Sunday, February 21, 2016

காவி

காவி என்பதை நம் முன்னோர் துறவற நிறமாக வைத்தனர்..இல்லறத்தை துறந்து துறவறம் செல்வோர் அனியவேண்டியது...காட்டில் செல்லும்போதும்,பல இடங்களில் உறங்கும் போதும் பல புழுப்பூச்சிகள் கடிக்கும்,காவி நிறம் அதை அண்டவிடாது தடுக்கும் .வெள்ளை வேட்டியை செம்மண்னில் நனைத்து கட்டுவதே காவி ..காவி கட்டுவோர் இல்லறம் துறந்தார் என்று சிவாகமத்தில் கூறப்படுகிறது ..ஆகையால் துறவற நெறியில் உள்ளவர்கள் மட்டுமே காவி உடுத்தல் வேண்டும்.
++++++++++++++++++++++++++++++++++++
மஞ்சணத்தி மரத்தின் பட்டயை
பக்குவப்படுத்தி அதனோடு ஆகமல மரத்தின்
கட்டைகளை துண்டுகளாக்கி சுடு நீரில்
போட்டு அதனுடன் அதிமதுரம், கொடிவேலி
பருத்தி இலையும் சேர்த்து பின் வெண்மை நிற
துணியை அந்த சுடு நீரில் மூழ்கி துவைத்து
எடுத்தால் வெண் துணி காவி நிறத்தில்
இருக்கும். முழுதும் காய வைத்து எடுத்தால்
காவி உடையாகிவிடும் ! இந்த ஆடையையே
அணிந்தார்கள் ! இந்த காவி நிற ஆடையை
தழுவி வரும் உயிர்த்துவமான காற்றை
மூச்சுக் குழாய் வழியாக உள் இழுத்து தன்
மூச்சை நிலை நிறுத்தி தான் கற்க வேண்டிய
கலையைக் கற்றார்கள் !
ஆனால் இது தெரியாமல் காவி என்றால்
துறவு என்றாகிவிட்டது !
காவி உடை எதற்கு , ஏன் என்று தெரியாமல்
போனது​

No comments:

Post a Comment