Monday, July 6, 2015

முன்னோர்கள் விஞ்ஞானம்

மூட நம்பிக்கை இல்லையென்று இன்று விஞ்ஞானம் சொல்லுகிறது... 
வீடுகளிலும், பெரும்பாலும் வாகனங்களுக்கு முன்னாலும் எலுமிச்சம்பழம், மிளகாய் கட்டும் பழக்கம் நம்மிடம் இருக்கின்றது.
இன்று பலபேர் நமது நல்வாழ்க்கைக்கு இதுவே காரணம் என்று எண்ணுகிறார்கள்.. நமது நல்வாழ்க்கைக்கு இவை ஒரு காரணியே தவிர கரணம் இல்லை என்பது புரிந்தால் போதும்...
எலுமிச்சம் பழத்தில் உள்ள சிட்ரோனிக் அமில்கா (Cidronic amilga) என்னும் அமிலம்; 
மிளகாயில் உள்ள பென்னியோசிட் (Benniyocid) என்னும் காரத்துடன் இரசாயனப் பகுப்பாகி; 
மிதீரியட் (methiriyed) என்னும் ஒருவகை உந்து வாயுவை வெளியிடுகிறது.
அந்த வாயு வீடுகளின் உள்ளே இருப்பவர்கள் சுவாசிப்பதால் அவர்களின் மூளையில் ஒரு இரசாயனமாற்றத்தை உண்டுபண்ணி அவர்களின் மந்த நிலையை போக்குகிறது. இந்த வாயுவின் காரத்தன்மை மூளையில் ஒரு கிளர்ச்சியை உண்டுபண்ணி தூக்கத்தை தவிர்த்து உற்ச்சாகத்தை தூண்டுகிறது. இதற்காகவே நமது முன்னோர்கள் இதனை நமது வீடுகளில் கட்டி தொங்கவிட்டனர். பின்பு இதை என்னவென்று தெரியாமல் ஒரு சடங்காக ஆக்கிவிட்டார்கள்.
நித்திரையை போக்கி உற்ச்சாகத்தை குடுப்பதால் இதை இரவு பயணத்தின் போது பயணத்தின் காவலனோ... அல்லது வழிகாட்டியோ அல்லது ஓட்டுனரோ தூங்காமல் இருக்க இவை பயணத்துடன் எடுத்துசெல்லப்பட்டது..
பின்பு இதை வாகனங்களில் கட்டி பயன்படுத்தினர். 
அந்த வாயுவை வாகனத்தின் போனட்டில் இருந்து ஸ்டியரிங் வரை வாகனத்தின் உட்பகுதிவரை கடத்துகிறது, அந்த வாயுவானது ஓட்டுனரை நித்திரை கொள்ளாமலும், உற்சாகமாகவும் இருக்கச் செய்கிறது.
இதில் மிக முக்கியமானதும் ஆச்சரியமானதும் என்னவென்றால்; ஒரு வாரம் மட்டுமே இந்த வாயு மேற்சொன்ன இரசாயனப் பகுப்பால் கிடைக்கப்பெறும். அதனால்தான் வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் ஏற்க்கனவே கட்டப்பட்டதை மாற்றிவிட்டு புதிதாகக் கட்டப்படுகின்றது.
மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இதனைச் செய்யக்காரணம்; பூமியானது சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் இடையில் வடமத்திய ரேகையில் கடக்கக் கோட்டுக்கு தெற்கே 5 டிகிரி மேல்நோக்கி ஏறி, 3 டிகிரி கீழ்நோக்கி இறங்குவதால் இந்த இரசாயன பகுப்பு அதிகம் நடக்கிறது என்பது ஐதீகம் !!
பாருங்கள் எம் முன்னோர்கள் எவ்வளவு தூரம் விஞ்ஞானத்துடன் அன்றே ஒன்றியிருக்கிரார்கள் என்று
சித்தர்கள் - Tamil Scientists இன் புகைப்படம்.

No comments:

Post a Comment