ஒருவர், அவரது பாவங்கள் நீங்கி நற்கதி அடைய பசு தானம் செய்வதை நம் முன்னோர்கள் வழக்கமாக வைத்திருந்தனர்.
35. பித்ருபூஜை செய்யும் போது பசு தானம் கொடுப்பது மிகுந்த நன்மை தரும்.
36. ஒரு பெண் ருதுவானதும் தோஷங்கள் நீங்க பசுக்களை தானம் செய்யலாம்.
37. கோவில்களில் விளக்கேற்ற பசுக்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் தானம் செய்வதை ஆதி தமிழர்கள் வழக்கத்தில் வைத்திருந்தனர்.
38. பசு தானம் அடிக்கடி செய்வது வம்ச விருத்தியை உறுதி செய்யும் என்று தர்ம சாஸ்திரம் கூறுகிறது.
39. பசுவையும் கன்றையும் யார் ஒருவர் நன்கு பராமரிப்பு செய்கிறாரோ, அவரது இருபத்தோரு தலைமுறைக்கு நற்கதி உண்டாகும்.
40. கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கறுப்பு நிற பசுவை தானம் செய்தால் பரிகாரம் உண்டாகும்.
41. திருவண்ணாமலை கிரிவல பாதையில் நிறைய பேர் பசுவுக்கு அகத்திகீரை வாங்கிக் கொடுப்பதை பார்த்து இருப்பீர்கள். பசுவுக்கு ஒரு தடவை அகத்தி கீரை கொடுத்தாலே, பிறவி பாவம் விலகும் என்பது ஐதீகம்.
42. நம் வீட்டில் பசு வளர்க்க வாய்ப்பு இல்லை யெனில் பசு வைத்திருப் பவர்களுக்கு நாமாக உதவ வேண்டும்.
43. வீட்டில் பசு இல்லாதவர்கள் அன்றாடம் ஒரு வேளையாவது ஏதாவது பசுவிற்கு ஒருபிடி அறுகம் புல்லோ, வாழைப்பழமோ, அகத்திக் கீரையோ, பிறதீவனமோ கொடுக்க வேண்டும்.
44. வெளிப்புறம் மேயும் பசுக்களுக்கு நம் வீட்டின் அல்லது தோட்டத்தின் வெளிப்புறம் தண்ணீர் தொட்டி அமைக்கலாம்.
45. பசுக்கள் தொழுவத்தில் கட்டிப் போடப்பட்டிருக்கும் வரை சாணத்தையும், கோசலத்தையும் அவ்வப்போது அப்புறப்படுத்தி தொழுவத்தைக் கழுவிவிட வேண்டும்.
46. விளை நிலங்களில் சிறு பகுதியையாவது வருடந்தோறும் மாறி மாறித் தரிசாக விடுவது நிலங்களுக்கு நல்லது. மாடுகளுக்கும் புல் மேய்விடம் கிடைக்கும்.
47. வசதியுள்ளவர்கள் வழிப்போக்கு மாடுகளுக்காக சிறிதளவு வைக்ககோல் போட்டு வைக்க வேண்டும்.
48. பசுங்கன்று பால் மணம் மாறும் முன்பே சினைப்படுத்தி, கன்று ஈனச் செய்து பால் கறப்பது முறையல்ல.

49. நமக்கு வருவாய் அளிக்க இயலாத நலிந்த பசு மாடுகளை, பசுக்களை பராமரிக்கும் பசு மடங்களிலும் தொழுவங்களிலும் சேர்ப்பிக்க வேண்டும்

++++++++++++++++++++++++++++++++++++++++++++
பசு மாடு புல்,புண்ணாக்கு போன்றவ்ற்றை உண்ணுகிறது.பசு மாடு கன்று போட்டு பால் தரும் இனத்தைச் சேர்ந்தது.பசு மாடு நமக்குப் பால் தருகிறது.தாயிடம் பால் அருந்த முடியாத குழந்தைகளுக்கு பசும் பால் உணவாகிறது.இவ்வாறு பல உயிர்களைக் காப்பதினால்தான் பசுமாட்டை "கோமாதா" என்று அழைக்கிறோம்.(கோ- என்றால் பசு.மாதா- என்றால் அம்மா.)
இந்துக்கள் பசு மாட்டைத் தெய்வமாக மதித்து வழிபடுகின்றனர்.பெண்கள் பசு மாட்டிற்கு பூஜை செய்வது உண்டு.
பசுவின் சிறு நீர் "கோமயம்" என்று அழைக்கப்படுகிறது.இது நல்ல கிருமி நாசினி என்றும் இதனை வீட்டில் தெளித்தால் வீட்டில் உள்ள கிருமிகள் இறந்து போகும் என்றும் நம்புகின்றனர்.
பசுவின் சாணத்தைக் கொண்டு வீட்டின் தரையை மெழுகுவார்கள்.பசுஞ்சாணமும் நல்ல கிருமி நாசினி ஆகும்.
பசு மாட்டின் சாணம், சிறுநீர் போன்றவற்றைக் கலந்து தயாரிக்கப் படும் "பஞ்ச கவ்யம்" பயிர்களுக்கு சிறந்த உரமாக ஆகிறது.
Da morgannwgbach.jpg



--------------------------------------------------------------------------------
கோவின் மலமும் பரிசுத்தம்!
Lord Krishna with Cow-3
Jaya Jaya Shankara Hara Hara Shankara – Is there is anything in Gho Matha that is considered inferior? All the other 24 lakh species including humans have something inferior in them which goes to show how divine and pure Gho Matha is. Jai Gho Matha !
எதிரிடையாகத் தோன்றுகிறவையும் பசுவிடத்தில் ஒன்று சேர்கின்றன. ரக்த ஸமானமான அதன் க்ஷீரம் புத்தியைக் கெடுப்பதற்குப் பதில் சுத்தப்படுத்துவதைச் சொன்னேன்; உடம்புக்கு சக்தியைக் கொடுப்பதே உள்ளத்துக்கும் சுத்தி தருவதைச் சொன்னேன். இதைவிடவும் எதிரிடையான இன்னொன்று, அதனுடைய கழிவுப் பொருளான கோமயம் என்கிற சாணமும் பரிசுத்தப்படுத்துவதுதான். அது உடம்பு, உள்ளம் இரண்டையும் சுத்தி செய்வதாக இருக்கிறது. கழிவுப் பொருளான மலம்தான் பொதுவில் மிகவும் அசுத்தமானதாக இருப்பது; நோய் நொடிகளைப் பரப்புவது; பரம துர்கந்தமாகவும் இருப்பது. அதை உடனேயே தேய்த்து அலம்பி சுத்தம் செய்வோம். ஆனால் கோவின் மலமோ மற்ற மலங்களையும், ஏனைய அசுத்தங்களையும் போக்குவதாக இருக்கிறது; நோய்க்கிருமிகளை அழிப்பதாக இருக்கிறது. அது துர்கந்தமும் வீசுவதில்லை. அதற்குப் பவித்ரமான, ஆரோக்யமான ஒரு தினுஸு மணம் இருக்கிறது.
மற்ற பிராணிகளின் மலம் புனிதத்தன்மையைக் கெடுத்து அசுத்தி செய்வதாயிருக்க,கோமயம் மட்டும் அசுத்தியை நீக்கிப் புனிதம் செய்வதாக இருக்கிறது. சாப்பிட்ட உச்சிஷ்டம் – எச்சில் என்பது – ஸுகாதாரப்படியும் அசுத்தம்; சாஸ்த்ரப்படியும் மடித்தப்பானது. அதன் அசுசியைப் போக்கிப் புனிதப் படுத்துவது கோமயம். அதனால்தான் எச்சிலிடுவதற்கு கோமயத்தை உபயோகிப்பது. பரம சுத்தத்தை க்ருஹத்துக்கு வரவழைப்பதற்காகவே, ஆரோக்யலக்ஷ்மியையும் ஸௌமங்கல்ய லக்ஷ்மியையும் நம் க்ருஹத்தில் குடிகொள்ளப் பண்ணுவதற்காக வாசலில் கோலம் போடும் இடத்தில் சாணம் தெளிப்பதும், வீட்டைச் சாணியால் மெழுகுவதும். இப்போது பாஷனின் பெயரில் இந்தப் பழக்கங்கள் எல்லாம் போய், எங்கே பார்த்தாலும் infection, pollution என்று ஆகியிருக்கிறது.

கோ
மயம் எவ்வளவு புனிதமாக நினைக்கப்படுகிறது என்பதற்கு அநேகச் சான்றுகள் உண்டு. 
உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். ஸந்நியாசிக்கு அக்னி ஸம்பந்தம் கூடாது என்ற விதியை ரொம்பவும் கண்டிப்பாகப் பின்பற்றுகிற ஸாதுக்கள் உண்டு. அவர்கள் அக்னி மூட்டிச் சமைத்த ஆஹாரம் எதையும் புஜிக்க மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒரு பிரிவினர் விறகு, கரி மூட்டாமல் முழுக்கவும் பசுஞ்சாணி விரட்டியிலேயே அக்னி மூட்டி அதிலே சமைத்ததென்றால் அப்போது தோஷமில்லை என்று அதை புஜிக்கிற வழக்கத்தைக் கைக்கொண்டிருக்கிறார்கள். பசுவுக்கு இருக்கப்பட்ட புனிதத்தன்மையால்தான் இப்படி அதன் மலத்துக்குங்கூடப் பெருமை இருக்கிறது
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
“🐄Cow is just an animal like a hen or goat... then why is it revered and why one should not kill and eat it?”

🐄Cow is also an animal, but... a cow has many specialities that no other animal (not even human beings) has in this world.

This is the reason that Hindus consider cow as ‘mother’ after their own mother, and pray to the cow with respect calling it “go-matha”.

These are some truths about go-matha.🐄

·🐄  If a cow eats something poisonous by mistake, and we drink its milk, will we fall ill? To find out, one cow was regularly fed a particular quantity of a poison every day. 

After 24 hours, its blood, urine, dung and milk were tested in a lab to check where the poison could be found. In this way, the tests were done not for 1 or 2 days, but continuously for 90 days in All India Institute of Medical Sciences (AIIMS) New Delhi. The researcher did not find any trace of poison in milk, blood, urine or dung of that cow.🐄

Then where did this poison fed for 90 days go? Just like Lord Shiva held poison in his throat, the go-matha hid the entire poison in her throat. This is a special quality that no other animal has.🐄

·🐄  This is the only creature that inhales oxygen and also exhales oxygen.

·🐄 Cow milk has the quality of countering poison.

·  There are diseases that medical science has not yet understood; urine of Go-matha has the power to cure them.🐄

·🐄 If cow-ghee and rice are cooked together, two powerful gases called ethylene-oxide, propylene-oxide are released. Propylene-oxide is the best gas used for creating artificial rain.

·🐄  Cow-urine is the world’s best killer of microbes

· 🐄With medicines  made using cow dung and cow urine, stomach-related ailments can be cured.  

·🐄 We can save ourselves from radio-waves by plastering the home floors and area outside home with cow-dung.

·🐄 Cow-dung has the power to destroy the microbes causing cholera.


· If 10 grams of cow-ghee is put in fire (yagnya), 1 ton of oxygen is generated.🐄

1 comment:

  1. எங்களிடம் தெய்வீக தன்மையும் மருத்துவ குணங்களும் நிறைந்த தூய காராம் பசு மற்றும் கீழ்காணும் காராம் பசு பொருட்கள் கிடைக்கும். Courier சர்வீஸ் மூலம் தங்களது இல்லங்களுக்கே நேரடியாக Door Delivery செய்து தரப்படும். மேலும் விவரங்களுக்கு 8973355333 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

    காராம் பசு நெய்,
    காராம் பசு திருநீறு / விபூதி,
    காராம் பசு பால்,
    காராம் பசு பஞ்ச காவியம்,
    காராம் பசு வரட்டி,
    காராம் பசு கோமியம் மற்றும்
    காராம் பசு கன்று மாடுகள், சினை மாடுகள், கன்று குட்டிகள் கிடைக்கும்.

    தெய்வீக தன்மை வாய்ந்த காராம் பசு வை பற்றி மேலும் தெரிந்து கொள்ள 8973355333 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.

    #karampasu #karampasughee #a2ghee #kaarampasu #காராம்பசு

    ReplyDelete