Saturday, June 11, 2016

தலை முடி / மயிர்

தாந்திரீக முறை தலை முடி பற்றியது:

⭐பொதுவாக ஆண்களும் சரி பெண்களும் சரி தலை முடிக்கு முக்கியத்துவம் அதிகம் தருகின்றனர் எல்லாம் தலையில் இருக்கும் வரை மட்டுமே.

👉முடிக்கு ஈர்ப்பு ஆற்றல் அதிகம்.

🌹பொதுவாக தலை முடிக்கு பிரபஞ்ச ஆற்றலை இழுக்கும் சக்தி அதிகம் அதனால் தான் முனிவர்கள் முடியை திருத்தம் செய்வதில்லை. அவர்கள் கொண்டை வலைசுற்றி அதன் நடுவே தாமிர கம்பி சொருகிவைத்து ஆற்றலை பெறுகிறார்கள்.

👉ஆண்கள் முடி திருத்தம் செய்வதால் அச்சக்தி குறைவாக பெறுகிறார்கள் ஆனால் பெண்கள் கூந்தலை பராமரிப்பு செய்வதால் ஆற்றல் அதிகம் பெறுகிறார்கள். அதனால் அவர்களுக்கு உள்ளுணர்வு அதிகம் வேலை செய்யும்.

🌻கூந்தலை பராமரிப்பு சிறந்தவள் தான் திரெளபதி அதனால் கூந்தலுக்கு எதை சேர்த்தால் இந்த ஆற்றல் அதிகமாகும் என அவள் அறிவாள்.

🌻சூதாட்டமண்டபத்தில் அதர்மம் நிகழும் என்பதை தனது உள்ளுணர்வால் அறிந்து தடுக்கமுயல்வாள் ஆனால் முடியாது போகும் அது பாரத கதை.

🌻அவள் பிரபஞ்ச சக்தியை அதிகம்பெற உதவியது அவளது கூந்தல் தான். பொதுவாக பெண்களுக்கு இந்த சக்தி கிடைப்பது கூந்தல் என்கிற தலைமுடியால் தான்.

🌻ஆணோ பெண்ணோ தலை முடி வைத்து அவர்களை வசியம் செய்யமுடியும். இதில் அதிகம் சக்தி வாய்ந்தது பெண்ணின் முடிதான்.

🔥சிவபெருமான் அடியாராக வந்து பெண்ணின் கூந்தலை கேட்ட கதை உள்ளது அதை சூட்சமமாக ஆராயவும்.

🔥கூந்தலில் இயற்க்கையாக வாசனையுள்ளதா என கதை ஒன்று உள்ளது அதன் சூட்சம விசயம் அறியவும்.

🔥நாம் வணங்கும்,கிருஷ்ணர், சிவன்,இயேசு,நபிகள் ஏன் முடி அதிகம் வைத்துள்ளனர் என ஆராயவும்.

🔥கூந்தல் நீளமுள்ள பெண்கள் குடும்பத்தை வளர்ப்பார்கள் என்பதின் சூட்சமம் அறியவும்.

👉குறிப்பிட்ட பெண் முடியை வைத்து மாந்திரீக முறைபடி இறந்த ஒரு  எலும்பு கூட்டை எடுத்து அந்த ஆன்மாவை அடிமை ஆக்கலாம் .
மேலும் பெண்கள் முடியை எடுத்து சில குறி சொல்பவர்கள் அந்த பெண்ணை  சில ஆத்மாக்களுக்கு ஆகுதியாக தருகிறார்கள்.
இதனால் தான் பெரியவர்கள் தலை சீவிய முடியை மண்ணுக்குள் போட சொன்னார்கள், அது யாரு கைக்கும் கிடைக்க கூடாது என்பதற்காக தான்.

🌹(பெண்ணின்) தலை மயிருக்கு உயிர்சக்தி அதிகம், அதனால் தான் மயிர் இழையில் உயிர் வந்தது (சக்தி கிடைத்தது) என்பார்கள்.

👉இதை இப்பொழுது மயிர் இழையில் உயிர் தப்பியது என்பார்கள்.

🌻பொதுவாக ஒரு அரசன் போர் தொடுத்து போய் வெற்றி கொள்ளும்போது அந்த நாட்டு ராணியை அபகரிப்பான் அல்லது கொன்று விடுவான் ஏனெனில் அவள் விலை உயர்ந்த வாசனை திரவியங்கள் அணிந்து பிரபஞ்ச ஆண்டனாவை சரியாக வைத்திருப்பாள் அதாவது கூந்தல் .

🌻போரில் தோற்ற ராணி தனது சிகைகூந்தலை அறுத்து தந்துவிடவேண்டும் இல்லை என்றால் அறுத்து எடுத்து கொள்ளபடும்.

👌🏻மயிர்முடி என்பது விசேசமான ஒரு வஸ்து கவரிமான் முடி  , மயில் முடி, யானை முடி இவற்றையும் ஆய்வில் எடுத்து பாருங்கள் .

👉நாம் திருப்பதி சென்று முடிகாணிக்கை கொடுக்கிறோமே, அதை ஒரு குரூப் டெண்டர் எடுக்கிறது. அதை எடுத்து என்ன செய்கிறார்கள் என விசாரியுங்கள்.

🤔கடைசியாக டெண்டர் மூன்று கோடி என கேள்வி பட்டேன்.

👉அப்புறம் மயிர் என்பது கெட்டவார்த்தை அல்ல அது தமிழ் சொல் தான். உயிருக்கு மயிர் தொடர்பு உள்ளதால் அது கொடுக்கபட்டது.

🙏முடியை பற்றி நிறைய உள்ளது, சகோதர சகோதரிகளுக்கு நான் சொல்வது ஒன்று தான் முடியை சாதாரண மாக நினைத்து கீழே போட வேண்டாம்.

👉மேற்கண்டவை சித்தர் நூல்கள், புராணங்கள், புறநானூறு போன்றவைகளில் இருந்து சூட்சமமாக விசயம்.

No comments:

Post a Comment